Friday, March 04, 2016

கண்ண கட்டுதுரா சாமீ..!! - தமிழக அரசியல்

மே 16

தேர்தல் தேதி அறிவித்தாகி விட்டது.

பத்திரிக்கை ஊடகங்கள்  இணையவழி செய்திகளின் பயணித்தலில் தமிழக அரசியல் பொதுமக்களின் மனதில் பலவிதமான உணர்வுகளை  க்கிளப்பிவிட்டு கோடை வெயிலின் தாக்கத்தை முன் கூட்டியே கொண்டுவந்துள்ளது.

நண்பர்களுடைய வாத பிரதிவாதங்கள் படிக்கும் பத்திரிகைகளுடைய தாக்கம் தெரிகிறது.

அரசியல் கட்சிகள் பக்கம் சார்ந்த  பத்திரிக்கைகளின்  கருத்துகளால் குழப்பம் குழப்பம்.

இவற்றையெல்லாம் மீறி விசயகாந்த் என்ன முடிவு செஞ்சாரு..என்ன முடிவு செய்ய போறாரு..எப்பா கண்ண கட்டுதுறா சாமீ..!!

அஇஅதிமுக  மௌனம்  தலைமையின் அதிரடி கட்சியை கலகலப்பாக்க...

பாமக விளம்பர டிரெண்ட்  திமுக- வின்  விளம்பர டிரெண்டை மிஞ்சி விட்டது  என்னவோ உண்மை தான்.

விளம்பர மாற்றம் வாக்கு மாற்றம் ஆகுங்களா??

கணஜோராக வேட்பாளர் தேர்வில் திமுக... சனநாயக கட்சில்லே... வேட்பாளர்களை முடிவு செய்யறது தலைவரா...பொருளாரா ...பொருத்து தான் பார்க்கணுமுங்க..

தேர்தலுக்கு த்தேர்தல்   தேர்தல் சமயம் கும்பிட்டு ...ஜெயித்தவுடன் நாள் கணக்கில் நாம நிக்க தலைவரு ரொம்ப பிசி..வாக்களர் நாம எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோமுல்ல....இதெல்லாம் உங்களுக்கு த்தெரியாதது கெடையாது.

ரெண்டு பெரிய கட்சி வேணாமுன்னு சொன்னாலும் மாற்று எது ??!!  பல வினாக்களை த்தொக்கியே தமிழகம் நிற்கதியாய் நிற்கிறது.

திமுக குடும்ப அரசியல் லோக்கல் அரசியல் எப்பா நெனைக்கவே  முடியல...

அதிமுக தலைமையின் தொய்வு மன்னை வகையறாக்களின்  மறு வருகை உண்டு பண்ணிவிடுமோ பயமும் இருக்கவே...

மாற்று அரசியலுக்கான நேரம் தமிழகத்திற்கு வந்துவிட்டது உண்மைதான் . ஆனா  யாரு...

தொழிலாக மாறிய இன்றைய அரசியலில் பொது சனமாகிய நாம யார கொண்டுவரலாம்..!!??
 இந்த தேர்தல ஒரு வழி கிடைக்குமா பார்க்கலாம்.


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails