Wednesday, December 31, 2008

இருந்தது இருக்கிறது இருக்கும்

வந்து போகும்
மணிதுளிகள்
சோ்க்கையாய்
நாட்கள்
மாதங்கள்
வருடங்கள்
வாழ்த்துகள் சொல்ல
மனமில்லை
தினமும் விடியல்
இன்று மட்டும்
புதிததாய் பிறந்தபூமியா
இது..
இருந்தது
இருக்கிறது
இருக்கும்
நாம் மட்டும்
வருவோம்
இருப்போம்
அழிவோம்
முகங்கள்மாறும்
பருவங்கள் போல
யுகம் யுகம்
நடக்கும் கூத்து
புது வருடம்
எதுவாய் வாழ்த்துகள்
கூற..

போ.. போய் மாத்திட்டு வந்துரு

ஆங்கில அறிவு தெரியா கிராமத்து பையன். தமிழ் படிக்க தெரியும் எழுத தெரியாது.

வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க மளிகை கடை சென்றார். தனக்கு தேவையான பொருட்கள் வாங்கும் போது..

எங்க ..முடி கொட்டுது நல்ல ஹேர் ஆயில் இருந்தா கொடுங்க.

இந்தாங்க இது நல்ல ஆயில் என்று சொல்லி அதற்குரிய தொகையை பெற்றுக்கொண்டார்.கடைக்காரர்.

அந்த பையனும் வாங்கி வந்து அவன் நண்பன் நிற்குமிடம் வந்து ..

டேய்..முடி கொட்டுதுன்னு ஹேர் ஆயில் கொடுத்தாரு இது நல்லா இருக்குமா என்று சொல்லியபடி நண்பனிடம் காண்பிக்க..

எல இது ஹேர் ஆயில் கெடையாதுடா.. ஹேர் டை .. போ ..போய் மாத்திட்டு வந்துரு.
திரும்பவும் போய் கடைக்காரரிடம் கேட்க இது நல்ல ஹேர் ஆயில் தான் என்று திரும்பவும் அனுப்பினார்.

திரும்பவும் வந்து டேய்.. இது நல்ல ஆயிலான்டா என்று சொல்ல..

நண்பன் உடனே அவனை அழைத்து ஹேர் டை பெட்டியில் இருந்த விபர குறிப்பை எடுத்து தமிழில் அச்சிடப்பட்ட விபரத்தை படித்து காண்பித்தான்.
போ.. போய் மாத்திட்டு வந்துரு என்றான் நண்பன்

வக்கால.. என்று கிராமத்து பாசையில் கடைக்காரனை திட்டிவிட்டு மாற்ற சென்றான்.

கடைக்காரரை என்னவென்று சொல்வது.

Sunday, December 28, 2008

வாசலை தாண்டிய நட்புகள்.

எங்கண்ண வந்தீங்க..

அட ஏய்யா .. அவங்க வீட்டு விசயமா வந்தய்யா..

நானும் பத்து நாளா அலையறதாவே இருக்கேனய்யா..

ஏன் வேல அப்பிடியே கெடக்கு.. என்ன செய்யறதுன்னே தெரியல..

லாபத்த மட்டுமே எதிர்பாக்குறாங்கய்யா.. நஷ்டம் சொன்னா நம்மல தப்பு சொல்லிறாங்க..

நமக்கு ரொம்ப கஷ்டாமா போயிருது... தம்பி

வேணாம் வம்புன்னு பட்டுகாம இருந்தா .. ஏன் வர போவ இல்ல அப்படீன்னு கோவிச்சுக்கிறாங்க ..

என்ன செய்றதுன்னே தெரியல.

ஏன்டா நெருங்கி பழக்கம் வைச்சுகிட்டோன்னு இருக்கு தம்பி.

தம்பீ ஏன் அனுபவத்துல வாச படியோட பழக்கவழக்கத்த நிப்பாட்டிக்கனும் .

வாச படி தாண்டுன பழக்கவழக்கத்துல கட்டாயம் சங்கடம் உண்டு தம்பி.

நீங்க சொல்றது ரொம்ப சரிண்ணே..

Saturday, December 27, 2008

தேவை ஒரு யானை முட்டை

புருசன் பொண்டாட்டி கல்யாண நாளன்று புருசன் மனைவிக்கு பரிசுப்பொருள் தருவது வழக்கம் .

அது ஐந்தாவது வருட திருமண நாள். அவன் மனைவி அவன் வாங்கி தருவதை ஏற்றுக்கொள்வாள். நான்கு வருடமும் அவள் வாய் திறந்து எதுவும் கேட்டதே கிடையாது.

அதனாலயே இவள் எதும் கேட்க மாட்டாளா என்பது புருசனின் எதிர்பார்ப்பு .

எதிர்பராமல் அந்த வருடம் திருமணநாள் வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே எனக்கு என்ன வாங்கி தரபோறீங்க?
என்று தன் புருசனிடம் கேட்டாள்மனைவி.

புருசனுக்கு ஆச்சரியம் என்ன வேணாலும் கேளு நான் வாங்கி தர்றேன் என்றான்.

இவளுக்காக ஒரு தனிதொகையே சேமித்து வைத்திருந்தான்.

நிஜமா..நான் கேட்பதை வாங்கி கொடுத்து விடுவீர்களா..

உம் கேளு..

எனக்கு ஒரு யானை முட்டை வாங்கி கொடுங்க என்றாள் மனைவி.

அதிர்ந்து போன கணவன் . என்னது..
வேலை பளுவின் காரணமாக “முட்டை இடும் யானை ” என்ற சிறுகதையை பாதியில் படித்ததோடு முடித்து விட்டு முடிவு தெரியாமல் தேவை ஒரு யானை முட்டை என சிந்திக்கிறேன்.

Friday, December 26, 2008

முன்னோர்கள் சொன்னப்படி

திடீரென திரளும் கருமேகங்கள் மழையாய் பொழியும் மழைக்காலம் அது. காற்றழுத்த தாழ்வுமண்டலம் உருவாகி புயல் பற்றிய எச்சரிக்கை விடுத்தது ...

கடலோர கரையோர மாவட்டங்கள் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் பலத்த மழையுடன் காற்று.

மனிதகுலம் தான் தன்னிறைவு பெற்றுவிட்டதாக கருதும் நாகரிக வளர்ச்சியின் அத்தனை வசதிகளும் பயன்படாமல் போன அவலம்.

மழை என்னவோ சில நாட்கள் தான் மனிதர்கள் படும் அவலமோ சொல்ல முடியாதது.

நம் முன்னோர்கள் வாழ்ந்த காலம் மழைக்காலம் அது முழுமையான மழைக்காலம். மூன்று மாத காலங்களையும் சமாளித்து வாழ்ந்தார்கள். நம்மையும் வாழ வைத்தார்கள்.

இயற்கையாய் ஏற்படுத்தி சென்ற வாய்க்கால்களை மேற்கொண்டு சீர்செய்து வைத்துக்கொண்டார்கள். மனித மனம் விரிந்து ஆபத்து காலங்களில் மற்றவர்களுக்கு உதவி செய்தது.

பேரிடர் சமயங்களிலும் சமாளித்து வாழ்ந்தார்கள். நம் தலைமுறை கஷ்டபடாமல் வாழ்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. முன்னோர்கள் சொன்னதை திரும்பவும் சிந்திப்போம். அடிப்படை மாறாமல் அதில் புதுமைகள் செய்ய கற்றுக்கொள்வோம்.

Thursday, December 25, 2008

நடிப்பும் உண்மையும்

ஆறாவது படிக்கும் மாணவன் ஒருவன் தன் சக நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தான் .

பந்து வீச அவனை அழைத்தார்கள் . முதல் பந்து மட்டையாளனுக்கு ஆப் சைடில் நன்றாக விலகி சென்றது.

உடனே பவுலர் ஓ… அய்யோ.. சே..என்று இருகைகளை தலையில் கட்டிக்கொண்டான்.

அவன் வீசிய ஒவ்வொரு பந்தும் ஸ்டம்புக்கு நேராக செல்லவில்லை. ஆனால் அவன் காட்டிய அங்க சேட்டைகள் அற்புதம்.

அவனுடைய வெளிப்பாடு சிறப்பாக பந்து வீசும் பவுலர்கள் சிறு இடைவெளியில் விக்கெட்டை தவறவிட்டு
வெளிப்படுத்தும் உடலியக்க முகபாவனைகளாக அமைந்தன.

நுணுக்கம் அறியாமல் பந்து எப்படி வேண்டுமானலும் வீசலாம் சேட்டைகள் அவசியம் என்பதை அவன் மனதில் பதிய வைத்துள்ளான் .

சரியான வழிகாட்டுதல் இல்லாததால் வந்த விளைவு.

சரியான வழிகாட்டி இல்லா தவறான கற்றுக்கொள்ளல் ஆபத்தான விளைவுகளையே கொண்டு வரும்.

Tuesday, December 23, 2008

யார் பைத்தியம்?

அந்த பைத்தியம் எப்படி இருக்கு? என்று ஒருவர் தன் அம்மாவிடம் தன்னுடைய அண்ணனை ப்பற்றி விசாரிக்கிறார்.

என்ன அர்த்தத்தில் விசாரித்தார் என்று தெரியவில்லை.

ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு விஷயத்தில் பைத்தியமாகவே உள்ளான்.

விசயங்கள் என்பது தான் வேறாக இருக்கும். பைத்தியம் என்ற நிலைமை ஒன்றுதான். நிலைமையின் தீவிரம் விசயங்களை பொறுத்தே அமையும்.

மிகச்சிறந்த உதாரணமாக மணி கணக்காக செல்போன் பேசும் நபர்களை சொல்லலாம்.

எது நம்மி்டம் பலவீனமாக உள்ளதோ அது கிடைக்கும்போது பயன்பாட்டின் அளவைப்பொறுத்து திடீரென கிடைக்காமல் போகும்போது பைத்தியம் ஆககூடிய வாய்ப்புகள் அதிகம்.

இப்ப சொல்லுங்க யார் பைத்தியம்?

பைத்தியம் பைத்தியமா ... அல்லது பைத்தியத்தை பைத்தியம் கண்டுபிடிப்பவர்கள் பைத்தியமா...

Monday, December 22, 2008

பீர் பார்ட்டி - கிளைமேக்ஸ்

திரும்பவும் மறுநாள் ஒன்றாக கூடினார்கள் பீர் பார்ட்டிகள்.

என்ன ராஜா மீன் கொழம்பு ஊத்தி சாப்பாடு சாப்பிட்டியலா ராத்திரி?

அட.. நீங்கவேற நெலம ஒண்ணும் சரியில்ல..வாந்தி எடுக்குற மாதிரி இருந்திச்சு..

ஏன்டாப்பா வம்புன்னுட்டு பாய் விரிச்சு போட்டு படுத்துட்டுங்க.

காலை ஏந்திரிச்சா.. அம்மா ஒரே பாட்டு உட்டுகிட்டு
இருந்திச்சி..

நைசா நழுவிட்டேங்க.. ஒரு பீரோட நிப்பாட்டிருக்கனுங்க..

ஆமா..நீங்க என்னாச்சு..

அத ஏன் கேக்குறீங்க

நான் ஒரு பீர் அடிச்சுட்டு போன தனியா வீட்டு திண்ணையில உக்காந்து எதாச்சும் யோசிப்பங்க..

நாம தெளிவா இருக்கோம் நெனைச்சிட்டு போய் திண்ணையில
உக்காந்தாங்க பேண்ட் சட்டையெல்லாம் மாத்தல ..

படுத்துகிட்டே யோசிப்போம் நெனைச்சிட்டு கையில இருந்த நீயூஸ்பேப்பர் விரிச்சி படுத்தங்க ..

