வேனிற்கால வருகை காலையில் சிறிது குளிருடன் உடலை
வருடிய மெல்லிய தென்றல். புங்கை மரங்கள் இலையுதிர்த்து புதிய பசுமையை உண்டாக்கத் தொடங்கின.
காலைவெயிலில் எதிரொலித்த பசுமை கண்களுக்கு விருந்து.
பூக்கள் புதிதாய் பூக்க தொடங்கிய மரமொன்றில்
முழுகருமை நீண்ட மூக்கு கைக்குள் அடங்கிவிடும் உருவத்தில் கருப்பு தேன்சிட்டு.
கிளைக்கு க்கிளைக்கு தாவுதலில் தொடங்கிய நடனம்
பூக்களில் தன் கூர்மூக்கை உள்நுழைத்து வெளியே எடுக்கும் வரை இடைவெளிதிரும்பவும்
தத்தி த்தத்தி தாவும் நடனம்.
நேரம் போனது வேறு வேலை அழைத்தது பிரியமனமில்லாமல்
பிரித்தேன்.
கையில் இருந்த மொபைல் போனில் சுட்டது .
No comments:
Post a Comment