Friday, January 29, 2016

நான்கு நாட்களை திரும்பிப்பார்கையில்...

மாலை வெயில் வயலில் விளைந்த பொன்நிறகதிர்களின் வழியே ஊடுருவியது மெல்லிய வசந்தகாற்றின் தாலாட்டில்  நெற்மணிகதிர்கள்  தலையாட்டல் மகிழ்ச்சியை க் கொடுத்தது.

அடுத்த வாரத்தில் அறுவடைக்குத் தயாராக நின்ற நெற்கதிர்கள் நிலையாமை அழகை க்கூட்டியது .

மஞ்சள் நிறத்தில் ரோட்டின் ஓரத்தில் சிதறிக்கிடந்த காய்கறி பிரியாணி  நாய்கள் சீண்டவில்லை பார்த்த காக்கை கூவி அழைத்தது பத்து காக்கை பறந்து வந்து  கரைந்தபடியே கொத்தி தின்ற அழகு  மனதை சந்தோசப்படுத்தியது.

எதிர்பாரா  வேலை விடுமுறை  ரொம்பநாள் நினைவில் நின்ற மாலைநேர ஏரி கரையோர நடை  இரண்டு நாட்களுக்கு முன் நிறைவேறியது. ஒரு பக்கம் மறையும் மாலை சூரியன் மறுபக்கம்  பரந்த தண்ணீர் பரப்பு அனுபவிக்க சுகம்.

காசை ச்சேகரித்து வீடு கட்டலாம் என்று சொல்ல கையில் வைத்துக்கொண்டு தொடங்க முடியாது தொடங்கு பார்த்துக்கொள்ளலாம்  என்று சுற்றமும் நட்பும் கொடுத்த தையரித்தில் போடப்பட்ட  பூமி பூசை ஒரு பக்கம் ஆழ்ந்த  சிந்தனைகளை உண்டுபண்ணினாலும் இன்னொரு பக்கம் செய்து விட  வேண்டிய கட்டாயத்தையும் உணர்த்த க்காலத்தின் கையில் வீடு.

மரங்களின் இலைகள் கொட்ட ஆரம்பிக்க புதிய இலைகளின் வரவிற்காக காத்துகிடக்கும் நெஞ்சம்.

நான்கு நாட்களாய் திரும்பி பார்க்கையில் எழுத த்தோன்றியது இவைதான்.
மாலை நேர நடக்கையில்  ஏரிக்கரையோரம் சுட்டது.





2 comments:

Nagendra Bharathi said...

அருமை

http://thavaru.blogspot.com/ said...

வாங்க பாரதி...நன்றி

LinkWithin

Related Posts with Thumbnails