உள்ளிழுத்து கொள்கிறேன்
என்சுயம் ஒவ்வாத
நடக்கமுடியாசெயல்களில்
மௌனமாய் விலகுகிறேன்
நீ வாழ்
நானும் வாழ்கிறேன்
எதிர்ப்பதில் வாழ்வா..!?
என் சுயம்
உடைக்கப்படுகிறது
உணர்வுகள்சிதைக்க
எனது வாழ்வில்பூக்களா…
முடியாத நேரங்கள்
நாளை கிடைத்துவிடும்
நம்பிக்கையில்
பொறுக்கிறேன்
சுயம் அழிகிறது
நான்
என்குடும்பம்
என்பிள்ளை என்று
காலங்கள்
நீண்டு கொண்டே யிருக்கிறது
சக்கையாய் வாழ்வும்
நகர்ந்து கொண்டுதானிருக்கிறது.