பார்க்கிறாள்
கண்கள் மட்டுமே
தெரிகிறது
கண்கள் சந்திக்கிறது
மறுநாள்
மறுநாள்
கண்களோடு
கண்கள் சந்திக்க..
கண்களின்
சந்திப்பிற்காகவே
வினாடிகள்
இயல்பாய் கடந்தும்
காலம் ஓடவில்லை
வழக்கத்திற்கு மீறிய
செய்கைகளாய்
கண்கள் மட்டும்
வரும்
திசை நோக்கிய
அவதானிப்பில்
அடிக்கடி பாயும்
கண்கள்
காலம் கடக்கிறது
கண்கள் தான்
சந்திக்க வரவில்லை..
No comments:
Post a Comment