இங்க் பேனா தேவைபட்டதால் அருகில் பக்கத்து நகரத்துக்கு செல்லும்போதுதரமான தயாரிப்பு நிறுவத்தின் பேனாவை கேட்டு வாங்கினேன்.
வீட்டிற்கு வந்து எழுதிப்பார்க்கையில் இங்க் கசிந்து என்னுடைய கைவிரல்கள் எல்லாம் இங்க் கறை.
நான் திரும்பவும் சென்று மாற்றுவதென்றால் எனக்கு ஆகும் போக்குவரத்து செலவிற்கு ஈடாக இன்னமொரு ஒரு புதியபேனா வாங்கி விடலாம்.
இந்த நிகழ்வில் விற்பவனுக்கு ஒரு கண் போதும் வாங்குபவனுக்கு நூறு கண்கள் வேண்டும் என்பது எந்தளவிற்கு உண்மை.
நம்பிக்கையுடன் நான் வாங்கியது புகழ்ப்பெற்ற தயாரிப்பு நிறுவனத்தினுடைய பேனா. ஆனாலும் எனக்கு ஏற்பட்ட பொருளாதார நஷ்டம் மனஅமைதி குறைவுகட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன்.
நாம் எவ்வளவுதான் விழிபுணர்வுடன் செயல்கள் செய்தாலும் இத்தகைய சங்கடங்கள் தவிர்க்க முடியாதவை.
ஓவ்வொருடைய வாழ்க்கையிலும் சம்பவங்கள் வேறாய் சங்கடங்கள் நிகழும். நம் வரையில் நாம் சரியாக இயங்கி அதற்கு மேலும் இது போன்று நிகழும் சங்கடங்களை ஏற்றுக்கொள்ள கற்றுக்கொள்வோம்.
(தொடர்வோம்)
No comments:
Post a Comment