Wednesday, December 23, 2015

சீனத் தத்துவ ஞாநி லாவோ ட்சு வார்தைகள்



இந்த உலகத்தில் கடினமான விசயங்கள்
எளிதானவற்றிலிருந்து தொடங்குகின்றன.

இந்த உலகத்தில் பெரிய விசயங்கள்
சிறியவற்றிலிருந்து தொடங்குகின்றன.

ஒரு மனிதன் கட்டிப்பிடிக்கிற அளவு மரம்
மென்மையான குருத்திலிருந்து கிளம்புகிறது.

ஒன்பது மாடிக் கோபுரம்
சிறிய மண் குவியலிலிருந்து எழும்புகிறது.

ஆயிரம் மைல் பயணம்
காலடி நிலத்திலிருந்து தொடங்குகிறது.

எனவே  பெரிய விசயங்களை
ஞாநி  ஒருபோதும் செய்யமுயல்வதில்லை

அதனாலேயே,  பெரிய விசயங்களை
அவன் எப்போதும் சாதிக்க முடிகிறது.

2 comments:

ராஜ நடராஜன் said...

மோடிகிட்ட சொல்லி சிபிஐ அனுப்பி இந்த படங்கள் எங்கே சுடப்படுகின்றன எனப்தை நான் கண்டு பிடிச்சாகனுமே!

http://thavaru.blogspot.com/ said...

மோடிகிட்ட போகவேணாம் ராஜநட...கூகுள்ஆண்டவரே சொல்லிபுடுவாரே..

LinkWithin

Related Posts with Thumbnails