நண்பரை த்தொடர்புகொள்ள கைப்பேசியில் அழைத்தேன் அவர்
எடுக்க நேரமாகியது பாடல் ஆரம்பமானது.
கப்பலுக்கு ப்போன மச்சான்
கன்னுரெண்டும்
ஆச மச்சான்
எப்பதான்
வருவிங்க எதிர்பார்க்கிறேன்.
நாலுவரிகளில்
முடிந்து திரும்பவும் ஒலித்தது தொடர்பு துண்டித்து ப்போனது ஆனால் பாடல் மட்டும்
மனதில் ஒலித்தபடியே இருக்கஅறியும் ஆவலில் இணையதேடலில் வந்துவிழுந்த காணொளி திரும்பத் திரும்ப பார்த்தாலும் அலுக்கவில்லை .
காசுக்கான
ஓட்டத்தில் சொந்தபந்தங்களை விட்டுகட்டிய மனைவியை விட்டு தூரத்தில் பணிபுரியும்
யாவருக்கும் பொருந்தும் இப்பாடல்.
நாகூர்
சலீம் இயற்றிய இப்பாடல் எப்பொழுதும்
கேட்கக்கூடிய எவர்கிரீன் பாடல்தான்.