Wednesday, March 18, 2015

வருத்தம்

இன்று காலை செய்திதாளில் படித்த  வன்புணர்ச்சி செய்திகள் மனதை மிகவும் வருத்தம் அடைய செய்தன.

சமுதாயத்தின் போக்கு மிகவும் மாறிவிட்ட சூழலில் நம்முடைய பாதுகாப்பை நாம் தான் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

மனிதம் குறைந்துவிட்டது....செத்துவிடவில்லை.

ஒருவிதமான எச்சரிக்கை உணர்வுடனே வாழவேண்டிய வாழ்க்கை சூழல் என்பது  இச்சமுதாயத்தின்  அசிங்கமான பகுதி.

நாம் நம்மை தற்காத்து கொள்ள பல வழிகளிலும் நம்மை மேம்படுத்தி ஒவ்வொரு செயலிலும் நம்முடைய பாதுகாப்பை  நிச்சயப்படுத்திகொண்டு செயல்படவேண்டும்.

காசுக்கான வாழ்க்கையில் நிறைய வாழ்க்கை சுகங்களை இழந்துவிட்ட நாம்  தரம் தாழ்ந்த சமுதாயகயவர்களாலும் நம் நிம்மதியை நிறையவே தொலைக்கிறோம்.

சமுதாயத்தில் நாமும் ஓர் அங்கம் நாம் சரியாய் நடைப்பயில பிறர் அதை பாதையாய் பின்பற்றுவார்கள் நாமும் முயற்சி செய்வோம்.

LinkWithin

Related Posts with Thumbnails