Sunday, November 29, 2015

கவிஞர் மு.மேத்தாவின் ஆகாயத்திற்கு அடுத்தவீடு


ஒருவருக்கும் தெரியாமல்
ரகசியமாய்
உன்னிடம்  கொண்டுவந்து
சேர்த்துவிடும் என்னை
இந்தக் கடிதம்!

எந்த ஊரில்
இருந்தாலென்ன...
என்கடிதத்தை நீ
தொட்டவுடன்
சிலிர்க்கும் எனக்கு!

எழுத்துக்களைப்
பார்க்கிறாய் நீ
இந்த
எழுத்துக்களின் வழியே
உன்னை
எட்டிப் பார்க்கிறேன் நான்!

காற்று உன் வீட்டுக்
கதவுளை
அசைக்கும்போதெல்லாம்
நினைவுப்படுத்திக் கொள்...
உன் இதயத்தை
அசைக்க நான்
எடுத்த முயற்சிகளை!

ஒவ்வொரு தடவையும்
நீ பார்த்த
பார்வைகளைத்
தொகுத்து வைத்திருக்கிறேன்
ஆல்பமாக

வாரந்தோறும்
வந்துபோகின்றன
ஞாயிற்றுக்கிழமைகள்...
வருவாயா நீ?

பூங்கொத்து வேண்டாம்
வாடாமல் இருக்கும்
உன் வார்த்தைகள்...

புகை வண்டியில் உன்னை
வழியனுப்பும்போது
கேட்பேன்.
“இப்போதாவது
என்னை
என்னிடம் விட்டுச் செல்!”

அவசியம் அனுப்பிவை
உன் திருமண
அழைப்பிதழை...
பாிசு விழுந்தது
யாருக்கென்று
பார்த்துக் கொள்கிறேன்!

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails