Tuesday, December 01, 2015

மாஸ்டர் ஆப் வாய்ஸ் E.M.நாகூர் ஹனீபா

சில நாட்களுக்கு முன் “ இறைவனிடம் கையேந்துங்கள்”  ஹனீபா பாடலைக் கேட்டேன்.

காந்தக் குரலோன். அடுத்த அடுத்த நாட்களில் திரும்ப திரும்ப மனதில் ஓடிக்கொண்டேயிருந்தது.

வீட்டில் இருக்கும்பொழுதும் முணுமுணுத்தபடியே இருந்தேன்.

சில வருடங்களுக்கு முன்னால் எங்கள் ஊரில் முஸ்லீம் அன்பர்கள் திருமணம் என்றால் இவருடைய பாடல்கள் முதல் நாளிலிருந்தே  ஒலிக்க ஆரம்பித்துவிடும்.

இப்பொழுது  யாரும் திருமணங்களுக்கு பாடல்கள் போடுவதில்லை.
காலம் மாற்றங்களில் கரைந்துப்போன சடங்காய்  அவருடைய குரலையும் கேட்டு நாட்களாகிவிட்டது.

தனிமையில் இருந்துகொண்டு தூரத்தில் அமர்ந்து கேட்கையில்  ஆகா ..அற்புதம் தான்  இவருடைய பாடல்கள்.

இசையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

மிகவும் பிடித்தப்பாடல்கள்

இறைவனிடம் கையேந்துங்கள்..


அருள்மழை பொழிவாய் ரஹ்மானே...




5 comments:

Nagendra Bharathi said...

அருமை

ராஜ நடராஜன் said...

தமிழில் டி.எம்.எஸ்க்கு அடுத்த ஒரு கம்பீரமான குரல் நாகூர் ஹனிபாவுடையது.

http://thavaru.blogspot.com/ said...

நன்றிங்க பாரதி

http://thavaru.blogspot.com/ said...

உண்மை தான் ராஜ நட..:)

balaamagi said...

அழகாக சொல்லியுள்ளீர்,,,, இசையில் வாழ்ந்துக்கொண்டு இருப்பவர்கள்,

தொடர்கிறேன்.

LinkWithin

Related Posts with Thumbnails