அவ்வளதான் ப்ளாட்.. கால அஞ்சு மணி எங்க பெரிம்மா வந்து

ஏலே ..எந்திரி ..என்ன இப்படி படுத்துகிடக்க.. உடம்பு சரியில்லையா

போ எந்தரிச்சு போய் உள்ள படு..

அப்பதான் முழிச்சு பாத்தா எந்நெலம எனக்கு தெரிஞ்சுதங்க.

நம்ம கோபி கத என்னாச்சு தெரியல ராஜா.

எல்லா நம்ம கததான் ஆயிருக்கும்.

Sunday, December 21, 2008

பீர் பார்ட்டி

எங்க வீட்டுல ஊர்க்கு போயிருகாங்க இன்னக்கு பீர் குடிக்கனுப்பா ..

என்னடா கோபி குடிக்கலாமா

குடிக்கலாமுங்க..

சொல்லி கொண்டே இருக்கும்போது இடையே ராஜா..என்ன பீர் குடிக்கிறீங்களா?

இன்னக்கு மீன் கொழம்பு அதான் நெனைச்சுகிட்டே வந்தேன்.

ஏங்கிட்ட நூறு ரூபா இருக்குப்பா..

ஏங்கிட்ட நூத்தம்பதப்பா.. ராஜா

கோபி .. ஊறுகா மட்டும் போதுப்பா..

ஏங்க..வேற எதும் வேணாமா..

வேண்டாம் பாத்துகலாம்.

வாங்கி வந்து குடிக்கும்போதே .. லேசாக ஏறியவுடன்

பத்தாது போலிருக்கே இன்னொரு ரவுண்ட் வரலாமா..

ஏங்கிட்ட நூத்தம்பது இருக்கு..

முன்னடி நூறுதான் இருக்குன்னஇது கோபி

அது வந்து சாமான் வாங்குற காசு அதான்

இப்ப என்ன செய்வ ..

பாத்துக்க வேண்டியதான்.

மறு ரவுண்ட் முடிய என்ன போவலாம..

இருங்க போவலா..என்ன சொன்ன..

நீ போ. . நான் போறன்..நீ போ..

புகைப்பட தொகுப்பு








Saturday, December 20, 2008

வயல் நண்டும் கடல் நண்டும்

சிவப்பு, மஞ்சள் ,வெள்ளையில் ரோஸ், மேலே கருப்புமற்றும் வெள்ளை உருவங்கள் பசுமையாய் விரிந்திருந்த வயல்களுக்கு இடையே நகர்வதும் குனிவதுமாக இருந்தது.

குனிந்தவுடன் சிவப்பு மறையும் மஞ்சள் மறையும் பசுமை மட்டுமே விரிந்திருக்கும் சிறு இடைவெளி திடீரென சிவப்பும் மஞ்சளும் வெளித்தெரியும்.

என்ன பாக்குறிய…அன்பாய் விளிக்கும் குரலோசை நிமிடம் முகம் பார்த்து உடன் குனிந்து வளைகளுக்குள் கையை விடும்பாங்கு மிக கவனமாய் கண்கள் இரண்டும் உற்றுநோக்க இருவிரல்களால் பிடிக்கப்படும் வயல் நண்டு தான் கொண்டு வந்திருக்கும் பையில் போட்டு இறுக்கி பிடித்தாவாறு அடுத்த வளை நோக்கிய பயணம்.

போதும் என்ற எண்ணம் வரும்வரை பிடிக்கப்படும் வயல் நண்டுகள் குடும்ப நபர்களின் எண்ணிக்கை பொறுத்து அமையும்.

அன்றாட விவசாய கூலிகளின் அசைவ உணவு.

நண்டு எவ்வளவு கிலோ?

நூறு ரூபா…

என்னது நூறா.. பாத்து போட்டு குடும்மா அல்லது குடுப்பா..

நீ ..வேற..நண்டே கிடைக்கல..என்ன போட்டி தெரியுமா இதுக்கு..

சரி.சரி..ஒரு கிலோ குடும்மா, ப்பா…

இந்தா புடி ..எதாச்சும் குறைச்சுக்க…

ஊகும் குறைச்சே கேக்காதப்பா ..நீ நண்டுக்கு காசு குடுக்கல அந்தமணிக்கு எந்திரிச்சு போய் வாங்கிட்டு வரம்பார் அதுக்குதாப்பா..

நண்டு நல்லாருக்கும்மல..

நல்லா இருந்தாப்பா விக்கவே கொண்ட வருவேன்.

வாங்கும் திறன் உள்ளவர்களின் அசைவ உணவு.

Friday, December 19, 2008

கனவு குதிரை

அப்பா….. நிம்மதி பெருமூச்சு விட்டாள் அவள்.

உடல் வலி அதிகம் இருக்கும் தலை சுத்தலா இருக்கும்மா..

வெயிட்..கியிட்..தூக்கதம்மா.. பாத்து இருந்துங்க...

பெரியவங்க ஒருவரின் அட்வைஸ்.

மாதவிலக்கு தள்ளி போக போன நாள் முதலாய் கனவுகள் பூக்க ஆரம்பித்தது. கனவு குதிரையில் மிக வேகமாக பயணம் செய்தாள்.

வித விதமாய் கனவுகள் கண்டு உள்ளம் மகிழ்ச்சி அடைந்தாள். குளிப்பாட்டி உணவூட்டி ஆடைஅணிவித்து பள்ளி அனுப்பி இன்னும் எவ்வளவோ..

கடுமையான வயிற்றுவலி வழக்கம் போலவே இருக்க அதிர்ந்தாள்.

ஏன் இப்படி என்று தனக்குள் கேள்விகள்கேட்டபடியே கொட்டியது விழிகளில் கண்ணீர். இந்த முறை வெற்றி கிட்டிவிடும் என்ற நம்பிக்கையின் வழி ஏற்பட்ட ஏமாற்றம்.

உறவுகளின் வழியே இன்னமொரு வாய்ப்பை எதிர்நோக்கி...

Wednesday, December 17, 2008

உள்ளங்கை சூடு

சாரல் காற்றுடன் குளிர் வித விதமான ஆடைகளில் தன்னை மறைத்து கொண்டு குளம் நோக்கி சிறுவர்கள்.

குளக்கரையில் ஆ.. ஊ.. டேய் ஓடி போய் குளிடா.. நிக்காதேடா.. என்று சொல்லும் சிறுவனை நோக்கி

டேய்.. நீ பர்ஸ்ட்.. நான் அப்புறம்..

ஏப்பா.. குளிருது.. டேய் தள்ளாத..அப்புறம் நான்…

ஒரு வழியாக குளித்து முடிந்து பக்தி பாடல்கள் பாட கோவில் நோக்கி சிறுவர்கள் பாடல்கள் பாடி முடித்ததும்

அவர் அவர் உள்ளங்கைகளில் சூடாக தரப்படும் வெண்பொங்கல் சூடு தாங்காமல்

ஊவ்..ஊபூ.. ஊதியப்படியே வலம் இடம் மாற்றி ஆறவைத்து உண்பார்கள்.

இடம் மாற்றி ஆறவைக்கையில் சிதறி போகும் வெண்பொங்கல் காக்கை குருவிகளின் உணவாக, சூடாக உண்ணப்படும் வெண்பொங்கல் வாயும் சூடு தாங்காமல் முழுங்கவும் முடியாமல் நாக்கினால் இடம் மாற்றி ஆறவைக்கும் அவஸ்தை நிதானமாய் லவகமாய் உருட்டி ஆறவைத்து வீணாகாமல் உண்ணப்படும் வெண்பொங்கல்.

அய்யோ இந்தா சூடு .. எனக்கு வேண்டாப்பா ..

டேய் ..நீ தின்னுறா.. என மற்றவர்களின் கையில் கொடுக்கப்படும் வெண்பொங்கல்.

தாங்கற அளவு எதுவாயிருந்தாலும் தாங்கிடலாம், தாங்க முடியாத போது எதுவாயிருந்தாலும் பலவிதமா திசை திரும்பிவிடும் வாய்ப்புகள் அதிகம்.

புத்தக வாழ்க்கை

இல்லற வாழ்வில் இப்படிதான் நடக்க வேண்டும். பக்தியா இப்படிதான் செய்ய வேண்டும். ஒரு செயலா இந்த முறைதான் சாத்தியம் என்றுகூறும் புள்ளி விபரங்களை வைத்துக்கொண்டு அதன்படியே செயல்களை அணுகும் விதம் எல்லாமே இயந்திரதனமாய் அமைகின்ற விநோதம்.

உயிர்ப்புடன் கூடிய மகிழ்ச்சி அல்லது உயிர்ப்புடன் கூடிய துன்பம் என்பது செயலின் விளைவுகளாய் இருக்கையில் யாரோ எழுதுகின்ற வாழ்க்கை முறைகளும் புள்ளி விபரங்களும்படிக்கின்றவர்கள் , பின்பற்றுபவர்கள் வாழ்க்கையிலோ அல்லது செயலிலோ மிகச்சரியாக அமையவேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் எந்தளவிற்கு உண்மை.

மற்றவர்களுடைய வாழ்க்கையிலும் அத்தகைய எதிர்பார்ப்புகள் அமைந்தால் அதுஎத்தகைய கொடுமை.

புத்தக வாழ்க்கை வழி கிடைக்காமல் திண்டாடும் சமயங்களில் கிடைக்கும் பாதைக்கான வெளிச்சம் .

இயல்பான வாழ்க்கையில் புத்தக வாழ்க்கை என்பது ஓர் உதவி குறிப்பு.

Tuesday, December 16, 2008

எதார்த்தம் என்னவோ கடினம் தான்

காலங்கள் மாறுகிறது
சொல்லியபடி செயல்
காலச்சுழற்சியில்
காணாமல் போகும் மாயம்
எதிர்கால கனவுகள்
மெய் அல்லது பொய்
கிடைத்த வாய்ப்புகள்
கொடுக்கும் நம்பிக்கை
நானும் ஒரு
வெற்றியாளனாய்
கடிவாளம் அணியா
குதிரையாய்
எதார்த்தம் என்னவோ
கடினம் தான்
நேற்று தோற்றவை
நாளைய கனவாய்
இன்றைய நாளை
மறந்த.. என் மனதில்

கலாச்சாரம்

காலச்சூழல், இடம்
உயிர்ப்பின் வாழ்வுமுறை
கலாச்சாரம்.

Monday, December 15, 2008

ஏன்டா, என்ன இன்னா…..

கிராமத்து ஆள் தன்னுடைய தொலைக்காட்சி பெட்டியின் ரிமோட் பழுது ஆகிவிட்டதால் சரிசெய்ய பக்கத்திலிருக்கும் நகரத்திற்கு வந்தார்.

தொலைக்காட்சி சீர்செய்யும் கடைக்கு வந்து ரிமோட்டை சரி செய்யகொடுத்தார். அவர் வந்த சமயம் கடையின் மெயின் மெக்கானிக் இல்லை கடையில் வேலை கற்றுக்கொள்ளவந்த பையன்கள் இருவர் இருந்தார்கள்.

என்னங்க வேணும்? பையன்கள்

ரிமோட் சரி செஞ்சு குடுப்பா..

குடுங்க என்று வாங்கி ரிமோட்டை பிரித்து தொலைக்காட்சி சினிமாவில் முழ்கிவிட..

தம்பியலா..

போங்க போயிட்டு பத்து நிமிஷம் கழிச்சு வாங்க..

மற்ற வேலை முடித்து பத்து நிமிடம் கழித்து திரும்பி வர..

