எங்கள் ஊர் குளம் முழுவதும் தாமரை இலைகள் பரவி கிடந்தது. முதல் நாள் மழை மறுநாள் மானம் (வானம்) வெக்காளிக்க குளம் பக்கம் நடந்து சென்றேன்.
குளம் முழுவதும் தாமரை இலைகள் மீது தண்ணீர் துளிகள் முத்து முத்தாய் ஒன்று இரண்டாக காற்றின் அசைவில் உருண்டோடின.
பசுமையில் பாதரசதுளிகளாய் உருண்டோடிய நீர்துளிகள் அழகு.
No comments:
Post a Comment