Friday, May 27, 2016

தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லாமல் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து என்ன பயன்?- தமிழக அரசுக்கு நீதிபதிகள் 5 கட்டளை- பகிர்வு

"அடுத்த தலைமுறைக்கு தமிழ் மொழியை கொண்டுசெல்லாமல் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து 'உலகத் தமிழ் மாநாடு' நடத்துவதால் என்ன பயன்?" என கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், தமிழ் மொழியை அஞ்சல் வழியில் உலகம் முழுவதும் பரப்புவது தொடர்பாக 5 கட்டளைகளை பிறப்பித்துள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த ஆர்.லட்சுமி நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழ் 'செம்மொழி' அந்தஸ்து பெற்று தன்னிகரில்லாத மொழியாக உள்ளது. ஆனால், தமிழ்நாட்டை தவிர வேறு மாநிலத்தில் தமிழ் தெரிவதில்லை. மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகம் ரூ.50, ரூ.200 கட்டணத்தில் இந்தி மொழியை இந்தியா முழுவதும் அஞ்சல் வழியில் போதித்து வருகிறது. அதுபோல தமிழையும் சலுகைக் கட்டணத்தில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ளவர்கள் கற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்துக்கு கோரிக்கை மனு அனுப்பினேன்.
இந்த கோரிக்கையை நிறைவேற்ற தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் ரூ.37.36 லட்சம் நிதி ஒதுக்கீடு கோரியுள்ளதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழ் வளர்ச்சித்துறை செயலர் மற்றும் இயக்குநர் தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தமிழை வளர்க்க, உலகம் முழுவதும் பரவச் செய்ய தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு வருமாறு:
செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லாமல் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி என்ன பயன்?
முதல் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் முதலாம் நூற்றாண்டில் தோன்றியது என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே தமிழ் பிராமி எழுத்துகள் தோன்றியதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 11 ஆயிரம் ஓலைச் சுவடிகள் தமிழ் தொன்மை வாய்ந்த செம்மொழி என்பதற்கு கூடுதல் ஆவணங்கள். தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான், மலேசியா, சிங்கப்பூர், கனடா, பிஜி, மியான்மர், ஆப்பிரிக்கா, மாலத் தீவுகள், அமெரிக்கா என தமிழ் பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. ஆனால் தமிழ் மொழி பக்கத்து மாநிலங்களில் இருப்பவர்களுக்குக் கூட தெரியவில்லை.
ஹரியாணா உள்ளிட்ட பல வட மாநிலங்களில் தமிழ்தான் இரண்டாவது அலுவல் மொழியாக கடந்த 2010 வரை இருந்துள்ளது. தமிழ் மொழியை உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் தமிழர்களுக்கும் கொண்டுசேர்க்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு உள்ளது.
எனவே தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், அது சார்ந்த ஆராய்ச்சிகளுக்கும் மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி ஒவ்வொரு தமிழரும் தங்களது பங்களிப்பை செய்ய வேண்டும்.
மாநில அரசு தமிழ் மொழி வளர்ச்சிக்கு குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழ் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஊக்கத் தொகை யுடன் சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும். தமிழ் இலக்கியங்களை பிற மொழிகளுக்கும், பிற இலக்கியங்களை தமிழில் மொழி பெயர்க்கவும் நிதி ஒதுக்க வேண்டும். தமிழறிஞர்களை அங்கீகரித்து ஊக்குவிக்க வேண்டும். தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பல் கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை ஏற்படுத்த வேண்டும்.
அத்துடன் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் அஞ்சல் வழியில் தமிழை சலுகை கட்டணத்தில் உலகம் முழுவதும் கொண்டு செல்ல கோரியுள்ள நிதி ஒதுக்கீட்டை உடனடியாக செய்து கொடுத்து, மனுதாரரின் கோரிக்கையை 12 வாரத்துக்குள் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

நன்றி- தி இந்து

Saturday, May 21, 2016

அரியணை ஏறிய அஇஅதிமுக ..!!?? எதிர்கட்சியாம் திமுக

சபாஷ் ... பலமான போட்டியில் வெற்றி வாகை சூடிய அஇஅதிமுக.. நிறையவே பாடுபட்டு வெற்றியை இழந்த திமுக.

ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் என்ற நியதியை உடைத்தற்காகத் தமிழக மக்களுக்கு வாழ்த்துகள் சொல்லலாம் .

திமுக-வை திரும்பவும் குழிக்குள் தள்ள க்காரணம் உண்டு  என்றால் அது கட்டபஞ்சாயத்தார்கள் நிறைந்த திமுக. தமிழகத்தின் சிறுஊர்களில் கூடப்   போன திமுக ஆட்சியில் பாதிக்கப்பட்ட  ஏழைகள்...அய்யோ அவர்களா..??!!
என்று நினைக்க வைத்தது உண்மை.

திமுக திரும்பவும் தன்னைச் சீர்திருத்தி குறைகளைக் களைந்து புதுபித்து க்கொள்ள மறுபடியும் ஐந்து வருடங்கள் தமிழகமக்கள் வழங்கியுள்ளார்கள்.
வாரிசுகளின் வேட்பாளர் நியமனம்   பழைய வேட்பாளர்கள் முன்பு அதிகாரத்தில் இருந்தவர்களே கட்சி அதிகாரத்தில் தொடர்வது புதிய விளம்பர பாணியில் பழைய திமுக -வின் முகம் தென்பட்டது.

ஊடகங்கள் சுட்டிக்காட்டிய 2ஜி ஊழல் ஈழப்பிரச்சினை  திமுக-வின் நிரந்தர கறைகளாய் வரலாற்றில் பதிந்த ஒன்றை இன்றைய வளரும் தலைமுறை மறக்கவில்லை .

பலர் வாய் மூட  அறிக்கைகள் விட்டு  ச்சொல் ஒன்றாய் செயல் ஒன்றாய்  ஆனதால் திமுக தலைவர் இந்தத் தேர்தல் தோல்வியை அறுவடை செய்தார்.

தமிழக மக்கள் சிறந்த எதிர்க்கட்சியாக விளங்கும் வாய்ப்பினை திமுக வழங்க ச்சட்டசபையினுள் இருந்து மக்கள் பிரச்சனைகளை  எடுத்து ப்பேசி  ஆளும் அதிமுக-வை  தறிகெட்டு ஓடும் குதிரையாக  இல்லாமல் ஆக்கவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு திமுக உண்டு .

பார்க்கலாம்...திமுக-வின் செயல்பாடுகளை வரும் காலங்களில்....

அதிமுக திரும்பவும் அரியணை  செயல்படா முதல்வர் செயல்படா அரசு என்பதை னை மாற்ற முயலவேண்டும்.

படிப்படியாக மதுவிலக்கு முதல்படியை இந்த அரியணை ஏறியவுடன் மக்களுக்குத் தெரிவிக்க முதல்வர் கடமைப்பட்டுள்ளார்.

முந்தைய அரசாக இல்லாமல்  செயல்படும் அரசாய் மாற்ற மக்கள் மிகசரியாக  சிறந்த எதிர்க்கட்சி யை வலுவான நிலையில் கொண்டுவந்து நிறுத்தி உள்ளார்கள்.

கடந்த ஐந்து வருட ஆட்சியில் மக்களுக்கு அரசியல்வாதிகளால் தொந்தரவு கிடையாது அதனால் கிடைத்த நற்பெயர் மட்டுமே அதிக வித்தியாசம் இல்லாத இந்த வெற்றியை  அதிமுக விற்கு மக்கள் கொடுத்துள்ளார்கள்.

இன்னமும் தன்னை சீர்துர்க்கி திருத்தி க்கொள்ளவேண்டிய நிலையில் அதிமுக உள்ளது  என்பதும் மறுப்பதற்கில்லை.

பார்க்கலாம்...வரும் காலங்கள் சொல்லும்....



Wednesday, May 11, 2016

ரஷ்யா ராணுவம்

இரண்டாம் உலகபோரில் ஜெர்மானிய படைகளை ரஷ்ய படைகள் வெற்றிகொண்ட  71வது ஆண்டு வெற்றிதினம் அன்று ரஷ்ய ராணுவத்தின் அணிவகுப்பு புகைப்படங்கள்.



















Saturday, May 07, 2016

பயனில்லா பட்டங்களை வழங்கும் கல்வி மையங்களின் பொறியில் சிக்க வேண்டாம்: ரகுராம் ராஜன் - பகிர்வு

மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்கும் விஷயத்தில் வங்கிகள் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறினார்.

நொய்டாவில் உள்ள ஷிவ் நாடார் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர், பயனில்லா பட்டங்களை வழங்கும் கல்வி மையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு அதனால் எந்தப் பயனும் கிடைக்காது. வேலையும் கிடைக்கப் போவதில்லை. பயனற்ற இந்த பட்டங்களை அளிக்கும் கல்வி மையங்களை வங்கிகள் அடையாளம் காண வேண்டும். அதில் படிக்க மாணவர்கள் கல்விக் கடன் கோரினால் அதை அனுமதிப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.

கல்வியை வணிக நோக்கில் நடத்தி பணம் சம்பாதிக்கும் முறையற்ற கல்வி மையங்களால் வங்கிகளின் கடன் சுமைதான் அதிகரிக்கும். 

மிகவும் உயர்ந்த தரத்திலான பல்கலைக் கழகங்களில் கல்விக் கட்டணம் மிக அதிகமாகத்தான் இருக்கும். எதிர்காலத்தில் இவை மேலும் அதிகரிக்கக் கூடும். இருப்பினும் தகுதிபடைத்த அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. 

திறமையான மாணவர்கள் மேற்படிப்பைத் தொடர இருக்கும் வாய்ப்புகளில் முதன்மையானது வங்கிகளின் மூலம்கிடைக்கு கல்விக் கடன். அவ்விதம் கடன் வழங்கும் வங்கிகள், அந்தத் தொகையை மாணவர்கள் திரும்ப செலுத்த முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும். அவ்விதம் படித்து முடித்த மாணவர்கள் வேறு வேலை கிடைக்காமல் கடைசியில் குறைந்த ஊதியம் கிடைக்கும் பணிக்குச் செல்ல நேரிடும். அப்போது அவர்களால் வங்கிக் கடனை திரும்ப செலுத்த முடியாமத சூழல் ஏற்படும்.

இதுபோன்ற லாப நோக்கிலான கல்வி மையங்களை அடையாளம் காண வேண்டிய பொறுப்பும் நமக்கு உள்ளது. வெறுமனே கல்விக் கடனை வழங்கி அவர்களை கடனாளி ஆக்கி உதவாத பட்டத்தை பெற வைப்பதில் என்ன பயன் இருக்க முடியும் என்று அவர் கேள்வியெழுப்பினார்.

தனியார் கல்வி மையங்களில் எப்போதுமே கல்விக் கட்டணம் அதிகமாகத்தான் இருக்கும். எதிர்காலத்திலும் இது அதிகரிக்கத்தான் செய்யுமே தவிர குறையாது என்றார்.

இதுபோன்ற விஷயங்களைப் பேசுவதால் இனி பட்டமளிப்பு விழாவில் பேச்சைக் குறைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு வரலாம் என வேடிக்கையாகக் குறிப்பிட்டார் ராஜன்.

இப்போது உங்களிடம் நான் பேசிய வார்த்தைகளில் ஏதேனும் ஓரிரண்டு வார்த்தைகளை சில ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் நினைவில் வைத்திருந்தீர்களானால் நானும் ஒரு சாராசரி பட்டமளிப்பு விழா பேச்சாளராவேன். ஆனால் பெரும்பாலும் யார் பட்டம் அளித்தார்கள் என்பதே பலருக்கும் நினைவில் இருப்பதில்லை. அப்படி இருக்கையில் அவர்கள் கூறியது எங்கு நினைவிருக்கப் போகிறது.

தாராள சந்தை என்பதில் பாரபட்சம் இருக்கக் கூடாது. ஆனால் முன்னேறிய நாடுகளில் கூட செல்வந்தர்களுக்குச் சாதகமாகவே சந்தைப் பொருளாதாரம் உள்ளது.

மிக அதிக ஊதியம் வழங்கும் பணிகளுக்கு திறமை மிக அவசியம். இதற்குரிய சூழலில் படித்து வரும் மாணவர்களுக்கு இது எளிதாகக் கைகூடுகிறது என்றார் ராஜன்.

நன்றி - தி இந்து

Friday, May 06, 2016

சும்மா இரு



சும்மா இரு
நினைவுகள்
தானாய் ஓடியது
திரும்பவும்
சும்மா இரு
இரண்டு நிமிடங்கள்
பார்த்தது
கேட்டது
படர்ந்தது
கிளைத்தது
சுயம்
தொலைந்தது
சும்மா இரு
சுயம் தெரிய
சுகம் தெரிய
எண்ணங்கள்
தொலைவது
எப்போது?

Tuesday, May 03, 2016

உலகம் சுற்றினால் இந்தமாதிரி இடங்களையெல்லாம் பார்க்கலாங்க..!!

முடிஞ்சவங்க உலகம் சுற்றி வண்ணமயமான இடங்களை ரசிக்க ...அவர்கள் ரசித்த இடங்களை புகைப்படங்களில் ரசிப்பது தனிசுகம் தான்.

இடங்கள் இருக்கும் நாடுகள் சைனா , நெதர்லேண்ட், ஜப்பான் , ஆஸ்திரியா, ஜொ்மன் , இத்தாலி, நார்வே, போர்ச்சுகல்















Friday, April 29, 2016

நீங்கள் தவிர்க்க வேண்டிய பாஸ்வேர்டு தவறுகள்! - பகிர்வு

பாஸ்வேர்டு தொடர்பாகப் பிரபலமான நகைச்சுவைத் துணுக்குகள் பல இணையத்தில் உலா வருகின்றன. அவற்றில் ஒன்று, ‘சரியில்லாதது' என்பதற்கான ஆங்கிலச் சொல்லான ‘இன்கரெக்ட்' எனும் வார்த்தையை பாஸ்வேர்டாக மாற்றிக்கொண்டுவிட்டேன். ஏனெனில், பாஸ்வேர்டை மறந்துவிட்டால், உங்கள் பாஸ்வேர்ட் சரியில்லை என நினைவுபடுத்தும்” என்பதாகும்.
இந்தத் துணுக்கு சிரிக்கவும் வைக்கும். கொஞ்சம் யோசிக்கவும் வைக்கும்.
ஆனால் பாஸ்வேர்டுகளை விளையாட்டாக எடுத்துக் கொள்வதற்கில்லை. அவைதான் உங்கள் இணையப் பாதுகாப்புக்கான சாவி. இந்தச் சாவியைக் கவனமாகக் கையாள்வது அவசியம். இல்லை எனில் அது இணையக் கள்வர்கள் கையில் சென்றுவிடும் அபாயம் இருக்கிறது.
பொதுவாகப் பாதுகாப்பான பாஸ்வேர்டுக்குச் சொல்லப்படும் அடிப்படையான விஷயங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் இணையம் வளர்ந்துகொண்டே இருக்கும் நிலையில், இணையப் பாதுகாப்புக்கான சவால்களும் அதிகரித்துவருவதால் பாஸ்வேர்டு பாதுகாப்பையும் நீங்கள் அப்டேட் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.
பாஸ்வேர்டு நீளம்
உதாரணத்துக்கு வலுவான பாஸ்வேர்டுக்கான அடிப்படை விதியை எடுத்துக்கொள்வோம். ஒரு காலத்தில் நல்ல பாஸ்வேர்டு குறைந்தது ஆறு எழுத்துக்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. அதற்கும் குறைவாக எழுத்துக்கள் இருந்தால், அவை எளிதாக ஊகிக்கப்படும் அபாயம் இருப்பதாகக் கருதப்பட்டது.
ஆனால் இன்றைய ஹேக்கர்களோ, ஆறு எழுத்து பாஸ்வேர்ட்களைக்கூட மிக எளிதாக ஊகித்துவிடக்கூடிய அளவுக்கு அவர்கள் கையாளும் கணினிகள் ஆற்றல் கொண்டிருக்கின்றன. எனவே இப்போது பாஸ்வேர்டுகள் குறைந்தபட்சம் 8 எழுத்துக்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். 10 முதல் 12 எழுத்துக்கள் கொண்டதாக இருந்தால் இன்னும் நல்லது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கணக்குகளுக்கானது என்றால் தயங்காமல் 14 முதல் 16 எழுத்துக்களில் பாஸ்வேர்டை அமைத்துக்கொள்ளலாம் என்று வல்லுந‌ர்கள் சொல்கின்றனர். ஆக, பாஸ்வேர்டுக்கான நீளம் பற்றிய உங்கள் எண்ணத்தை முதலில் மாற்றிக்கொள்ளுங்கள்.
பாஸ்வேர்டுக்குப் பதில் பாஸ்பிரேஸ்
அடுத்ததாகச் செய்ய வேண்டிய விஷயம், உங்கள் பாஸ்வேர்டு குழப்பமானதாக இருக்க வேண்டும். அதாவது பாஸ்வேர்டு எளிதாக இருக்கக் கூடாது. 1 முதல் 12 வரை கொண்ட எண்களை வைத்துக்கொள்வதோ, ஆங்கில அகர வரிசையில் முதல் 8 எழுத்துக்களை வைத்துக்கொள்வதோ நல்ல பாஸ்வேர்டாகிவிடாது. பாஸ்வேர்டு பூட்டை உடைக்கும் ஹேக்க‌ர்கள் இவற்றை எல்லாம் நொடியில் ஊகித்துவிடுவார்கள். இதைத் தவிர்க்க, வெறும் எழுத்துக்களைக் கொண்டு மட்டுமே பாஸ்வேர்டு அமைக்காமல், இடையே எண்கள், நிறுத்தல் குறிகள் மற்றும் சிறப்புக் குறியீடுகளைப் பயன்படுத்துங்கள்.
முதலில் சில எழுத்துக்கள் அதைத் தொடர்ந்து சில எண்கள், அதன் பிறகு சிறப்புக் குறியீடுகள், பின் மீண்டும் சில எண்கள் இறுதியில் சில எழுத்துக்கள்... இப்படி இருந்தால் உங்கள் பாஸ்வேர்டு பாதுகாப்பில் பல படிகளைக் கொண்டிருக்கிறது என பொருள்.
இதற்கான எளிய வழி, வார்த்தைகளைக் கொண்டு பாஸ்வேர்டை யோசிக்காமல், ஒரு ஆங்கிலச் சொற்றொடரை எடுத்துக்கொண்டு அதில் உள்ள வார்த்தைகளின் முதல் எழுத்துக்களை மட்டும் வரிசையாக எழுதிவிட்டுப் பின்னர் இடையிடையே எண்களையும், நிறுத்தல் குறிகளையும் சேர்க்கலாம் என்கின்றனர். இந்த முறை ‘பாஸ்பிரேஸ்' (passphrase) எனக் குறிப்பிடப்படுகிறது.
பாஸ்வேர்டு பார்ப்பதற்குப் படு சிக்கலாகத் தோன்றும். ஆனால் அதன் அடிப்படையாக அமைந்த சொற்றொடரைக் கொண்டு பாஸ்வேர்டை மறக்காமலும் இருக்கலாம்.
தேவை தனித்தனி பாஸ்வேர்டு
நீளமான பாஸ்வேர்டுகளை அமைப்பதில் உள்ள சிக்கல் என்னவென்றால் அவற்றை நினைவில் வைத்துக்கொள்வது கஷ்டமாக இருக்கும் என்பதுதான். பாஸ்வேர்டு தொடர்பாகப் பலரும் செய்யும் இரண்டு தவறுகளுக்கு இது வழிவகுக்கலாம்.
ஒன்று, அதுதான் சூப்பர் ஸ்டிராங் பாஸ்வேர்டு உருவாக்கியாச்சே என்ற நம்பிக்கையில், எல்லா இணையச் சேவைகளுக்கும் அதே பாஸ்வேர்டைப் பயன்படுத்தத் தோன்றும். இது நடைமுறையில் எளிதாக இருக்கலாம் என்றாலும் மிகவும் ஆபத்தானது. ஏனெனில் ஒரு சேவையில் பாஸ்வேர்டு திருடப்படும் நிலை ஏற்பட்டால், அந்த ஒரு கள்ளச்சாவியைக் கொண்டே விஷமிகள் ஒருவரது மற்ற இணைய சேவைகளுக்கு உள்ளேயும் எளிதாக நுழைந்துவிடுவார்கள்.
இமெயிலுக்கான பாஸ்வேர்டு மெயிலுக்கானதாக மட்டுமே இருக்க வேண்டும். பேஸ்புக்கிற்கும், ட்விட்டருக்கும், இன்னும் பிற இணையச் சேவைகளுக்கும் கட்டாயம் தனித்தனி பாஸ்வேர்டு தேவை.
வேண்டுமானால், ஒரு அடிப்படை பாஸ்வேர்டை உருவாக்கிவிட்டு, ஒவ்வொரு சேவைக்கும் ஒரு சிறிய மாற்றம் செய்து அவற்றைப் பயன்படுத்தலாம்.
பாஸ்வேர்டு மேனேஜர்
ஆனால், இப்படி தனித்தனியே பல பாஸ்வேர்டுகளை உருவாக்கிக் கொள்ளும்போது, அவற்றை எல்லாம் ஒரு காகிதத்தில் குறித்து வைக்கும் எண்ணம் இயல்பாக எழலாம். இதைவிட ஆபத்தானது எதுவும் இல்லை என்று இணையப் பாதுகாப்பில் அடிக்கடி வலியுறுத்தப்படுகிறது.
ஹேக்க‌ர்கள் உங்கள் சிஸ்டத்தில் கைவரிசை காட்டலாமே தவிர, உங்கள் மேஜையில் கைவிட்டு இந்தக் காகிதத்தை எடுக்க முடியாதுதான். ஆனால் உங்கள் வீட்டிற்கு வரும் வேறு யாரேனும் கையில் கிடைத்தால் சிக்கலாகலாம். நினைவில்லாமல் இவற்றைத் தூக்கி வீசினாலும் பிரச்சனை ஆகலாம். நிறைய பாஸ்வேர்டுகளை நினைவில் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டால் பாஸ்வேர்டு மேனேஜர் சேவைகளை நாடலாம். இணையத்தில் நிறைய பாஸ்வேர்டு மேனேஜர் சேவைகள் உள்ளன. அவற்றைப் பரிசீலித்துப் பாருங்கள்.
பாஸ்வேர்டு மேனேஜர் மென்பொருட்களைப் பயன்படுத்தினாலும் சரி, பாஸ்வேர்ட்களை நீங்கள்தான் கவனமாகப் பராமரிக்க வேண்டும்.
அதாவது, தேவை எனில் பாஸ்வேர்ட்களை மாற்றிக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு 3 மாதங்கள் அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பாஸ்வேர்டுகளை மாற்றுவது நல்லது எனும் கருத்து முன்வைக்கப்படுகிறது. இப்படி அடிக்கடி மாற்றுவது நல்லதல்ல என்ற கருத்தும் சொல்லப்படுகிறது.
என்றாலும், நிச்சயமாக ஆண்டுக் கணக்கில் ஒரே பாஸ்வேர்டைப் பயன்படுத்துவது பாதுப்பானது இல்லை. சில ஆண்டுகளுக்கு ஒரு முறையேனும் உங்கள் பாஸ்வேர்டை தூசி தட்டி அப்டேட் செய்துவிட வேண்டும். அதிலும் குறிப்பாக, இமெயில் சேவைகளிலிருந்து ‘உங்கள் கணக்கில் சந்தேகத்துக்குரிய நடவடிக்கை நிகழ்ந்துள்ளது, பாஸ்வேர்டை மாற்றுங்கள்' என எச்சரிக்கை வந்தால் அலட்சியம் செய்யக் கூடாது.
மண்டை ஓடு பாஸ்வேர்டு
நிற்க, இணையவாசிகளை இத்தகைய சிக்கல்கலிருந்து எல்லாம் விடுவிக்கும் வகையில், ஓயாமல் பாஸ்வேர்டு ஆய்வுகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
பயனாளிகளுக்கு எளிதான ஆனால், ஹேக்க‌ர்கள் கைவைக்க முடியாத பாஸ்வேர்டை உருவாக்குவது தொடர்பாக மாற்று வழி சாத்தியமா எனும் திசையிலும் ஆய்வுகள் நடக்கின்றன.
இவற்றில் சுவாரஸ்யமான ஒன்று, பயனாளிகளின் மண்டை ஓட்டை பாஸ்வேர்டுக்கான மாற்றாகப் பயன்படுத்த முடியுமா என்பதாகும். அமெரிக்காவின் பிங்காம்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், பிரபலங்கள், உணவு வகைகள் போன்ற ஒளிப்படங்களைப் பார்க்கும்போது மூளை அவற்றை எதிர்கொள்ளும் விதத்தையே பாஸ்வேர்டாக்க முடியுமா எனும் கேள்வியுடன் ஆய்வை மேற்கொண்டுள்ளனர். ஒவ்வொருவரது மூளையும், இந்தத் தகவல்களை எதிர்கொள்ளும் விதம் தனித்தன்மை மிக்கதாக இருப்பதால், இந்த முறையையே பாஸ்வேர்டாகப் பயன்படுத்த முடியும் என கருதுகின்றனர்.
இதே போல ஜெர்மனி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மண்டை ஓட்டுக்குள் ஒலி மோதி திரும்பும் வித்தியாசங்களைக் கணக்கிட்டு அதை பாஸ்வேர்டாக மாற்ற முடியுமா என ஆய்வு செய்துவருகின்றனர்.

நன்றி - தி இந்து

Wednesday, April 27, 2016

படுத்துவிட்ட இணையம்

படுத்துவிட்ட
இணையம்
தொடர்பற்ற
இணைய உலகம்
வாங்கும்
தினசரியில்
அறிந்த
நாட்டு நடப்புகள்
விலகி நின்று
விரும்புகிறேன்
இணைய இணைப்பு
இன்று
நாளை
எனச்சொல்லி
நான்கு நாட்களாய்
அலைந்த அலைச்சலில்
சரி செய்த
பிஎஸ்என்எல்
இணைந்த
இணைய உலகத்தில்
ஜெயலலிதாவும்
கலைஞரும்
விசயகாந்தும்
வைகோவும்
செய்திகளாய் விரிய...
உலக இணைய
தொடர்பில் நான்.


Monday, April 18, 2016

பாதுகாப்பும் அரவணைப்பும்


பாதுகாப்பும்
பந்தமுமாய்
இணைப்பு
இருக்கும் உலகின்
புதிய வரவாய்
வளச்சியை
நோக்கிய
பயணம் ஆரம்பத்தில்
தாயின் அரவணைப்பு
காவலாய்....


Saturday, April 16, 2016

கோடையும் தேர்தலும்

சொன்னீங்களே... செஞ்சீங்களா... இது  தி.மு.க தொலைக்காட்சி விளம்பரம்.

சொன்னதை ச்செய்தோம் சொல்லாததையும் செய்தோம்..இது  அஇஅதிமுக தொலைக்காட்சி விளம்பரம்.

அனுபவித்த தமிழக மக்களுக்கு த்தெரியும். மக்களின் அறியாமையைப்  பயன்படுத்தி அதிகாரம் பெறத்துடிக்கும்  இரு திராவிட கட்சிகளுக்கு விரைவில் சங்கு ஊத  எந்த மாற்றுச்சக்தி வரப்போகிறதோ தெரியவில்லை.

மநகூ சாதிக்குமா...??!!

கோடை வெயில் உக்கிரம் உடம்பில் வழியும் வியர்வை எடுத்து ச்சொல்ல..
ஜனநாயக திமுக -வில் வேட்பாளர்களை மாற்றக்கோரி அறப்போராட்டங்கள் தமிழகத்தில் அங்கங்கே நடப்பது விசித்திரம்.

அப்பவா..பிள்ளையா போட்டியில்  திமுக .

அஇஅதிமுக பிரசாரத்தில் மயக்கமடையும் பெண்களும் ஆண்களும் கோடையில் விசுவாசமா அல்லது வாங்கிய காசுக்கான உழைப்பா..??
அந்தந்த பகுதி அஇஅதிமுக  நிர்வாகிகளுக்கே வெளிச்சம்.

பலமுனை போட்டியில்  தேர்தல் போட்டி என்னவோ அஇஅதிமுக -திமுக என்பதை  விளம்பரங்களும் பிரச்சாரங்களும் காட்ட மற்ற கட்சிகளின் விளம்பரங்களையும் பிரசாரங்களையும்  தேடித்தான் பார்க்க வேண்டியுள்ளது.

எல்லாம் காசு தாம்பா...!!

கோடையும் தேர்தலும் அனல் பறக்கிறது.






Wednesday, April 13, 2016

பெர்பெக்ட் ஷாட் - சிறுத்தையின் வேட்டை

கென்யா நேஷனல் பார்க்கில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்கள்  மிக ச்சரியான நேரத்தில் மிகச் சரியாக எடுக்கப்பட்டவை...























LinkWithin

Related Posts with Thumbnails