பையன்கள் வேறுவேலையில் முழ்கி இவர் வருவதை அறிந்தும் பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தினார்கள்.

அவருடைய ரிமோட்டைதான் சரி செய்கிறார்கள் என நினைத்துபொறுமையாக கிட்டதட்ட அரைமணிநேரம் நின்றிருப்பார்.

தம்பியலா …என்ன ரிமோட்ட சரி செஞ்சாச்சா..

அத சரி செய்ய முடியாது வேறதான் வாங்கனும்.

முன்னடியே சொல்லாம்ல தம்பியலா…

அதாம் இப்ப சொல்றோம்ல..

கோபம் தலைக்கேற கிராமத்து ஆள் ஏன்டா என்ன இன்னா மௌட்டி பய நினச்சுக்கிட்டியலா..

முட்ட…. கம்மானாட்டியலா.. என்று ஏகத்துக்கும் எகிற

பயந்து போன பையன்கள் இருங்கண்ண இந்த பாத்து குடுத்துடுறோம் என்று சொல்லி

அடுத்த ஐந்து நிமிடத்தில் சரிசெய்து கொடுத்தார்கள்.

அலட்சிய படுத்துதலையும் அவமதிப்பையும் யார் தாங்கிறதும் கொஞ்சம் கஷ்டம் தாங்க.

Saturday, December 13, 2008

கன்னி சாமியும் ஏர்டெல்லின் வியாபாரமும்.

கார்த்திகை மாதம் கருப்பு வேட்டி கட்ட ஆசைப்பட்டார்.

தின உழைப்பு தின கூலி கருப்பு வேட்டி கட்டினார் . முதல் வருடம் கருப்பு வேட்டி கட்டியதால் கன்னி சாமி ஆனார்.

கன்னி சாமி ஆனவர்கள் அவர் அவர் வசதிகேற்ப பத்து சாமிகளுக்கு மேல் அழைத்து வந்து பூசை நடத்தி விருந்து வைக்க வேண்டும்.

பத்துசாமி கொண்ட குழுவை அழைத்து பூசை வைக்க வேண்டுமென்றால் தினகூலிசாமி ரூ700 ம் மூன்று மரக்கால் அரிசியும் தந்தால் தான் பூசை வைக்க முடியும் என்று சொல்ல..

இருந்தால் செய்து விடுவார் இல்லாமை இயலாமை கோபம் தலைக்கேறி இப்படிதான் செய்ய வேண்டும் என்றால் இந்த கருப்பு வேட்டியே தேவையில்லை என்று போய்விட்டார்.

இது பக்தியா.. வியாபாரமா...

AIRTEL SERVICE MESSAGE (543212)

MOOLU MOOLUNU MODELS! VERUM Ru.5KKU! MISS PANNATHINGA!

12.12.08 அன்று 5.53pm வந்த எஸ்.எம்.எஸ் செய்தி .

வளர்ந்தநிறுவனத்தின் வியாபார கண்ணியம் இதுதான்.

ஆமாம் இது வியாபார கண்ணியமா?

நடுநிலைமையா ..அய்யோ வேண்டாம்

டேய் நீ சொல்லுடா..

எந்த பக்கம் நீ இப்பவே சொல்லு..

நான் நா வந்து….

என்ன அந்த பக்கமா

சீக்ரம் சொல்லுடா நாயே

இல்ல நா ..எந்.. பக்க இல்லே..

அந்த பக்கம் போமாட்டில்ல.. போன அப்புறதான் இருக்கு..

நீ வாடா ஆளு நாங் பாத்துக்குறோம்

அவங்க என்ன செய்றாங்க பாப்போம்

இல்ல நா வல்ல..

பயப்படாதேடா நாங் சொல்றோம்ல

நீ வல்லேல்ல.. வாங்கடா வெலாட போவோம்.

ஏக்கம் நிறைந்த மனதுடன் விளையாட முடியாமல்நடுநிலைமை பரிதாபமாய் நின்றது.

Friday, December 12, 2008

பெரிய இடம் பெரிய சம்மந்தம்

பெரிய இடம் பெரிய சம்மந்தம் திருமணம் மண்டபம் களை கட்டியது.

பன்னீர் தெளிக்க ஆள் வெற்றிலை சீவல் சந்தனம் கொடுக்க தனி தனியாக ஆள் பந்தலில் நின்று சிரித்தப்படி வரவேற்று கொண்டிருந்தார்கள்.

காசுக்காய் செய்பவர்கள் செய்துதானே ஆகவேண்டும்.

இருகைகூப்பி முகம்மலர்ந்து வரவேற்று கொண்டிருந்தார்கள் திருமண வீட்டார். அவர்களின் வரவேற்பு திருமணத்திற்கு வந்தவர்களின் பதவி அணிதிருந்த ஆடை அவர்கள் வந்திறங்கிய வாகனம் அணிதிருந்த நகை களே நிர்மாணம் செய்தது.

பெண்வீட்டாருக்கு சொந்தம் போலும் மிக எளிமையாக இருந்தார். வறுமையாக அல்ல ஆனால் ஏழையாக இருந்தார் பெண்வீட்டாரின் பார்வைக்கு போலும் திருமண வரவேற்பு வரவேற்பாகவே இருந்தது.

அந்த மனிதரின் முகபாவமே அவரின் மனநிலையை காட்டியது. ஆனாலும் என்ன செய்வது , ஓரமாய் உட்கார்ந்திருந்தார். ஒருவருடைய வெற்றிக்கும் தோல்விக்கு ஒரு காரணம் இருக்கும் இவருடைய இந்நிலைமைக்கு என்ன காரணமோ தெரியவில்லை.

பணமிருந்தா எதிரியும் பங்காளி, பணமில்லேன்னா பங்காளியும் எதிரி.

Thursday, December 11, 2008

காசு இருந்தா வருங்க..!

ரெண்டாயிரம் போதுங்க..

அதுகிட்ட சொல்லாதீங்க..

ஆமா அவர் தான் கடைசியா சீட்ட எடுத்துகிட்டு வருவாரு

ஆங்..இப்ப முடியாது

சாவி போட்டாச்சுல..

எப்படிதான் எடுக்குதுன்னு தெரியலிங்க.. எடுத்துபுடுதுங்க..

விறவு வாங்கிட்டு போவுனுங்க

போயிட்டு..அரிசி வாங்க வரனுங்க..

எத்தனநட நடக்குறதுங்க.

பசங்கள நமக்கு வராதுங்க.. அதுங்கெல்லாம் காசு இருந்தா நம்மகிட்ட வருங்க

தன்னுடைய நகையை ஈடாக வைத்து பணம் கடனாக பெற்றுச்செல்லும் ஒரு வயதான அம்மாவின் புலம்பல்கள்.

Wednesday, December 10, 2008

வலிமை


இயற்கை சூழல்
உயிர்ப்பின் உயிர்வாழ்
தகுதி வலிமை.

Tuesday, December 09, 2008

புகழ்

குறிப்பிட்ட காலம்
வெல்லமுடியா முடிவுகளால்
கிடைப்பது புகழ்.

Monday, December 08, 2008

பகலும் இரவும் வரும் போகும்

கேள்வி குறியாய்
எல்லைகளின் பாதுகாவல்
பிய்ந்து போன
வேலிகள்

உடைந்து நிற்கும்
முன்சுவர்
மேற்கூரை இல்லா
தனித்து நிற்கும்
கல்தூண்கள்

சுண்ணம் பெயர்ந்துபோன
சுவர்கள்
புது ஓவியமாய்
மழை துளிகளின் கோடுகள்
உட்புற சுவர்

உட்கார ஆட்கள் இல்லா
சாய்வு நாற்காலிகள்

மௌனம் கலைக்கும்
சிட்டு குருவிகள்
சத்தம்

சுருங்கிய தோலாய்
நடமாடும் உயிர்கள்

பகலும் இரவும்
வரும் போகும்.

மாட்டு தீவனமா... மதுவா...

விவசாயி அவர் தினமும் வயலுக்கு போய் வேலை செய்து வீடு திரும்பியவுடன் மாட்டிற்கு தேவையான தீவனம் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க கடைத்தெரு வருவது வழக்கம்.

வயலில் கடுமையாக வேலைப்பார்த்து வரும் நாளில் உடல் வலி போக்குவதற்காக கொண்டு வரும் பணத்தில் கொஞ்சமாய் மது அருந்துவது வழக்கம்.

மது அருந்தும் நாள்நண்பர் யாருடனாவது கூட்டுச்சேர்ந்து மது அருந்துவார்.

அன்றைய தினம் அவரிடம் இருந்த பணம் மாட்டிற்கு தேவையான தீவனம் வாங்கலாம். தீவனம் வாங்க கடைத்தெரு வரும்பொழுது அவர் நண்பர் மது அருந்த அழைத்தார்.

குழம்பினார் மாட்டு தீவனமா... அல்லது மதுவா...

மனித மனம் தானே மாட்டின் நலன் பின்னுக்குபோய் மது என்று மனது முடிவெடுக்க

தன்னுடைய பங்களிப்பாக தன்னிடம் இருந்த பணத்தை கொடுத்து விட்டு

தன்மனதில் “ வழக்கமாய்பொருட்கள் வாங்கும் கடையில் கடனாக வாங்கிவிடலாம்” என்று நினைக்க..

மதுவும் உள்ளே சென்று தன்பணியை செவ்வனே செய்ய ஆரம்பித்தது. அன்று கடையில் கூட்டம் அதிகம்.
இவர் மனதில் கூட்டம் குறையட்டும் கடன் கேட்கலாம் என்று நினைத்தப்படி நின்று கொண்டே இருந்தார்.

காசு இருந்தால் வாங்கலாம் . கடன்அனுமதி பெற்றுதானே ஆகவேண்டும் கடை முதலாளியின் முகத்தைப்பார்த்தவாறு இவர் .

Sunday, December 07, 2008

புதுசா போட்ட ஜீன்ஸ்

அவனுடைய 20 வயதில் ஆசைப்பட்டது. மற்றபையன்கள் போடுவது மாதிரி நாமும் ஒரு ஜீன்ஸ் போட வேண்டும். தன் குடும்பம் இருந்த சூழலில் ஜீன்ஸ் பேண்ட் கனவு அவனுக்கு கனவாகவே இருந்தது.

அவன் குடும்பத்தில் அவனை ச்சோ்த்து ஒன்பது போ். குடும்ப நிர்வாகம் புள்ளைகளின் தேவைகள் படுகஷ்டம்.
ஏதோ மானம் காக்க துணி உயிர் வாழ உணவு கிடைத்ததே பெரும்பாக்கியமாய் இருந்தது.

ஊதியம் சிறுதொகையாக கிடைக்கப்பெறும் வேலை அமையப்பெற்றான். ஊதியம் வீட்டுக்கும் அவனுடைய சிறுதேவைகளுக்கும் சரியாக இருந்தது. சில மாதங்களில் போதுமானதாக அமையவில்லை.

ஆசைப்பட்ட மனது நினைவுப்படுத்த தவறவில்லை.
ஏக்கமும் இயல்பாய் இருந்தது.

தன் கனவு பொருளான ஜீன்ஸ் பேண்ட் க்காக சேமிப்பான்.
அந்த தொகையும் திடீரென ஏற்படும் செலவினங்களுக்கு கொடுத்து விடுவான்.

ஒவ்வொரு வருடமும்தீபாவளிக்காக அவனுடைய நண்பர்களில்
ஒருவர் சட்டையோ, பேண்டோ எடுத்து கொடுப்பார். எடுத்து கொடுப்பதை வாங்கிகொள்வான்.

அவனுடைய ஆசை யும் கனவாகவே இருந்தது.

இந்த வருடம் தீபாவளி வந்தது. அவன் சற்றும் எதிர்பாராது அவனுடைய நண்பர் ஜீன்ஸ் பேண்ட் எடுத்துக்கொடுத்தார்.

மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனான், ஜீன்ஸ் அணிந்த அன்று அவன் மனதில் சந்தோஷ உணர்வுகள் பூத்துகொண்டே இருந்தது.

ஆனாலும் தான் சம்பாதித்து வாங்க முடியவில்லையே என்று தன்மனதில் வேதனை அடைந்தான்.

Friday, December 05, 2008

தற்கொலையில் தோற்றவன்

நண்பர் ஒருவர் வேலையை மாற்றி கொண்டே இருப்பார். சில மாதங்கள், சில நாட்கள் வேலை மாறி கொண்டே இருக்கும்.

நிரந்தர வருமானம் எதுவும் கிடையா சூழல்.
எப்படிடா புள்ளக்கு புத்தி வரவக்கறது யோசிச்சு ..குடும்ப சகிதமா பொண் பாத்தாங்க காண்ணாலம் பண்ண நம்மாளுக்கு..

அதுலயும் நம்மாளு ..பாத்தீங்கண்ணா நிச்சயம் வர போயி பொண்ணு வேண்டான்னு சொல்லிருவாரு

மாட்னது யாருனு பாத்தீங்கனா மாப்பிள்ள புள்ளய ரெக்மண்ட் செஞ்சவங்க, மாப்பிள்ள பெத்தவங்களுதான்.

எப்பா உன்னோட விசயத்துல தலையிட மாட்டோம் சொல்லிட்டு சொந்த பந்தமும் வந்தவங்க போனவங்க கழட்டிகிட்டாங்க இது ஏன்டா வம்புன்னுட்டு ..

நம்மாளு ரொம்ப கவலையாயி..

கடைக்கு ரெண்டு மாத்தர மேனி அஞ்சு ஆறு கடைங்க..

மாத்தரல்லாம் நம்மாளு வயித்துல..

ப்ரெண்டுகிட்ட சொல்லிருக்கார் நாளக்கு காத்தால பாடை கட்டிடுங்கன்னுட்டு..

நம்மாள நோன்டி சேதி என்னன்னு கேட்டா துாக்க மாத்தர முழுங்கி்ட்டேன்னு..

அப்புறம் ஆஸ்பத்திரி தான். நம்மாளு தற்கொலையில தோத்து போயிட்டாங்க.

Thursday, December 04, 2008

சண்டை எதுவா இருந்தா என்ன? சங்கதிதாங்க முக்கியம்.

ஒரு புருசன் பொஞ்சாதிங்க

புருசன் வேல முடிஞ்சு ரா வுடு திரும்புனாங்க..
பொஞ்சாதி ரொம்ப யோசனையா உட்காந்திருந்தா..

புருசன் கேட்டான் என்னடி யோசன..
அங்க கட்டிகிட்டு இருக்காங்கல அந்த வீட்ட கட்ட எவ்வலவு ஆவுங்க.

ஏன்டி கேக்குற..

சும்மா சொல்லுங்க…

திரும்பவும் ஏன்டின்னா, புருசன்

அவங்கபாட்டுக்கும் ரொம்ப ஆயிடுச்சிகிறாங்க…
என்னங்க அவ்வலவ ஆயிறுக்கும்..

ஏன்டீ அறிவுருக்கா உனக்கு. ஒன்னோடு வீட்டு சேதியே தீக்கமுடியாம கிடக்கு இந்த சேதி ரொம்ப அவசியமாடீ.. போடி போன்னா , புருசன்

என்னது அறிவுரு்க்காவ..பொஞ்சாதி

அப்புறம் என்ன சண்டைதாங்க.

Wednesday, December 03, 2008

அன்புள்ள காதலா அன்புடன் .... 2

எட்டி நிற்கும்
வாலிப கூட்டத்தில்
உன்னை தேடும்
எனது கண்கள்

ஆசைகள் ஆயிரம்
வெளியிடாத
எனது இதயம்

தொடக்கம்
உன்னிடம் இல்லா
எனது காதல்

ஓர் பிறவிகுருடனின்
சித்திர கனவுகளாய்
உன்நினைவுகளோடு



பொதுநலம்

தகுதியுடன் கூடிய தன்நலம்
பிறர்நலம் பேணுதல்
பொதுநலம்.

Tuesday, December 02, 2008

சுயநலம்

சூழல் பற்றிய ஆர்வமின்மை
தன்நலம் பேணல்
சுயநலம்.

Monday, December 01, 2008

விலை ஏறிய மயிலை மீன்

30.11.2008 வீட்டில் மீன் கேட்டார்கள். மீன் மார்க்கெட் சென்றேன். முதல் நான்கு நாட்கள் பெய்த மழையினால் உயிர் கெண்டை மீன்கள் எதுவும் வரவில்லை.

சாதாரண நாட்களில் விலைப்போகாத வழு வழுப்பான உடலமைப்பு கொண்ட மயிலை மீன்கள் இருந்தது. சாதாரண நாட்களில் ஒரு கிலோ ரூ50 வாங்க ஆட்கள் இருக்காது. அன்று அதனுடைய விலை ரூ70 என்றார்கள்.

நான் வாங்கினேன் எனக்கு பிறகு இன்னொருவர் மூன்றாமவர் வந்து விசாரித்தவுடனேயே கிலோ 80 என்றார்கள்.

துாக்கி வாரி போட்டது எனக்கு ..

நல்ல வியாபாரமா இது அல்லது வியாபார தந்திரமா தெரியவில்லை .

நல்ல வேலை அவர் வாங்க வில்லை. அப்புறம் மீன் விலை என்னவென்று தெரியாது.

கல்வி பயிற்சி நிறுவனத்தின் பிரச்சுரம் ஒன்று பார்த்தேன்.
அதில் “முடங்கினால் சிலந்தியும் உன்னை சிறை பிடிக்கும், எழுந்து நடந்தால் எரிமலையும் உனக்கு வழி கொடுக்கும்”

என்ற தன்னம்பிக்கை வாசகத்தை உங்களின் சிந்தனைக்காக…

Sunday, November 30, 2008

கட்டு அவிழ்த்த மாடு

கடை முடித்து வீடு திரும்புகையில் இரவு மணி பத்தாகியிருந்தது. வீடு எங்கள் ஊர் குளக்கரை வரை நடந்து சென்று திரும்ப ...

தெரு முடிவின் எதிர் புறம் நேர் கொண்ட பார்வையுடன் விரைவான நடை தெரு பாதையின் நடுவில் வந்து கொண்டிருக்கும் அந்த சிகப்பு மாடு இரவு விளக்கின் வெளிச்சத்தில் ஆள் இல்லா அந்த நேரம் நான் பயத்தில் ...

எண்ணற்ற கேள்விகளாய் என் மனது ஏன் இந்த வேகத்துடன் மாடு வருகிறது ? யாருடைய வயலில் போய் மேயப்போகிறதோ தெரியவில்லை என்கிற கவலை வேறு (என் வயலும் அதற்குள் அடக்கம்)

நான் யோசிக்க... மாடு நெருங்க ...

நடையின் வேகம் குறைந்து நின்று நிமிர்ந்த என்முகம் நோக்கிய மாடு அதன் இலக்கை திசை திருப்பி இரவின் பரப்புக்குள் எங்கேயோ ...

சரியான வழிகாட்டுதல் இல்லா மனசும் இப்படிதாங்க நாம தேடி போற இலக்கானது இடையில வர்ற தடையினலா திசை மாறி போயிருதுங்க சரியான வழிகாட்டுதல் அவசியங்க ...

இல்லாட்டினா சரியான வழிகாட்டிய தேடிபோறது அவசியங்க

(தொடர்வோம்)

தடுமாறிய மனம்.

29.11.2008 காலை வாய்க்கால் பக்கம் சென்றேன். வாய்க்கால் இரு கிளையாக பிரியும் இடம் அதை ஒட்டிய சிறுபள்ளம்
ஒருவர் கீழ் குனிந்து அதை கைகளால் துலாவி கொண்டிருந்தார்.

அவரது செய்கையால் ஈர்க்கப்பட்ட நான் அவர் அருகில் சென்று என்ன என்று வினவ..

விறால் மீன் ஒன்று எனச்சொல்லி தன்கைகளால் துலாவி கொண்டே இருந்தார்.

விறால் மீனும் அவருக்கு போக்கு காட்டி அங்கும் இங்கும் செல்வதாக இருந்தது.

கடைசியில் ஒரு ஓரமாக ஒதுங்கியது எனக்கு தெரிய அவருக்கு தெரியவில்லை.

என் ஆசை நான் சொல்லவில்லை அது இருக்கும் இடத்தை..
நாம் பிடித்து கொண்டு போய்விடலாம் என்ற மனதுடன் அவர் தடுமாற்றத்தை பார்த்து கொண்டே நின்றேன்.

கடைசியாய் அது இருக்கும் இடம் அறிந்து தன்துண்டினால் அவர் பிடித்தார். தடுமாறிய மனதுடன் ஏதோ சங்கடம் ஆட்கொள்ள அந்த இடம் விட்டு நகர்ந்தேன்.

Saturday, November 29, 2008

நாடோடி

25,26.11.2008 கிழமைகளில் எங்கள் ஊர் பகுதிகளில் (தஞ்சை மாவட்டம்) அறிவிக்கபடாத ஊடரங்கு உத்தரவு. காரணம் மழை யும் ,மழையுடன் கூடிய அதிவேக காற்றும்.

நீங்கமற நிறைந்திருந்த தண்ணீர் , மின்சாரம் இல்லை மின்சாரம் சார்ந்த அத்தனையும் பயன் இல்லாமல் போனது.

இந்த மூன்று நாட்களிலும் நண்பர்களுடன் நான் நாடோடியாய்

பொழிந்து போன தண்ணீரில் எதிர் நீச்சல் போட்டு முன்னேறிய வளர்ப்பு மீன்கள். வளர்த்தவர்களை மறந்து
மற்றவர்களிடம் பிடிபட்டும். பிடிபடாத மீன்கள் வேறு இடம் நோக்கி விரைந்தது.

இரை தேடி வெளிவந்த உயிரினங்கள்தார் ரோடுகளில் சென்ற ஒரு சில வாகனங்களில் அடிப்பட்டு உடலை விட்டு உயிரை இடம் மாற்றி கொண்டது.

ரோடுகளில் சென்ற மனிதர்கள் இனம் கண்டுக்கொள்ள வைத்த
உயிரினப்பெயர்களை

“பாம்பு செத்து கிடக்கிறது, தவளை செத்து கிடக்கிறது” என திரும்பவும் ஞாபகப்படுத்தி கொண்டார்கள்.

தன்பணி முடித்த மரங்கள் நிம்மதியாய் தலை சாய்த்து படுக்கையில் வீழ்ந்தது.

ஒன்று இரண்டு கடைகள் வியாபாரிகள் திறந்து வைக்க எல்லாவற்றிலும் அவசரப்பட்ட மனிதர்கள் இதிலும் முன்டியடித்து பொருட்கள் வாங்கி தானும் தன்னைச்சார்ந்தவர்களையும் காப்பாற்றினார்கள்.

நாடோடியாய் நான் திரிஞ்சாலும் நேரத்திற்கு வீட்டுக்கு போய் சாப்பிட்டேன். எனக்கு சாப்பாடு போட மற்றவர்கள் இல்லாததால் எனது வீடு நோக்கி நான் போக வேண்டிய அவசியம்.

Friday, November 28, 2008

ஒழுக்கம்

விரும்பிய முடிவு

எல்லைக்குட்பட்ட செயல்

ஒழுக்கம்.

Monday, November 24, 2008

பறிக்க மனமில்லாமல்…..

24.11.08காலை குளத்தில் குளித்து விட்டு வீடு திரும்பினேன்.

இரத்த சிவப்புடன் செம்பருத்தி மலர் அதனுடைய பச்சை இலைகளிடைய மலர்ந்திருந்தது. கை நீட்டி பறிக்க எத்தனிக்க ..

காரணம் காலை ஒரு சிவப்பு செம்பருத்தி மலர் சாப்பிட்டால் இதயத்திற்கு நல்லது என்று நான் படித்த மருத்துவ குறிப்பால் தினமும்ஒரு செம்பருத்தி மலர் எனக்கு மருந்தாகியது. நோய் இல்லாமல் சாப்பிட்டால் அது மருந்தா தெரியவில்லை எனக்கு.

அதுநாள் வரை எதுவும் அறியாமல் அந்த மலரை பறித்த தின்ற எனக்கு இன்று மடடும் மனது என்னவோ செய்தது..

அது மலர்திருந்த அழகு அதனுடைய முழுமைகெடுக்க மனமில்லாமல்பறிக்கஎத்தனித்த கைகளை பறிக்காமல் இழுத்துக்கொண்டேன்.

இயற்கை கொடுத்த அழகை சிதைக்க நான் யார்? என்ற வினாவுடன் ...

என்னைப்பற்றி கவலைப்பட யார்?

23.11.08 காலை முதல் கருமேகம் சூழ்ந்த வானம் மதியம் நெருங்கும் சமயம் மழை ஆரம்பித்தது. எப்போதும் மதியம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு போக வேண்டும்.

மழை பெய்து கொண்டிருந்தது. கடையை மூடிவிட்டார்கள் மழை விடும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன் வீட்டுக்கு சென்றுவிடலாம் என்ற நினைவுகளுடன் காலம் தன்பணி செய்ய நேரம் ஆகிக்கொண்டிருந்தது.

மழைக்காக ஒதுங்கிய ஆடு துணையாக வந்தது. தனிமை எல்லா சமயங்களிலும் ஒத்துவராது என்பதை அனுபவித்து உணர்ந்தேன். பசி வேறு மனதில் ஏதோ ஏதோ நினைவுகளின் சங்கமம் வேறு

மழை நின்றபாடில்லை துணையாக நின்ற ஆடும்மழையில் நனைந்தபடி வேறுஇடம் நோக்கி நகர்ந்து விட..

சாலையில் அவர் அவர்கள் குடை பிடித்துகொண்டு மழையில் நனைந்துகொண்டு சென்றபடி இருக்க என்னுடைய பசி பற்றி யாரும் கவலை பட்டதாக தெரியவில்லை.

மழை நின்றபாடில்லை நானும் நனைந்துகொண்டே எனது வீடு நோக்கி…

Saturday, November 22, 2008

புகைப்பட தொகுப்பு

நிழலும் நிஜமும் 1

முடிவை நோக்கி


நிழலும் நிஜமும் 2

நாட் குறிப்பு 4

22.11.2008 முதல் நாள் எங்கள் வீட்டில் உள்ளவர்கள் சொந்தகாரர் வீட்டு விழாவிற்கு சென்றுவந்தார்கள். அவர்கள் வைத்து கொடுத்த வெற்றிலை சீவல் நிறைய இருந்தது. வெற்றிலைபோடுபவர்கள் யாரிடமாவது கொடுத்து விடலாம் என்று வேலைக்கு வரும்பொழுது வாங்கி வந்தேன்.

வரும்பொழுது எனக்கு முகம் தெரிந்தவர்கள் யாரவது தென்படுகிறார்களா அதுவும் வெற்றிலை போடுபவர்கள்
தென்படுகிறார்களா என…

தேடிய கண்களும் மனதும் தேடியபடியே..

பொருள் வீணாக போய்விடகூடாது என நினைத்து எடுத்துவந்தேன்.

தெரிந்தவர்களாக இருந்தால் பராவாயில்லை தெரியாதவர்களை அணுகுதலில் என்னிடம் தயக்கம்

எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாய், வெற்றிலையும் வாடியது.

Friday, November 21, 2008

உயிர்ப்பு

சூழலினால்
மூலக்கூறுகளின்இணைவு

உயிர்ப்பு

Thursday, November 20, 2008

நாட் குறிப்பு 3

19.11.2008 மதியம் 2.00 மணி எனக்கு சாப்பாடு போட்டாங்க எங்க வீட்டுல நான் சாப்பிடற எடத்துலேந்து பாத்தா தெரு வாச, கொல்ல வாச ரெண்டயும் பாக்கலாமுங்க

வானம் மப்பும் மந்தாரமுமா சிறுதுாறல் கொல்லவாச நிலப்படியில தாய்கோழி தன்குஞ்சோட உட்காந்து இருந ்ததுங்க அதுல ஒரு குஞ்சு தாயோட முதுவுல ஏறி நின்னுதுங்க அந்த குஞ்சு கீழ விழமா மெதுவா அதனுடைய போக்குக்கே வளைஞ்சுதுங்க தாய் கோழி காற்றோட போக்குக்கு அசையற நாணலா..

அதோட செய்கையில ஏதோ ஒரு லயம் இருந்ததுங்க.. உண ர தொிஞ்சுதுங்க என்னன்னு சொல்ல தொியலங்க..

Tuesday, November 18, 2008

நாட் குறிப்பு 2

17.11.2008 மதியம் 2.45 மணிக்கு எங்கள் ஊ ர் குளக்கரைக்கு நண்பனுடன் சென்றேன். அப்போது தான் அங்கு வழிப்போக்கர் ஒருவர் சாப்பிட்டு விட்டு பாதியளவு சாப்பாட்டுடன் அவருடைய சாப்பாட்டு பொட்டல த்தை போட்டு விட்டு சென்று விட ..

இரை தேடிய காகம் தன் இரண்டு குஞ்சுகளுடன் அங்கு வந்தது , தாய் காகம் தன் அலகால் இரையை க்கொத்தியவுடன்“கா..கா” என்று கத்தியபடி குஞ்சு தன்னுடைய அலகை திறந்தபடி நிற்க தாய் தன்னுடைய அலகால் இரையை அதனுடைய அலகுக்குள் தினித்தது

என் நண்பன் சொன்னான் எவ்வளவு அன்புடன் உணவு தருது பார் என்றான். நான் நினைத்து கொண்டது தாய் தன் குஞ்சுகளுக்கு வாழ தேவையான ஒரு நிகழ்வை கற்றுகொடுப்பதாக..

எங்கள் இருவருடைய பார்வையும் வேறாக இருந்தது , இதற்கு நான் வளர்ந்த விதமா.. அவன் வளர்ந்த விதமா.. சிந்தித் தபடியே

Monday, November 17, 2008

அன்புள்ள காதலா அன்புடன ...

பொங்கி பெருகும்
உனது ஆண்மை
உற்சாக துள்ளல்
உனது விழி
அமைதி
உனது முகம்
இதழ்களில் தவழும்
உன் புன்முறுவல்
நான் ரசிக்க
உன்னில் கண்டவை
சிரிக்க வைத்து
சிரித்து பேசி
நீ செல்ல
உனக்கு தெரியாமல்
உனை பின் தொடரும்
என் இதயம்
என்னில் தானா ...

Sunday, November 16, 2008

நாட் குறிப்பு

நாட் குறிப்பு

16.11.2008 மாலை மணி 6.00 கடையின் மேற்கூரையை பார்த்து கொண்டிருந்தகண்கள் கூரையின் மேற்புறத்தில் மெதுவாய் நகர்ந்து கொண்டிருந்த பல்லி தன் இரையை நோக்கி முன்னேறியது வருவதை அறியாமல் நின்று கொண்டிருந்த தட்டான் கண் இமைக்கும் நேரத்தில் பல்லியின் வாய்க்குள்.......

பல்லியின் பசி தட்டானின் உயிராய்இதில் நன்மை எது? தீமை எது? கேள்வியாய் மனது...

பரிணாமம்

சூழல் உயிர்
மூலக்கூறுகளின்
பல்வேறுபட்ட வளர்ச்சிநிலை பரிணாமம் .

Wednesday, November 12, 2008

வீரம்

உயிர் காக்க
தசை பலத்தின்
தொடர் எதிர்ப்பு வீரம் .

Sunday, November 09, 2008

கருணை

இரக்கம்
வாழ்க்கை அர்ப்பணிப்பு
கருணை .

Thursday, November 06, 2008

உனது வெற்றி உனக்கு உரியதே

உனது வெற்றி
உனக்கு உரியதே
எல்லோருக்கும் அல்ல
உன் தனிதன்மை
உனக்கு அமைத்த
வெற்றி
காலங்களால் நீ
வளர்ந்து
சூழ்நிலைகளால்
உரம் ஊட்டபட்டு
கனியும் நேரம்வந்தவுடன்
கிடைத்த வெற்றி
நான் எனும்
அகந்தையினால் அல்ல
ஆணவம் தலைமேல்
உட்காரும்
கவனி
உண்மை தெரியும்
அதுவரை நீ
நீயாக இருப்பாய்
புதுமைகள் மலர
உனை நோக்கு
உண்மையை அரவணை.

Wednesday, November 05, 2008

இரக்கம்

துன்பம் கண்டு
துன்புற்று உதவி
செய்யும் எண்ணம் இரக்கம்.

Sunday, November 02, 2008

பூகம்ப வேதனை

உயிர் அற்ற
சடலங்களுக்கிடையே
உயிர் தப்பிய
குழந்தையின் பசி
சோற்றுக்காய்
தாயை தேடும் கண்கள்
ஆதரவாய் உணவு நீட்டிய
பல கரங்கள்
குழந்தையின் கண்கள்
அன்பான தன்தாயின்
கரங்களை தேடி
வன்முறையாய் பசி
உணவு ஊட்டிய
கைகளில் அடக்கம்
அடங்கிய பசி
குழந்தையின்
அடுத்த தேடலாய்
தன்னோடு விளையாடும்
தம்பி பாப்பாவை நோக்கி
பூமி தாயின்
வினாடி கோபமாய்
குழந்தையின்
நிரந்தர வேதனை.

Thursday, October 30, 2008

சஞ்சலமாய் மனது

கண்களை கவர்ந்த
வண்ணம்
ஆடை உடுத்திய
கைநாடி பிடித்து
மருந்துவம் பார்க்கும்
மருத்துவர் தன்
வயிற்று பிழைப்புகாய்
அங்கும் இங்கும்
தெருவில் அலைந்தவராய்
ஆடை வண்ணம் கவர
கண்களால் உற்றுப்பார்க்க
என் கண்களை
உற்று நோக்கியவராய்
ஜயா..
சித்த மருத்துவம்
வந்து விழுந்த
வாய் வார்த்தைகள்
விரும்பாது
என் முகம் திருப்ப
திரும்பவும்
என் முகம் நோக்கியவராய்
மருத்துவம் பார்த்து
காசு பார்க்கும் ஆவலாய்
அவர் மனது
விரும்பாமலும் விரும்பியும்
வெளிகாட்டும்
எனது முகம்
சஞ்சலமாய் மனது.

Tuesday, October 28, 2008

எல்லாம் நிகழும் எதுவும் நிகழும்

நடப்பது எளிது
எனில்நடந்து விடு
எதற்காக காத்து நிற்கிறாய்
நீ காத்திருக்கும் நேரம்
யார் யாரோ
உன் வழிப்பாதையில்
அவர்களைபின் தொடர்பவனாய் நீ
பின் தொடர்வது எளிது
வழி நடத்துவது கடினம்
பின்னால் திரும்பு
அனுபவங்கள்
உனை அரவணைக்க
முன்னால் பார்
எதிர்காலங்கள் வழியாய்
அந்த கணம்
நீ நடந்தாக வேண்டும்
இல்லையேல் இறந்த காலங்களுக்குள்
சிதைக்க படுவாய்
எதிர்காலம் என்னவோ
பொய் தான்
பொய் தான் உன்வாழ்வு
நட...
வழிபடும் தடைகளை
மெதுவாய் கட...
எல்லாம் நிகழும்
எதுவும் நிகழும்
இது தான் நிகழ
அவசியமில்லை
ஏற்றுக்கொள் எல்லாம்
உனக்கு உரியதே


Friday, October 24, 2008

உதவி

இயலாமை பிறர்க்கு
செயல் முடிப்பவர்கள்
செய்த செயல் உதவி .

Monday, October 20, 2008

பொய்

தவிர்க்க முடியா சூழல்
தன்னை காத்துக்கொள்ள
வெளிவந்த மனித வார்த்தை பொய் .

Sunday, October 19, 2008

புகைப்பட தொகுப்பு

உதவி

இது நிஜமல்ல

உழைச்சாதாங்க ஒரு கவளச்சோறு




Friday, October 17, 2008

உண்மை

முடிவில் ஒரேநிலை
தொடர் நிகழ்வு
உண்மை .

Tuesday, October 14, 2008

கல்வி

மனிதன் இயற்கையோடு
ஒன்றிணைய , வேறுப்படுத்தி கொள்ள
ஏற்படுத்திய தந்திரம் கல்வி .

Saturday, October 11, 2008

விற்பவனுக்கு ஒரு கண் போதும் வாங்குபவனுக்கு நூறு கண்கள் வேண்டுமாம் !

இங்க் பேனா தேவைபட்டதால் அருகில் பக்கத்து நகரத்துக்கு செல்லும்போதுதரமான தயாரிப்பு நிறுவத்தின் பேனாவை கேட்டு வாங்கினேன்.

வீட்டிற்கு வந்து எழுதிப்பார்க்கையில் இங்க் கசிந்து என்னுடைய கைவிரல்கள் எல்லாம் இங்க் கறை.

நான் திரும்பவும் சென்று மாற்றுவதென்றால் எனக்கு ஆகும் போக்குவரத்து செலவிற்கு ஈடாக இன்னமொரு ஒரு புதியபேனா வாங்கி விடலாம்.

இந்த நிகழ்வில் விற்பவனுக்கு ஒரு கண் போதும் வாங்குபவனுக்கு நூறு கண்கள் வேண்டும் என்பது எந்தளவிற்கு உண்மை.

நம்பிக்கையுடன் நான் வாங்கியது புகழ்ப்பெற்ற தயாரிப்பு நிறுவனத்தினுடைய பேனா. ஆனாலும் எனக்கு ஏற்பட்ட பொருளாதார நஷ்டம் மனஅமைதி குறைவுகட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன்.

நாம் எவ்வளவுதான் விழிபுணர்வுடன் செயல்கள் செய்தாலும் இத்தகைய சங்கடங்கள் தவிர்க்க முடியாதவை.

ஓவ்வொருடைய வாழ்க்கையிலும் சம்பவங்கள் வேறாய் சங்கடங்கள் நிகழும். நம் வரையில் நாம் சரியாக இயங்கி அதற்கு மேலும் இது போன்று நிகழும் சங்கடங்களை ஏற்றுக்கொள்ள கற்றுக்கொள்வோம்.

(தொடர்வோம்)


அறியாமை

உயிர்ப்பின் தேவை
உணவைப்பெற வழி தெரியா
நிலை அறியாமை .

Monday, October 06, 2008

அழிவு

சூழல் மாற்றம்
மூலக்கூறு சேர்க்கைகளின்
விலகல் நிகழ்வு அழிவு .

Saturday, October 04, 2008

ஆக்கம்

சூழல்
மூலக்கூறு சேர்க்கைகளின்
தொடர் நிகழ்வு ஆக்கம் .

ஒன்றாய் ஓரே உணர்வாய்

மகிழ்ச்சியை பரவ விடு
இயற்கையை அனுபவி
இயற்கையுடன் ஒன்றினை
நீயும் இயற்கையே ...
உனையே நீ
உண்டு பண்ண
வழி தெரியுமா ?
புதிர் அது
புரிந்து கொள்ள
முயற்சி செய்
புரிய நான் மறைய
நீ தெரிவாய்
இயல்பாய் இருப்பாய்
எதையும் ஏற்றுக்கொள்வாய்
அது இயற்கை
கொண்டுவர தெரிந்ததற்கு
கொண்டு போகவும் தெரியும்
ஆக்கம் வளர்ச்சி
அழிவும்
சுழலும் சக்கரங்கள்
உட்செல்வோம்
அதே வேளையில்
வேறு ஒன்றாய்
வெளிவருவோம்
உள்ளே வெளியே
ஓன்றாய் ஓரே உணர்வாய்







Wednesday, October 01, 2008

மௌனம்

செயல்களுக்கு தொடர்பு இல்லாத
எண்ணங்கள் இல்லா
மனநிகழ்வு மௌனம் .

Monday, September 29, 2008

வரலாறு

வாழ்பவர்கள் அறிய
வாழ்ந்தவர்களின் குறிப்பேடு
வரலாறு .

Saturday, September 27, 2008

கழுகுகளும் காக்கைகளும்

சிறுபள்ளம்
தேங்கியிருந்த குளத்துநீர்
மீனவர் வலைக்கு
தப்பி வந்த மீன்கள்
வானத்தில் வட்டமிடும்
கழுகளும் காக்கைகளும்
ஓர் கழுகின்
தொடர் முயற்சியில்
அதன் அலகுகளுக்குள்
சிக்கிய மீனின்
உயிர் போராட்டம்
துள்ளலாய்
வலிமைக்கு அடிபணிந்த
மீனின் முயற்சி தோல்வியாய்
வேட்டையாடிய
கழுகின் காலடியில்
மீன்
சுற்றியமர்ந்த கழுகுகள் ஆறு
உணவு தேவை
அருகில் அமர்ந்த காக்கைகள்
ஐந்து
அங்கும் இங்கும் பறந்தமர்ந்த
கழுகின் காலடியில் மீன்
உணவை உற்றுநோக்கும்
பார்வைகளுடன்
சுற்றியமர்ந்த கழுகுகளும்
காக்கைகளும்
உணவு போராட்டம்.





Tuesday, September 23, 2008

ஆண் ,பெண்

தன் பெருக்கம் இல்லா சூழல்
இனப்பெருக்க தேவை
உயிர்களின் மாறுபாடு ஆண் ,பெண் .

Saturday, September 20, 2008

புகைப்பட தொகுப்பு

சிறு ஓய்வும் உழைப்பும்

அந்திவானம்

தனித்திருக்கிறேன்

உணர்ச்சி

நிகழ்வினால் ஏற்படும்
உடல் இயக்க மாறுதல்
உணர்ச்சி .

Wednesday, September 17, 2008

தியானம்

ஒருமை நிகழ்வு
இயற்கையோடு
ஒன்றிணைதல் தியானம் .

Sunday, September 14, 2008

உணர்வு

நிகழ்வினால் ஏற்படும்
மன இயக்க மாறுதல்
உணர்வு .

எனக்கும் எனக்குமான உறவு

நண்பருக்கும் எனக்கும் கடுமையான வாதம் ஓர் குறிப்பிட்ட விசயம் தொடர்பாகவாதத்தின் தொடக்கத்திலிருந்தே என்னுடைய உள்உணர்வு, டேய் நீ வாதம் செய்யவேண்டாம் என எச்சரிக்கை செய்ததையும் மீறி என் நண்பருடைய பேச்சுக்கு எதிர்வாதம் செய்து கொண்டிருந்தேன்.

அவர் பேச.. நான் பேச..

வாதம் முடிவில் எனை அமைதியிழந்த மனதுக்கு சொந்தகாரனாக்கியது.
பக்கத்து வயல்காரர் என்னிடம் நாற்றுகள் பாக்கி உள்ளது. நீ வாங்கி கொள் என்று சொல்ல அந்த சமயம் என் உள்உணர்வு இந்த நாற்று வேண்டாம் என்று சொல்ல..

நானும் வேண்டாம் என மறுத்துவிட

நடந்தது அவர் விட்டிருந்த நெல்நாற்று அந்த பருவத்திற்குரியது கிடையாது.எனக்கு வேறு இடத்தில் நாற்று வாங்கி நட்டு என்வயலில் கதிர்கள் வந்துவிட்டனஅவர் வயல் இன்னமும் பயிராக உள்ளது.
உள்உணர்வின் படி நடந்தேன் தப்பித்தேன்.

இதேபோல் ஒவ்வொரு சமயத்திலும் எனை உள்உணர்வு வழிநடத்தியுள்ளது. என் உள்உணர்வை அலட்சியம் செய்தபொழுது எனக்கு கிடைத்த முடிவுகள் துன்பத்திற்குரியன மதித்து நடந்தபொழுது முடிவுகள் நன்மையாக அமைந்தது.

எனக்கும் உள்உணர்வுக்கும் உள்ள உறவு நட்பு.

எனக்கும் உள்உணர்வுக்கும் உள்ள முரண்பாடு விரோதம்.

எனக்கும் எனக்குமான உறவு என் வாழ்வு.

(தொடர்வோம்)

Thursday, September 11, 2008

வறுமை

வாழ தேவையான வளங்களை
பெறும் தகுதியின்மையின்
வெளிபாடு வறுமை .

Monday, September 08, 2008

மனது



வேகம் என்னுடையது
வேகத்தின் மையம்
உன்னுடையது
நான்
நினைப்பது நடப்பது
எல்லாம் நீ
உனக்குள்ளே
எனை ஏற்றுக்கொள்
உன்னிடம் கேட்கிறேன்
ஏற்று கொண்டேன்
உறுதிமொழி கூடவே
கொஞ்சம் தயக்கம்
கொஞ்சம் நம்பிக்கை
கொஞ்சம் ஆணவம்
திரும்பவும் உன்னிடம்
எனை ஏற்றுக்கொள்ள
இது இயல்பு

நான் உன்னிலிருந்தே ...
உன்னில்தான் ...



சமுதாயம்

இடம் பெயர்வு இல்லா
இயற்கையை அழித்து வாழ்ந்த
குழு அமைப்பு சமுதாயம் .

Friday, September 05, 2008

பித்து (பைத்தியம்)

உடல் இயக்கம் கெடா
மன இயக்கத்தின்
தொடர் முரண்பாடு பித்து .

Wednesday, September 03, 2008

செல்வம்

பண்ட மாற்றுமுறைக்கு
அனுமதி பெற்ற
காகிதங்கள் உலோகங்கள் செல்வம் .

Friday, August 29, 2008

அறிவியல்

புலனுக்குட்பட்டதை பிரித்தறியும்
புலனக்குட்பாடததை ஆராயும்
கலை அறிவியல் .

Sunday, August 24, 2008

பகுத்தறிவு

புலன் , புத்தி
அறிந்த வரையில்
ஆராய்தல் பகுத்தறிவு .

Saturday, August 23, 2008

காலம் தவறா போராட்டங்கள்


நினைவுகளுடன்
காலம் தவறா
போராட்டங்கள்
எண்ணங்களின் சுழற்சியில்
என் வாழ்வு
வளர்ந்த விதமாய்
நினைக்கும் எண்ணங்கள்
தற்கால வளர்ச்சியில்
இணைந்து வளர
எடுக்கும் முயற்சிகளில்
எல்லாம்
எண்ண குழப்பம்
எண்ண சுழற்சி
மையம் மட்டும்
ஆடாமல் அசையாமல்
இயக்கமில்லா இயக்கமாய்
முரண்பட்ட எண்ணங்கள்
இன்னமொரு எண்ணகுழப்பமாய்
நினைவுகளுடன் ...




Wednesday, August 20, 2008

அனுபவம்

செயல்களின் முடிவு
இறந்தகாலம்
அறிவு அனுபவம் .

Sunday, August 17, 2008

விதி

காரணங்கள் தெரியா
எல்லைகளுக்கு உட்பட்ட
செயல் நிகழ்வு விதி .

புகைப்பட தொகுப்பு V

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

சிமெண்ட் சாமிங்க

என்ன பேசிகிறாங்க





Thursday, August 14, 2008

திறமை

செயல் வழி தெரிந்து
செயல் முடிக்கும்
நிகழ்வு திறமை.

Tuesday, August 12, 2008

ஏமாற்றம் இயல்பாய்

வேகமாய் சுழன்ற
காற்று
திரண்டிருந்த கருமேகம்
காணாமல் போன மாயம்
தெளிவான வானம்
பெய்யும் மழையென
எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாய்
தவிர்க்க முடியா நிகழ்வாய்
நினைத்த நினைவுகள்
நிறைவேற்ற போட்ட
திட்டங்கள்
விரைந்தது வந்த
வாழ்வியல் சூழலில்

கனவாய்
நினைவு நினைவாய்
தேங்கி நிற்க
ஆசை நிராசையாய்
ஏமாற்றம் இயல்பாய்
தவிர்க்க முடியா நிகழ்வாய் .

உழைப்பு

உயிர்ப்பை தக்க வைக்க
தொடர் இயக்க
நிகழ்வு உழைப்பு .

Sunday, August 10, 2008

அவநம்பிக்கை

நடக்கும் நடக்காது
எண்ண குழப்ப
நிகழ்வு அவநம்பிக்கை .

Saturday, August 09, 2008

நம்பிக்கை

எண்ணம் செயல்
முடிவில் சார்பாக இருத்தல்
எண்ண நிகழ்வு நம்பிக்கை .

Friday, August 08, 2008

பொறுமை

நம்பிக்கை
எதிர்பார்ப்பு ,காத்திருத்தல்
நிகழ்வு பொறுமை .

Monday, August 04, 2008

நூல் பிடித்த மனது


தோன்றிய எண்ணங்கள்
நூல் பிடித்த மனது
இருக்கும்நிலை
மறக்கும் இயல்பு
சிறிய சத்தம்
வீட்டுக்குள் வாழும்
தவளை
இரவு பயணம்
முடித்து
திரும்ப வரும்
இடமாய் என் வீடு
ஒரு முறை
இரு முறை
பல முறை
வெளியே கொண்டு
விடுகிறேன்
அதன் போக்கு
மாறாமல் இருப்பிடம்
நோக்கிய
என் வீட்டு பயணம்
தோன்றிய எண்ணங்கள்
நூல் பிடித்த மனது
இருக்கும் நிலை
மறக்கும் இயல்பு.



Saturday, August 02, 2008

பொறாமை

இல்லாமை இயலாமை
ஒப்பீட்டு ஏக்கம்
எண்ணம் பொறாமை .

ஏக்கம்

வரும் வழி தெரியா
ஒன்றின் மேல்
தொடர் ஆசை ஏக்கம் .

Thursday, July 31, 2008

சிதறா மௌனம்

சிதறாத மௌனம்
இரு நிலைகள்
கடந்த ஒற்றையாய்
எல்லாம் அறிந்தது
சேர்ந்து
பிரிந்து
உருவாகி
அழிந்து
தன்னுள் தானாய்
உருமாறி
உருவகம் பெற
அழிந்து மாற்றம்
பெறும் எல்லாமாய்
சிதறா மௌனம்.








தேடுதல்கள்

சில செயல்கள் ஏன் நடைபெறவில்லை ? வாழ்க்கையின் நிகழ்வுகளில் கேள்விக்கான காரணங்களை தேடுகிறேன் தேடுதல் நிரந்தரமாய் என மனதில்.

என்னுடைய வாழ்க்கை நிகழ்வுகளின் முடிவுகளை முழுக்க முழுக்க எனது சார்பகவே கற்பனை செய்வதால் உண்மைகள் இதுதான் என்று தெரிந்த சில நிகழ்வுகளில் கூட எதார்த்தை ஏற்றுகொள்ள முடியாமல் ஏமாற்றங்களின் பிடியில் நான்.

ஒரு வழிப்பாதையாய் என் வாழ்வு நகருதல்களின் பயண முடிவு என்னவோ வேதனையும் விரக்தியும் தான்.

விரக்தியின் முடிவாய் நான் புலம்பும் சொற்கள் வாழ்வின் ஆதாரம் எது ? எதை நோக்கிய பயணமாய் என் வாழ்க்கை ? நான் பிறந்ததற்கான நோக்கம் என்ன ?

வினாக்கள் என்னமோ நான் முழுமையாய் வாழ்ந்து வாழ்க்கை இறுதிக்கு சென்ற அடையாளங்களாய் வேதனை என்னவோ சமுதாயத்தில் நடந்து கொண்டிருப்பவர்களை பார்த்து நடக்க தெரிந்ததும் நடக்காமல் வேதனையடைந்த கதை தான்.

வெற்றியா தோல்வியா என்பது வாழ்க்கை இல்லை எந்த சுழலிலும் உயிர்ப்புடன் வாழும் தகுதியே வாழ்க்கை புரிதலுக்கு புரிதல்களுடன் கூடிய செயல்களே என நான் அறியும் வரையில் நான் புலம்பியது வாழ்வின் ஆதாரம் எது ?

நான் அடைந்தது என்னவோ வேதனை விரக்தியும் தான்.

(தொடர்வோம்)

Monday, July 28, 2008

தனிமை தவம்

மனிதர்கள் இல்லா
இடம் நோக்கிய
என் பயணம்
பல மனிதர்களின்
எண்ணங்களை
தக்கவைத்த என்மனது
தனி ஆளாய்
பல மனகுரலாய்
எனது பயணம்
அமைதியை தேட
ஓர் எண்ணம்
எனது முயற்சி
எழுகிறேன்
விழுகிறேன்
எழும் நேரம்
திருந்துகிறேன்
மனிதர்கள் நடுவில்
நான்
தனிமை தவமாய்
என் மனது ...

Monday, July 21, 2008

எதிர்ப்பு

நிலை நிறுத்தி
கொள்வதில் ஏற்படும்
இடையூறு எதிர்ப்பு .

Sunday, July 20, 2008

நட்பு

நல்லது கெட்டது
பகிர்வு இரண்டுக்கு
மட்டும் நட்பு .

Sunday, July 13, 2008

வரவேற்கிறோம் நாங்கள்

கடந்த வாரம் எங்க ஊர்ல கிடைச்ச பத்திரிக்கைல ஒரு செய்திங்க ...
அமெரிக்காவுல ஓரிகன் மாகாணத்து ஆண்மகனாம் பேர் என்னவோ தாமஸ் பீட்டி, பொம்பளைய்யா இருந்து ஆம்பளையா மாறி திரும்பவும் பொம்பளைய்யா மாறி குழந்தை பெத்துகிட்டாராம். ஆனாலும் சேதி ஆண்மகன் குழந்தை பெத்துகிட்டார். வரும் காலத்துல ஆண்களும் செயற்கையா கருப்பை வைச்சி புள்ள பெத்துகிலான்னு சொல்றாங்க ...

இயற்கைக்கு மாற இதெல்லாம் என்னங்க ...

நீங்க எழுதுங்க உங்க கருத்த ...

Sunday, July 06, 2008

வஞ்சகம்

வெளி ஆதரவாய்
உள் துரோகம்
வஞ்சகம் .

Friday, July 04, 2008

பசி

தொடர் இயக்க
தேவை
உணர்வு பசி .

விதண்டாவாதம்

தவறென தெரிந்தும்
தன் புரிதலை

வலியுறுத்தல் விதண்டாவாதம்

Thursday, July 03, 2008

வாதம்

பல புரிதல்கிடையே
தன் புரிதலை
வலியுறுத்தல் வாதம் .

Wednesday, July 02, 2008

நான் யார் ?

உன் மனபோக்கு
உன் பாதை
நான் யார் ?
சரியாய் உனக்கு
தெரிந்த பாதை
அது ...
சரியா ? தவறா ?
கருத்துகள் கூற
தகுதியில்லை எனக்கு
என் பாதையிலே
எத்தனை எத்தனை
மேடு பள்ளங்கள்
சமன் செய்ய
எத்தனை காலமோ
தெரியவில்லை எனக்கு
இன்னமும் தெரியா
என் பாதையிருக்க
உன் பாதையில்

நான் யார் ?
நீ போ
நான் போகிறேன் ...

Sunday, June 22, 2008

வெறுப்பு

மாற்றங்கள் இல்லா
செயல்
விருப்பமின்மை வெறுப்பு .

Saturday, June 21, 2008

கருத்துமோதல்கள்

என்னுடைய கருத்துக்கள் யாவும் உன்னுடைய பார்வைகளுக்கு எதிரானதாக அமைந்துவிட்ட காரணத்தினால் உன்னுடைய சுயம் காயம்பட்டதால் என்மீது உன்கோபம்.

நீ போட்டிருந்த திட்டங்கள் அதை நிறைவேற்றுவதற்காக நீ போட்ட வேடங்கள், வேடங்கள் புனைந்து கொண்டு நீ செய்த செயல்கள் யாவும் தவறாக அமைந்துவிடுமோ என்ற பயம் காரணமாக என்மீது உன்கோபம்.

நீ செய்த செயல்கள் தகுந்தகலங்கள் வந்தவுடன் வெளிப்படும் விளைவுகளை எடுத்துரைக்க உன்னுடைய எதிபார்புகளுக்கு எதிராக அமைந்ததால் என்மீது உன்கோபம்.

நீ செய்யும் செயல் உன்னுடைய பார்வையில் மிகவும் சரியான ஒன்றாக தெரிய என்னுடைய பார்வை என்பது உன் நலனில் அக்கறை எடுத்து சொல்லப்பட்டது என என் மனதுக்கு தெரியும், உனக்கு தெரியுமா ?

சொல்கின்றபொழுது எல்லாம் உனக்கு தவறாக தோன்றலாம், எதிரானதாக தோன்றலாம் எதிர் எதிர் கருத்து மோதல்களின் விளைவாகத்தான் ஓர் செயலின் முடிவாக மற்றொரு செயலின் தொடக்கமாக அமைகிறது.

சங்கிலி தொடர் என ஓர் செயலின் விளைவுகள் பல செயல்களாக விரிந்து நிற்க இது உன்னுடைய வாழ்க்கை என்பது உனக்கு தெரியுமா ?

கருத்துமோதல்கள் தொடர்நிகழ்வாக அமைதுவிடுகையில் ஓர் செயல் குறிப்பிட்ட எல்லைகளுக்குள் உட்படுமா அல்லது சரியான பலனை தருமா என்பது அச்சத்திற்குரியதே. சரியான நேரத்தில் சரியான அளவில் ஏற்படும் கருத்துமோதல்கள் சரியான விளைவுகளை தரும் என்பதையும் மறந்துவிடலாகாது.

கருத்துமோதல்கள் வாழ்வின் அவசியமாக நம்முடைய கருத்துமோதல்கள் இயல்பனவையே.

என்மீது உன்கோபமும் நியாமானதே.

