வேகமாய் சுழன்ற
காற்று
திரண்டிருந்த கருமேகம்
காணாமல் போன மாயம்
தெளிவான வானம்
பெய்யும் மழையென
எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாய்
தவிர்க்க முடியா நிகழ்வாய்
நினைத்த நினைவுகள்
நிறைவேற்ற போட்ட
திட்டங்கள்
விரைந்தது வந்த
வாழ்வியல் சூழலில்
கனவாய்
நினைவு நினைவாய்
தேங்கி நிற்க
ஆசை நிராசையாய்
ஏமாற்றம் இயல்பாய்
தவிர்க்க முடியா நிகழ்வாய் .
No comments:
Post a Comment