Monday, March 07, 2016

பந்தயக் குதிரைகளும் பக்குவப்படுத்தும் கலையும் - பகிர்வு

தேசிய புகழ்பெற்ற ’இந்தியன் டர்ஃப் இன்விடேஷன் கோப்பை’ குதிரைப் பந்தயங்களுக்காக இந்தியாவின் முக்கிய பந்தய மையங்களிலிருந்து வந்திருந்த குதிரைகள் ஊர் திரும்பிக் கொண்டிருக்கின்றன.
பெரும்பாலும், குதிரைப் பந்தயங்களில் ஜெயிக்கும் குதிரை களைப் பற்றித்தான் ஆர்வத்துடன் விசாரிக்கப்படுகின்றன. அந்த குதிரைகள் பந்தயத்துக்காக எப்படித் தயார் படுத்தப்படுகின்றன என்பதை கேட்டால் அது ஒரு பெரிய கலை என்கிறார்கள்.
இந்தியாவில் புணே, மும்பை, ஆமதாபாத், டெல்லி, சென்னை உள்ளிட்ட இடங்களில் குதிரை பண்ணைகள் உள்ளன. இங்கு உயர் வகை குதிரை இனங்களை உருவாக்குவதற்காக வெளிநாடு களிலிருந்து குதிரை ஜோடிகள் விமானம் மூலம் இறக்குமதி செய் யப்படுகின்றன. இவைகளை ’ஸ்டாலின்’ என்கிறார்கள். இவற்றின் மூலம் இனவிருத்தி செய் யப்படும் குதிரைகள்தான் பந்தயத் தில் ஓடவிடப்படுகின்றன.
கருவுற்று ஆறாவது மாதத்தில் குதிரை குட்டியை ஈனும். ஒரு குதிரை அதிகபட்சம் ஐந்து குட்டிகள் வரைகூட ஈனும். பிறந்து சில நாட் களிலேயே 400 கிலோ எடையை தொட்டுவிடும். ஓராண்டு காலத் துக்கு இந்தக் குட்டிகள் அதன் போக்கிலேயே சுதந்திரமாக புல் தரைகளில் உலவவிடப்படும். இந்தக் காலகட்டத்தில் குதிப்பது, உதைப்பது, கடிப்பது என குட்டிகள் மிகவும் மூர்க்கத்தனமாகவே இருக் கும். சுவரில் மோதி காயம் ஏற் பட்டுவிடக் கூடாது என்பதற்காக, குட்டிகள் குதித்துத் திரியும் பகுதி களில் மென்மையான தடுப்பு வேலி போட்டிருப்பார்கள்.
பிறந்ததுமே குதிரை குட்டி களின் பிறப்பை பதிவு செய்ய வேண் டும். இதற்காகவே புணேயில் பதிவு மையம் உள்ளது. குதிரை குட்டி யின் இனம் அதன் தாய், தந்தை குறித்த விவரங்கள் அனைத்தையும் இங்கே பதிவு செய்து முறைப்படி பாஸ்போர்ட் பெற்றால்தான் அந்தக் குதிரையானது பந்தயத்தில் ஓட அனுமதிக்கப்படும்.
இரண்டு வயது தொடக்கத் திலேயே ’ஸ்டேபிள்’ எனச் சொல்லப் படும் பிரத்யேக அறைகளுக்குள் குதிரைக் குட்டிகள் அடைக்கப் படும். அப்போதே ரேஸ்கோர்ஸ் மைதானங்களுக்கு அனுப்பப்பட்டு அங்கே பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சியும் அளிக்கப்படும். காலை யில் ஓட்ஸ், கொல்லு, மதியம் வெறும் தண்ணீர், மாலையில் கேரட், இரவில் புல். இவைதான் குதிரைகளுக்கான தினசரி டயட். சென்னை பண்ணையில் உள்ள குதிரைகளுக்கு மைசூரிலிருந்து பிரத்யேகமாக புல் தருவிக்கப்படு கின்றன. பராமரிப்புக்காக மட்டுமே ஒரு குதிரைக்கு மாதம் முப்பதாயிரம் ரூபாய் வரை செலவு செய்யப்படுகிறது. அதேசமயம், என்னதான் தீனி கொடுத்தாலும் குதிரையின் எடை 460 கிலோவை தாண்டவிடமாட்டார்கள்.
தினமும் குதிரைகளின் உடல் வெப்பத்தை பரிசோதிப்பதற்கா கவே இரவு பகலாக 2 கால் நடை மருத்துவர்கள் பண்ணையில் பணியில் இருப்பார்கள். 2 வயது முடியப்போகும் தருவாயில் குதிரைகள் கிளாஸ் ஒன் ரேஸில் களமிறக்கப்படும். களத்துக்கு வரும் குதிரைகளின் திறமையைப் பொறுத்து அவற்றின் மதிப்பும், ஓடும் ரேஸ்களின் தரமும் உயரும்.
பண்ணையிலிருந்து ரேஸ் கோர்ஸ் மைதானங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் குதிரை களைக் கொண்டு செல்வதற்கு ஃப்ளோட் (Horse Float) என்று சொல்லப்படும் பிரத்யேக வாகனங் களைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு ஃப்ளோட்டில் 6 குதிரைகள் வரை நிறுத்தலாம். உயர் வகை குதிரைகளை கொண்டு செல்வ தற்கு குளிரூட்டப்பட்ட ஃப்ளோட் களும் உண்டு.
சென்னை பண்ணையிலிருந்து கொல்கத்தாவுக்கு மட்டும் ரயிலில் பிரத்யேக வேகன்களில் பந்தயக் குதிரைகள் எடுத்துச் செல்லப்படு கின்றன. இந்த வேகன்கள் குதிரை களை நிற்கவைக்க வசதியாக மரக் கட்டைகள் அடிக்கப்பட்டு உள்ளுக் குள் ஐஸ் கட்டிகள் அடுக்கப்பட்டு குளிரூட்டப்படும். ஆந்திரா சென்ற தும் மீண்டும் வேகனில் ஐஸ் கட்டிகள் நிரப்பப்பட்டு குளிரின் பதம் காக்கப்படும். அதேசமயம், என்னதான் ஊட்டி ஊட்டி வளர்த் தாலும் பந்தயக் குதிரைகளுக்கு 4 ஆண்டுகள்தான் மதிப்பு. 6 வயதுக்கு மேல் அவை பந்தயத் துக்கு லாயக்கற்றவைகளாக ஒதுக்கப்பட்டு விடுகின்றன.
இப்படி ஒதுக்கப்படும் குதிரை கள் அடுத்த மூன்றாண்டுகளுக்கு குதிரை பண்ணையில் ஓரங்கட்டி நிறுத்தப்படும். பந்தயத்துக்கு தயாராகும்போது கோடி ரூபாய் வரை விலை மதிக்கப்படும் இந்தக் குதிரைகள், ஓடிக் களைத்த பிறகு ஆயிரங்களில் மதிக்கப்பட்டு பிற உபயோகங்களுக்கு விற்கப்படு வது பரிதாபத்துக்குரிய விஷயம்.
கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் தள்ளாட்டத் துடன் ஓடிக்கொண்டிருக்கும் குதிரைகள் இப்படிக் கழிக்கப் பட்டவைதான். சென்னை மாநகர காவலில் ஓடிக்கொண்டிருக்கும் பெரும்பாலான குதிரைகள் எம்.ஏ.எம்.ராமசாமிக்கு சொந்த மானவை. குதிரைகளின் அதிகபட்ச ஆயுள் காலம் 9 ஆண்டுகள்.
பெரிய குதிரைப் பண்ணைகள்
இந்தியாவை பொறுத்தவரை சென்னையில் எம்.ஏ.எம்.ராமசாமி யின் குதிரைப் பண்ணை, பெங்களூருவில் விஜய்மல்லையா வின் குதிரைப் பண்ணை, மும்பை யில் துஞ்சு பாய் என்பவரின் குதிரைப் பண்ணை மற்றும் துபாயைச் சேர்ந்த முஸ்லிம் பிரமுகரின் குதிரைப் பண்ணை இவைகள்தான் இந்தியா வின் பெரிய குதிரைப் பண்ணை கள். புணேயில் உள்ள குதிரை பண்ணை குளிரூட்டப்பட்டது.
உலகின் டாப் 10 பந்தயக் குதிரை இனங்கள்
இங்கிலாந்தின் துரோப்ரீட் வகை குதிரைதான் பந்தயக் குதிரைகளில் முதல் தரமானது. இதற்கு அடுத்த நிலையில் அரபு நாடுகளின் அரேபியன், அமெரிக்காவின் ஸ்டாண்டர்டுப்ரீட் மற்றும் குவார்ட்டர் ஹார்ஸ் இனங்கள் உள்ளன. இவைகளுக்கு அடுத்தபடியாக அமெரிக்காவின் பெயின்ட் ஹார்ஸ் மற்றும் அப்பாலூசா குதிரைகளும் வட அமெரிக்காவின் மஸ்தாங், நெதர்லாந்தின் ஃபிரைசியன், அமெரிக்காவின் மார்கென், அயர்லாந்தின் ஜிப்சிவேனர் குதிரைகளும் உள்ளன. குதிரை பயிற்சியாளர்களில் ஹாங்காங் பயிற்சியாளர்களும் ஜாக்கிகளில் அயர்லாந்து ஜாக்கிகளும் பிரமாதமாக பேசப்படுகின்றனர்.
கிண்டியில் கில்லி அடித்த குதிரைகள்
கிண்டியில் நேற்றுமுன்தினம் நடந்த ஸ்பிரிண்டர்ஸ் கோப்பை பந்தயத்தில் விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான பெங்களூரு குதிரை ஆதமும் (ஜாக்கி: டிராவர், பயிற்றுநர்: ஷராஃப்) ஸ்டேயர்ஸ் கோப்பை பந்தயத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த குதிரை டின் டினாபுலேஷனும் (ஜாக்கி: சவுகான், பயிற்றுநர்: தேஷ்முக்) முதலாவதாக வந்து தலா ரூ.50 லட்சத்தைத் தட்டிச் சென்றன. நேற்று நடந்த இன்விடேஷன் கோப்பை பந்தயத்தில் பெங்களூருவைச் சேர்ந்த டெசர்ட் காட் (ஜாக்கி: டேவிட் ஆலன், உரிமையாளர், பயிற்றுநர்: பத்மநாபன்) என்ற குதிரை கோப்பையை கைப்பற்றி ரூ. 1 கோடியை தட்டிச் சென்றது.

நன்றி  : தி இந்து

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails