Thursday, February 28, 2013
Wednesday, February 27, 2013
உறவுகள்
உறவுகளின் அரவணைப்பில் நான்
வளர்கிறேன். நானும் உறவுகளை
அரவணைக்கிறேன்.
மனிதர்களை அடையாப்படுத்தி பழகும்
உறவுகளில் பந்தங்களை காணமுடியாது.
நம் இனத்தை சேர்ந்தவன் நாமும் அவனே
என்ற பெருதன்மையால் மட்டுமே ஏற்றதாழ்வுகள் இல்லா
உறவை வளர்தெடுக்க முடியும்.
இச்சமுதாயம் மனித உறவுகளின்
இணைப்பிற்கு பணத்தை பிரதானப்படுத்தியுள்ளது.
உறவுகளின் இணைப்பிற்கு அன்பு
அடித்தளமாய் இருந்தாலும் பணம் அதனை
விகாரப்படுத்தியுள்ளது.
இன்றைய உறவுகள் நாம் என்பது மருவி
நான் என்றாகி விட நான் என்கிற எல்லையின் பரப்பு மிகவும் குறுகிவிட சுற்றம்
பார்க்கா சுயநலம் பெருகி விட்டது.
உறவுகளில் ஒப்புமை ஒவ்வாமை தான்.
நயவஞ்சக உறவுகளும் இருக்கத்தான் செய்கிறது.
உறவுகள் இல்லாது நம் சமுதாய வாழ்வு சிறக்காது.
ஆகையினால் ....
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை போலும்.
Labels:
அனுபவம்,
எண்ணங்கள்,
என் பார்வையில்
Tuesday, February 26, 2013
மகா பூஜை
தாய்லாந்து நாட்டில் ஆண்டு தோறும் மகா பௌர்ணமி பூசை கொண்டாடப்படுகிறது. ஆண்டின் தொடக்கத்திலிருந்து மூன்றாவது பௌர்ணமி நாளில் இந்த விழா விமர்கையாக கொண்டாடப்படுகிறது.
விழா நாளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட புத்தபிக்குகள் மெழுகுவர்த்தி ஏந்தி புத்தர் ஆலயத்தை சுற்றி வட்டவடிவில் அமர்ந்து பிரார்தனை செய்வார்கள்.
அன்றைய தினம் தாய்லாந்து அரசால் மது விற்பனை தடை செய்யப்பட்டிருக்கும்.
விழா நாளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட புத்தபிக்குகள் மெழுகுவர்த்தி ஏந்தி புத்தர் ஆலயத்தை சுற்றி வட்டவடிவில் அமர்ந்து பிரார்தனை செய்வார்கள்.
அன்றைய தினம் தாய்லாந்து அரசால் மது விற்பனை தடை செய்யப்பட்டிருக்கும்.
Monday, February 25, 2013
சாவின் விளம்பில் வாழ்வு
30 வினாடிகளில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. அதற்கு பிறகும் தட்டான் தவளையின் தலையில் வந்துஅமர்ந்தது.
தவளை தன்னுடைய இரையை பிடிப்பதில் மிகவும் திறமையுடையது. அவ்வாறு இருக்கையில் தட்டான் தலையில் அமர்ந்தும் எப்படி ?
தவளை இனப்பெருக்க காலங்களில் உணவு உட்கொள்ளதாம்.
வயதுக்கு வந்த தவளைகள் தன்னுடைய இரையை நிலத்தில் தான் அமைத்துகொள்ளுமாம். சிறிய தவளைகள் நீரினுள் தான் இரையை தேடுமாம்.
இரு காரணங்களால் தட்டான் தவளையின் தலையில் அமர்ந்து விளையாடியுள்ளது.
Saturday, February 23, 2013
Subscribe to:
Posts (Atom)