(தொடர்வோம்)







Saturday, June 14, 2008

சர்வாதிகாரம்

சுய விருப்பு வெறுப்பு
ஆளுமை
சர்வாதிகாரம் .

Thursday, June 12, 2008

புகைப்பட தொகுப்பு III

சிந்தனை

மலர்வது எப்பொழுது ?
நிழல் தேவை




Saturday, June 07, 2008

கோபம் கொண்டிரு

என் மீது கோபம் ...

ஏன் இந்த கோபம் ? கோபத்திற்கான காரணம் நான் உன் வழியில் வந்துவிட்டதனாலா அல்லது உன்னுடைய வாழ்வதற்கான ஆதாரங்களை அழித்துவிட்ட காரணத்தினாலா ?

உன் வழியில் வந்ததற்காக என் மீது கோபம் என்றால் அது எந்தவகையில் சரியான செயலாக இருக்கமுடியும். வாழ்க்கையின் பயனப்பாதைகளில் யார் யார் பாதையில் வேண்டுமானாலும் வரவேண்டிய நிர்பந்தங்கள் உண்டு.

உன் பாதையில் என் பயணமோ அல்லது உன்னோடு சேர்ந்த என் பயணமோ மிக மிக குறுகிய காலநிகழ்வே மேலும் இயல்பான ஒன்றே.

உன்னுடைய வாழ்க்கைக்கான ஆதாரங்களை அழிக்க முற்படும்போது அல்லது ஆதாரங்கள் தொடர்ச்சியாக கிடைக்கசெய்யாது தடுக்க முற்படும்போது என் மீதான உன்னுடைய கோபம் என்பது ஏற்றுகொள்ளபட வேண்டியதே.

மிக நிச்சயமாக நீ கோபம் கொண்டிருக்க வேண்டும். கோபம் இல்லையேல் நீ நான் உயிர் வாழும் தகுதி இந்த உலகில் நமக்கு குறைவே.

அளவுக்கு மீறிய கோபம், அடிக்கடி நாம் படும் கோபம் பற்றி சிந்திக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஆனாலும் நாம் கோபம் கொண்டிருக்க வேண்டும்.

உயிர் வாழும் தகுதிக்காக மட்டுமே கோபம் கொண்டிருப்போம்.

(தொடர்வோம்)

Friday, June 06, 2008

சாந்தம்

சலனமில்லா
எதிர்க்கொள்ளல்
சாந்தம் .

Wednesday, June 04, 2008

ஓயாத எண்ணங்கள்

உற்று பார்க்கிறேன்
தொடர்புடையவற்றை
தொடர்பு செய்து
எண்ணங்களின்
பின்னால் செல்கிறேன்
பிரித்து அறியமுற்பட
அறியாது தோற்கும்
நிகழ்வாய் என்னுள்
விழிக்கிறேன்
இமைக்கும் நேரம்
தோற்கிறேன்
ஓயாது என்னுள்
எல்லா காலங்களையும்
நிகழ்ந்து
நிகழ்வது
நிகழ போவது
என
திரும்பவும் திரும்பவும்
எண்ணங்களால் இழுக்கப்பட்டு
எரிந்து சாம்பாலாகிறேன்
திரும்பவும்
உயிர்த்து எழுகிறேன்.

Tuesday, June 03, 2008

ஆணவம்

என்னால் மட்டுமே
முடியும்
எண்ணம் ஆணவம் .

அதிகாரம்

சரியாய் அறிந்து
வழிநடத்தும் தகுதி
அதிகாரம்.

Monday, June 02, 2008

பேராசை

தேவை முடிவு
எல்லாம் எனக்கு
பேராசை .

ஆசை

தேவை
கைக்கொள்ளும் எண்ணம்
ஆசை

கோபம்

எதிர்பார்ப்பு ஏமாற்றம்
சகிப்புதன்மை முடிவு
கோபம் .

Sunday, June 01, 2008

காமம்

காதல் நெகிழ்வு
உணர்ச்சி
காமம் .

Tuesday, May 27, 2008

நானும் ஓர் திரைசீலை

நான் திரைசீலை
உறவாடும் கம்பி
எனக்கு ஆதாரம்
உறவாடும் கம்பிக்கு
நான் ஆதாரம்
இருக்கும் இடம் அறிந்த
எனது மதிப்பு
தொங்கும் இடமாய்
வீட்டின் நுழைவாயில்
உட்புற அறைகள் வாயில்
உள்ளே வெளியே
இருப்பது நிகழ்வது
உள்ளே தெரியா
வெளியே தெரியா
இட்டபணியாய் என்பணி
நிலையில்லாது
முன்னும் பின்னும்
பின்னும் முன்னும்
நிலையாமையே
எனது இயல்பாக ...

Wednesday, May 21, 2008

புகைப்பட தொகுப்பு II

சிரிக்கும் அடுக்கு செவ்வந்தி

புறப்பட தயார்


சீக்கிரம் என்ன போட்டோ எடுங்க ...

Monday, May 19, 2008

பிரபஞ்சம்

அது இது
இயக்கம்
பிரபஞ்சம் .

காதல்

வசீகரம்
தொடர் ஈர்ப்பு அன்பு
பரிமாற்றம் காதல் .

முடிவு

ஒழுங்கு அமைவு
அளவற்ற குழப்பம்
முடிவு .

ஆதி

அளவான குழப்பம்
ஒழுங்கு
ஆதி .

Thursday, May 15, 2008

வெறுமை மனது

ஒன்றும் வேண்டா
வெறுமை மனது வேண்டும்
நினைக்க
நினைவுகளின் சுவடுகள்
தேடல்
எண்ணங்கள் பிறப்பாய்
ஓர் மறுப்பு
சும்மா இரு
எண்ணங்கள் தோன்றா
பிரபஞ்ச தொடர்பு
ஆச்சரியமாய் அகங்கராம்
நினைக்க ...
நினைக்க தொடர்பாகி
அலை அலையாய்
எண்ண எழுச்சி
குழப்பமாய்,
தெளிவாய்,
துன்பமாய்,
இன்பமாய்,
வெறுப்பாய்,
விருப்பாய்,
இரு நிலையாய்
ஒரு நிலைச்சார்ந்து
எல்லாம் வேண்டும்
வெறுமை மனது.

Tuesday, May 06, 2008

செய்வது என்ன ?

காலை கண் விழிப்பு
நம்பிக்கையாய்
இந்நாள் ... ...
தே தண்ணி அருந்த
பேருந்து நிறுத்த
தே தண்ணி கடைகளை
நோக்கிய என் பயணம்
சகோதரியின் திருமணம்
தம்பியின் பேச்சு
யாரோ ஒருவர் மீது
குற்றம் சுமத்திய
அவன் பேச்சு
எண்ணமாய்
ஏன் என்ற வினாவுடன்
என்னுள் உறுத்த
தெரிந்த குறையாய்
தந்தை தாய்
அண்ணன் இழப்பு
வசதி குறைவு
ஆதரவு எது ?
ஆதாரம் எது ?
தோன்றிய வினாக்கள்
நாங்கள்
என்ன செய்ய ...
சூழ்நிலை செய்கைகள்
எங்களை சிறை பிடிக்க
நாங்கள் செய்வது என்ன ?



Saturday, April 12, 2008

புகைப்பட தொகுப்பு

பகல் நிலவு






















எடுத்தும் தொடுத்தும் என் வாழ்வும் மலராதோ























கற்றுக்கொடுப்பவர்களும் கற்றுக்கொள்பவர்களும்























முயற்சி
























பகுத்தறிவு























சமஉரிமையும் சமபங்கும்

Thursday, April 10, 2008

எண்ணங்கள்

எண்ணங்களின் கூட்டுச்செயர்க்கையால் குழம்பி போகிறேன். வாழ்க்கைச்சூழ்நிலையில் எத்தனையோ பிரச்சனைகள் வந்தாலும் ஒரே சமயத்தில் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு என்பது இயலாத காரியம் என்று அறிந்தும் கூட ஏன் குழம்பி போகிறேன் ?

எந்த பிரச்சனைக்கும் தீர்வு என்னால் மட்டுமே என்பதாலா அல்லது மற்றவர்களின் வாழ்க்கை வெற்றிகளை என் வாழ்க்கை தோல்விகளோடு ஒப்பிட்டு நோக்கும் பார்வையினாலா ?
தொடர்ச்சியாய் எழுகின்ற அலைகள் போல என்மனத்தின் சஞ்சலங்கள்.
ஏன் வாழ்க்கையின் தோல்விகள் என்னை சோர்வடைய செய்கின்றன ?
காரணங்கள் எதுவாக இருக்கும் ?
என்னுடைய பெற்றோர்களா அல்லது என்னுடைய சுற்றுபுறமா, குறிப்பிட்ட எந்த காரணத்தினால் வாழ்க்கையின் போராட்டங்களுக்கு ஈடுக்கொடுக்க முடியாமல் போகிறது.
அடிப்படையில் நான் பெற்றிக்கவேண்டிய குணங்கள் என்ன ? இனியும் நான் பெறவேண்டிய குணங்கள் என்ன ? வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் நான் பெறக்கூடிய விளக்கங்கள் தான் எவை ? அவ்வாறு கிடைக்க கூடிய விளக்கங்கள் மூலமாக வாழ்க்கையைப் பற்றிய என்னுடைய தீர்மானங்கள் என்னவாக இருக்கும் ?
எந்த ஒரு செயலுக்கும் ஓர் விளைவா அல்லது பல விளைவுகளுடன் தொடர்புடையதா ...
என்னுடைய ஒரு செயலுக்கு நான் எதுவரையில் காரணமாக இருக்கமுடியும். அந்த குறிப்பிட்ட செயலின் இயல்பை புரிந்து கொள்வது எங்ஙனம் ?
வாழ்க்கையில் அறிந்தவை சில அறியதவைப் பலவாக இருந்தாலும் வாழ்க்கை என்பது விடுவிக்க முடியா புதிரா அல்லது அவிழ்ந்து விடும் முடிச்சா ... ...
( தொடர்வோம் ... )

Friday, April 04, 2008

இயக்கம்

சின்னப்பறவையின்
வேகமான
சிறகு அசைவுகள்,

இடம் பெயர,
உணவு தேட,
பறந்து அமர்ந்த
தாவர பகுதியில்
தேடியப்பார்வைகள்
உயிர் வாழ
உணவு கிடைக்கா நொடி
தாவரம் விட்டு பறந்த
சின்னப்பறவை
தன் தேவையாய்
இன்னமொரு இடபெயர்வு
உணவு தேவை
நிறைவாய்
தன் பெருக்க
இயக்கம்
எல்லாம்
சின்னப்பறவையின்
சிறகு அசைவுகளில் ...







Wednesday, April 02, 2008

மாறிய பருவங்கள்

வசந்தகால பூக்கள்
மழைகால மழை
கோடை வெயில்
குளிர் பனி
நிரந்தரமாய் பருவங்கள்,
நகருதல் இல்லாமல்
குறுகிய எல்லைகளுக்குள்
வாழ்ந்த மிருகம்
மனிதன்,
முரண்பட்ட
இயற்கை உறவுகள்;
தென்றலின் முகவரி
வசந்தகாலமா ?
பனியின் முகவரி
குளிர்காலமா ?
வெயிலின் முகவரி

ோடைகாலமா ?
மாறிய பருவங்கள் ....
அடை மழை
கடும் வறட்சி
கொட்டும் பனி
சுழன்று அடிக்கும்
சூறாவளி
வெடித்து கிளம்பும்
எரிமலை - என
தன்னையே
சரிசெய்யும் இயற்கை,
அழியும் மிருகமாய்
மனிதன்.







LinkWithin

Related Posts with Thumbnails