Friday, December 30, 2011
Wednesday, December 14, 2011
Friday, December 09, 2011
சுயமே சொர்க்கமாகி
நீர் நிரம்பி உடைந்து போன என் வயல்வரப்புகளை சரிசெய்யவே நேரம் சரியாய் போனது.
பெரியாறு அணை ப்பற்றி
அறியமுடிந்தது. அதனைப்பற்றிய
செய்திகளில் ஆர்வம் இல்லாமலசொந்த பிரச்சனைகளில்மூழ்கியே வெளிவர வழிதேடுகையில் கழிந்தகாலங்கள்.
ஓர் ஆறுதல் நமக்காக பேசதானே நாம் நம்முடைய பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தோம்
அவர்கள் பார்த்துகொள்வார்கள் இவ்விசயங்களை என்று சற்றே நிம்மதி அடைகையில்அவர்
வாங்கிய சொத்துகளில் தன்னை தற்காத்து
வழிதேட நம் பிரச்சனை பின்னுக்கு போனது.
நம்மில் சிறந்தவர்கள் குரல் கொடுக்க இவர்கள் கண்விழிப்பது இயல்பாக
போய்விட்டது.
வாழ்வே சுமையாகி ஆகிப்போனதால் வந்தவினை.
சுயமே சொர்க்கமாகிப் போக நாம்
என்பதே தேடக்கூடிய ஒன்றாகி விட கட்டுகள் அவிழ்த்த ஓர் தனி மனித
சுதந்திரம் எப்பொழுது...????
Saturday, December 03, 2011
Monday, November 21, 2011
ஓடியப்படியே தான்
சொல்ல தெரியாதகாரணங்கள் செயல்கள்
நடைப்பெறுகின்றன. வாழ்வின் அடிப்படை தேவைகளுக்கான ஓட்டத்தில் அடிக்கடி நடைப்பெறும்
நிகழ்வுகள் நினைவிருந்தும் ஒதுக்கி வைக்கப்படுகின்றன.
அன்றாட நிகழ்வுகளில் நிறைய
போராட்டங்கள் நிறைய உழைப்பு நான் வாழும் சமுதாயத்தில் என்னை அப்பொழுது தான் ஒட்டவைத்து கொள்ளமுடிகிறது.
ஓடியப்படியே தான் வாழ்க்கையும்
ஒடுகிறது.
Tuesday, October 11, 2011
Tuesday, September 20, 2011
இந்தியா ஒளிர்கிறது.
தினசரியில் படித்த செய்தி
இது. டாடா நிறுவனம் அறிமுகப்படுத்திய 22
கோடி மதிப்புள்ள தங்க கார் மாடல.
ஒருபக்கம் ஆச்சரியம் ஒரு பக்கம்
வேதனையாக தான் இருந்தது.
இந்தியா ஒளிர்கிறது…..
ஏழைகளின் தேவைகள் என்று எவ்வளவோ இருக்க 22 கோடியில் கார். இந்த
காரைக்காட்டி இன்னும் எத்தனை கார்களை விற்கபோகிறார்களோ தெரியவில்லை. எல்லாம் வியாபாரம் லாப நோக்கு...
இன்றைய இந்தியாவின் பொருளாதார நிலை ...நிறைய பேண்ட் சட்டை போட்ட ஏழைகள் . இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும் வித்தியாசம்
அதிகமாகிவிட்டது.
கடனால் தற்கொலை என்று படிக்கும் அதே
நேரத்தில் இதுபோன்ற ஆடம்பரங்களை யும் நாம் பார்க்க கொடுத்து வைத்துள்ளோம்.
இது தான் இந்தியா .
Saturday, September 10, 2011
Tuesday, September 06, 2011
இவை மனித இ யல்பா
என்னுடைய காலைப்பயணத்தில் முதியவர் ஒருவர்
ஒட்டிக்கொண்டார். வண்டியில் ஏறியவுடன்
நான் அவன சும்மாவிட போறதில்ல …
என்றார்.
நான் புரியாமல் …யார சொல்லிறீங்க
என்று கேட்க..
அதாங்க அந்த அங்காடிகாரப் பயல..
ஏன்..என்னாச்சு?
எனக்கு தந்துகொண்டிருந்த மண் னணெய்
இவன் வந்தோடன்ன இல்லேன்னு சொல்லிபுட்டான் என்றார்.
என்ன காரணம் ? கேட்டால் உங்க வீட்டுல ரெண்டு கேஸ் சிலிண்டர் அதனால
உங்களுக்கு எண்ணெய் கெடையாதுகிறாங்க
என்றார்.
அவரு செய்யிற தப்புகளா நான்
காட்டிக்கொடுக்க போறேன் என்றார்.
