வழக்கமாய் கடை மூடும் நேரம் வரவில்லை ஒரு மணிநேரம் முன்னதாய் கடை மூட ..மனதில் எங்கு போகலாம் என்று பல பாதைகள் மனதில் வந்து போனது.
அன்று சித்ரா பெளா்ணமி
வண்டி அருந்தவபுரம் அரசப்பட்டு சாலையில் ஊர்ந்தது. பௌர்ணமி நிலா காய்ந்தது சாலையின் இருமங்கிலும் வயல்வெளி பரந்து கிடக்க பெளா்ணமி வெளிச்சம் தனிமை தழுவும் தென்றல் விளக்கொளி இல்லா இருசக்கர வாகனத்தின் பயணம் ஆனந்தம்.
வண்டி முன்னேறியது.
மனம் மகிழ்ந்தது இயற்கைக்கு நன்றி சொல்லியது .