Friday, October 30, 2015

எதிர்கால பயம்

பள்ளிவிழா  மரக்கன்றுகள் இலவசமாய்வழங்கினார்கள் மரக்கன்றுகளை மக்கள் ஆர்வமுடன் வாங்கவேண்டும் என்பதற்காகவே பள்ளிதலைமையாசிரியர் பாடுப்பட்டுசெம்மரக்கன்றுகள்சந்தனமரக்கன்றுகள் தருவித்திருந்தார்.

மரக்கன்றுகளை வாங்கியவர்களில் ஒருவனுக்கு ஏனோ  ஒரு எண்ணம் உதித்தது.



மரக்கன்றை நாம் நட்டு வளர்த்துவிடலாம். பதினைந்து வருடம்  கழித்து பல லட்சம் விலைபோகும் மரங்கள் இவை.
பயன் தரும் நேரத்தில் எவனாவது வெட்டி சென்றால் என்ன செய்வது?

இந்த கன்றை வைத்து கண்முழித்தா பாதுகாக்க முடியும் மனம் தன்போக்கில் ஒரு வாதம் வைக்க..

போடா…மடபய மவனே..போயி குழி தோண்டு செடிய வையி..அப்புறம் பாத்துகலாம் இன்னொரு வாதம்.

வாங்கியாச்சு வைச்சுதானே ஆகனும் என்று தனக்குள் சொல்லி..

கொல்லை இடம் தேடி குழிபறித்து நட்டான்.

செடி மண்ணில் வேர்ஊன்றி தன் வளர்ச்சிக்காக காத்துகிடக்க…

இரு நாட்கள் கழித்து இணையம் நோண்டுகையில் ஒரு செய்தி.

கோவையில்கொல்லையில் வளர்த்த சந்தனமரம் திருட்டு  என்று

செய்தியின் இணைப்புக்கான URL


அட பாவியலா..இவன் நினைச்சது சரியாப்போச்சே…

இனி பயப்புட்டு என்ன செய்யப்போறோம் .

மொதல்ல மரம் வளர்ப்போம்..அப்புறம் பாதுகாப்போம் சொல்லிட்டு ..

தன் வேலையை  பார்க்க ஆரம்பித்தான்.


Wednesday, October 28, 2015

முகம் மாறிய சாலை

NH 67

கருமேகங்கள் சூழ்ந்திருந்தன லேசாய் மழை துாரல் ஆரம்பிக்க  ..

போகலாமா? வேண்டாமா...மனதின் போராட்டம்.

ஆங்...அதான் வழி நெடுக மரமா இருக்குண்ணா..அப்படியே ஒண்டி ஒண்டிக்கிட்டே ஊர் போய் சேரலாம்.

கௌம்புங்க.. நண்பர் விரட்டினார்.

பசுமையான மரக்குகை முன்விரிய மழைதுாரல்கள் இடைய வண்டி பயணித்தது.
இந்தியா கடன்காரர்களின் உலகம் ஆகிவிட்டது. என்னையும் சேர்த்துதான்.

கடனில் ஓடும் இருசக்கரவாகனங்கள் நாற்சக்கர வாகனங்களின் பெருக்கம்
சாலை மூச்சு முட்டியது.

தங்கநாற்கர சாலை விரிவுபடுத்தும் திட்டத்தில்  NH67 சிக்கிக்கொள்ள கணக்கெடுத்தார்கள் .

எத்தனை தலைமுறைகளை பார்த்த மரங்கள் நிழல் பரப்பின பயன் தந்தன உருப்படாத சாலை விரிவாக்க திட்டத்தில் மண்ணில் வீழ்ந்தன.

ஒரே நாளில்  முழுமரமும் அடியோடு வெட்டப்பட்டு வழிநெடுகலும் வீழ்ந்து கிடக்க பதைத்த மனங்களில் என் மனமும் ஒன்று.

மரம் வெட்டாது திட்டங்கள் போடமாட்டார்களா..?

வெட்டப்பட்ட மரங்கள் ஏற்றியவுடன்   வெறிச்சோடி கிடந்த சாலையின் முகம் மாறியது.

பயணத்தின் இடையே இளைப்பாறி செல்ல நிழல் தந்த மரங்கள் காணாமல் போக வெயிலே நிழலாய் பயணங்கள் தொடரும்.


Monday, October 26, 2015

முடியும் நம்பு முடியும்

உலகம் சுற்றும் டீக்கடைக்காரர் தலைப்பில்  யூடியூப் காணொளி கண்டேன்.

என்னையும் யோசிக்க வைத்தது. தேவை  நம்பிக்கை மனது முடியும்  என்று நம்பு முடியும் என்று சொல்ல வைத்தது.

நீங்களும் பாருங்க...



Saturday, October 24, 2015

சட்டை

தீபாவளி நெருங்கிவிட்டது.

வருடம் வருடம் தீபாவளி சமயத்தில் மட்டும் சட்டை பற்றிய குழப்பங்கள் நிறையவே வரும்.

குறைந்த விலையில் தரமான சட்டை எங்கு கிடைக்கும் ?

இதுதான் குறிக்கோள்.

ரோட்டில்  வண்ணசட்டைகளை டூ வீலர் வியாபாாி விற்றுசெல்ல மாத்துக்கு போட்டுகலாம்  என்று அவரிடம் பேரம் பேசி வாங்கிய சட்டையின் விலை ரூபாய் ஒரு நுாறு மட்டும்  இரண்டு வருடங்கள் மேலாகியும் இன்னமும் உழைப்பில் இருக்கிறது.

இதெல்லாம் போட்ட சமுதாயத்தில் மதிப்பு கிடையாதுப்பா...

பெரிய  கடையில போயி பெரிய பிராண்ட் சட்டை எடுத்தா மதிப்புன்னு சொன்னாங்க...

பெரிய பிராண்ட் சட்டை பற்றிய   உண்மைகளை இணையத்தில் தேடினால் அப்படி இப்படி செலவெல்லாம் சேத்தாலும்  ரூபாய் 500 க்கு மிகையாகது  ரூ 1700 கொடுத்து சட்டை வாங்கினீங்கன்னா ரூ 500 போக பாக்கி பணம்  எதுக்கு கொடுக்கிறீங்க நீங்க  புரிச்சிக்க வேண்டியதுதான் சொல்ல..

குழப்பம்...விசாரிக்கிறேன்..விசாரிக்கிறேன்.

ஆனாலும் வியாபார  தத்திரங்களின் கவர்ச்சி பிராண்ட் மனதை ஈர்க்கிறது.

பெரியகடைகளில் நிற்கும்  பல்லாயிர மனிதர்களில் ஒருவனாய்  கண்கூசும் விளக்கொளியில்  எனக்கான  சட்டைகளை  தேடுகிறேன்.

பிடித்த சட்டை வாங்கி கடையின் படிகளை விட்டு இறங்கி  தெருவை கடக்க
தெருவியாபாரி சட்டை விற்கிறார் ...

லைட் செலவு இல்லீங்கோ...

விளம்பர செலவு இல்லீங்கோ....

ஏ.சி. செலவு இல்லீங்கோ...

ஆட் செலவு இல்லீங்கோ...

அதனால சட்டையின் விலை  200 தாங்கோ...

பல்வேறு நிறங்களில் அளவுகளில் சட்டை அடுக்கி  வைக்கப்பட்டிருக்க...

நான் வாங்கிய சட்டை என்னை பார்த்து சிரித்தது.



LinkWithin

Related Posts with Thumbnails