உங்களுக்கு அவரு ஆவாததால் அவர தப்பு
சொல்லிறீயலோ என்று கேட்க...
அட ஆமாங்க....எனக்கு ஆவ லேன்னா நான்
அப்படி தான் செய்வேன்.
என்ன மனிதர்கள் இவர்கள்.
தனக்கு காரியம் ஆகும்வரையில் அவர்களின் தப்பைஅனுமதிப்பது…தனக்கு
காரியம் ஆகாதபோது அவர்களின் இருண்ட பக்கங்களைப்பார்த்து அவர்களை அடிப்பது.
இவை மனித இ யல்பா அல்லது சமூகத்தில் தன்னை
அடையாளப்படுத்தி கொள்ளும் நிகழ்வா தெரியவில்லை.
தான் வாழ எப்படியும் இருக்கலாம்
என்பது சித்தாந்தமோ …
சுயத்தில் தான் வாழ்வு…ஆனால்
இதுபோன்ற சுயத்திலும் வாழ்வு இருக்கதான் செய்கிறது.
Monday, September 05, 2011
Wednesday, August 31, 2011
சுயம்
உள்ளிழுத்து கொள்கிறேன்
என்சுயம் ஒவ்வாத
நடக்கமுடியாசெயல்களில்
மௌனமாய் விலகுகிறேன்
நீ வாழ்
நானும் வாழ்கிறேன்
எதிர்ப்பதில் வாழ்வா..!?
என் சுயம்
உடைக்கப்படுகிறது
உணர்வுகள்சிதைக்க
எனது வாழ்வில்பூக்களா…
முடியாத நேரங்கள்
நாளை கிடைத்துவிடும்
நம்பிக்கையில்
பொறுக்கிறேன்
சுயம் அழிகிறது
நான்
என்குடும்பம்
என்பிள்ளை என்று
காலங்கள்
நீண்டு கொண்டே யிருக்கிறது
சக்கையாய் வாழ்வும்
நகர்ந்து கொண்டுதானிருக்கிறது.
இறந்துபோன காவலர்கள்
சமுதாயத்தில்
தன்னைநிலைநிறுத்தபொருள் தேவைப்படுகிறது. ஒவ்வொரு மனிதனும் தான் எடுத்து கொண்ட
வேடத்தில் நடித்தால்தான் தன் நிலைநிறுத்தி கொள்ள வேண்டிய கட்டாயம்.
வேடத்தில்நடிக்கதன்னை தகுதி ஆக்கிகொள்ளாதவர்கள் பாடு திண்டாட்டம் தான்.
சிலவாரங்களுக்கு முன்
உத்ரபிரதேசத்தில் காவலர்கள்
தலைமைகாவலர்களாக பதவி உயர்வு பெற
நடைப்பெற்ற உடல்தகுதி தேர்வில் ஓடும் போது மயங்கி விழுந்து ஐந்து காவலர்கள்
பலி என்ற செய்தி
சுட்டி இங்கே…
சகமனிதன் இறந்ததற்காக
வருத்தபடவேண்டிய விசயம் இது. ஆனால் இச்செய்தியைப்படித்தவுடன் சிரிப்பு தான் வந்தது.
தான் எடுத்து கொண்ட வேடம் காவலர்
என்றால் அதற்குரிய தகுதியில் எப்பொழுதும் சரியாக இருக்கவேண்டியது தானே காவலரின் கடமை. அதைவிடுத்து வேலை யில் சேர்ந்துவிட்டோம் என்று
இயந்திரதனமான வாழ்க்கை தான் இவர்களை இந்தஅவலத்துக்கு தள்ளிவிட்டிருக்கிறது.
இவர்களை வழிநடத்தும் தலைமையும் இதற்கு ஒரு முக்கியகாரணம் அவர்களும்
கண்டிக்கதக்கவர்களே…
என்மனதில் சமீபத்தில் பாதித்த செய்தி இது.
Friday, August 12, 2011
Wednesday, August 10, 2011
ஆசிரியர்கள தேர்வு எழுத சொல்லுங்க...
இன்று தினமணி செய்திதாளின்
தலையங்கத்தில்எது சமச்சீர் கல்வி? என்ற
தலைப்பில் ஆசிரியர்களையுடைய தரத்தை
பரிசோதனை செய்ய யோசனை சொல்லி உள்ளார்கள்.
“பள்ளிகளில் மாணவர்களை
மதிப்பீடு செய்வதைப் போல, ஆசிரியர்களின் கற்பித்தலையும் மதிப்பீடு செய்ய வேண்டிய
தேவை எழுந்துள்ளது. தற்போது சமச்சீர் கல்வியால் ஒரே பாடத்திட்டம் என்பதால், 6-ம்
வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை, அந்தந்தக் கல்வி மாவட்ட அளவில், பொது வினாத்தாள்
மூலம் (ஒரே வினாத்தாளில் ஆங்கிலம், தமிழில் கேள்விகள் இருக்கும் வகையில்
தயாரித்து) தேர்வு நடத்தி, விடைத்தாள்களை வேறு பள்ளிகளில் கொடுத்து
திருத்திப்பெற்று, ஆசிரியர்களின் கற்பித்தலை மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியம்
தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை உருவானால் மட்டுமே, மக்கள் நம்பிக்கையுடன்
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க
முன்வருவார்கள்.”
செய்தியின்
சுட்டி இங்கே…
இந்த அரசு செய்யவேண்டிய
மிகமுக்கியமான மிக அவசரமான காரியமும்
கூட….
இதையெல்லாம் இந்த அரசுக்கு எடுத்துரைப்பவர்கள் எடுத்துரைத்தால் நன்றாக
இருக்கும்.
தமிழக ஆசிரியர்களில் நிறையபேருக்கு
கற்பித்தல் என்றால் என்னவென்றே தெரியாது. அவர்கள் எந்தவிதத்திலும் தங்களை அப்டேட்
செய்து கொள்வதே கிடையாது.
தமிழக அரசு உடனடியாக அமுல்படுத்தினால் நன்றாகத்தான் இருக்கும்.
செய்வார்களா…..???!!!
Labels:
சமச்சீர்கல்வி,
செய்தி,
தமிழகஅரசு
Monday, August 08, 2011
மயிலின் நாட்டியம்
காலை 7.30 மிதமான காலைவெயில் மெல்லியதாய்
குளு குளு காற்று வீசி கொண்டிருந்தது.
ஐந்தரை அல்லது ஆறடி தோகையுள்ள ஆண்மயில்கள் இரண்டு விளையாடி கொண்டிருந்தது.
மயில்கள் என் அனுபவத்தில் திருச்சி விராலி மலைபக்கம் அ திகம் இருக்கும்
என்றும் சொல்ல கேள்விபட்டுள்ளேன். தொலைகாட்சியில் பார்த்திருக்கிறேன். நேரடியாக
தஞ்சை சிவகங்கை பூங்காவில் தோகை இல்லாத
மயில்களை பார்த்தது.
வானாந்திர அழிப்பினால் மயில்கள் தங்க இடம் இல்லாது
கும்பலாய்எங்கள் ஊர் பகுதிகளில் சகஜமாய் நடமாடுவதை பார்க்கமுடியும்.
கும்பலாய்எங்கள் ஊர் பகுதிகளில் சகஜமாய் நடமாடுவதை பார்க்கமுடியும்.
மயில்கள் நாட்டியம் நான் நேரில் பார்த்தது இல்லை. இன்றைக்கு அந்த வாய்ப்பு
கிடைத்தது.
தன்னுடைய ஐந்தரைஅடி தோகையை விரித்து அதுஆடிய ஆட்டமும் அதன் தோகையில் இருந்த
அதன் கலர்கண்கள் காலை வெயில்பட்டுஎதிரொலித்தஅதனுடைய ஜொலிப்பு....அய்யோ...என்ன தவம்
செய்துவிட்டேன் இதை கண்டு மகிழ
என்றிருந்தது.
மெதுவாக தன்னுடைய தோகையை விரிக்க
விரிக்க என்னுடைய கைகள் தனாக கைகூப்பி
இயற்கையை வண ங்கதான் தோன்றியது.
Saturday, August 06, 2011
காட்சியும் காட்சிபிழையும்
பெரிய ஆண்சிங்கம்ஒன்று
வேட்டையாடியது. அதன் இலக்குக்கு உள்ளான
மிருகம் எதுவென்று தெரியவில்லை.
அதற்கு முன் இருந்த உருவத்தை
அனுமானிக்கையில் அது காட்டெருமையாக
இருக்கலாம் போல் தோன்றியது.
எல்லாம் சில வினாடிகளில் தோன்றி
மறைந்தது.
உருவ அமைப்புகள் தனிதனியாக
சிதலமடைந்து வேறொரு விளங்காத அமைப்புக்குள் தன்னை உட்படுத்தி கொண்டே இருந்தது.
இப்படிதான் சில உருவங்கள் சிலபொழுதுகளில் உருப்பெற்று கணப்பொழுதில்
மறைந்துகாட்சிபிழையாகிவிடும்.
கருமை மேகங்களின் கூட்டம் அடர்வு மிகுந்த வெள்ளைமேகங்களின்
கூட்டம்இம்மாதிரியான உருவங்கள்
அபூர்வமாக தோன்றி மறையும்.
பரந்து விரிந்தவெட்டவெளியின் தனிமையில் தலைக்கு மேல் உள்ளவானத்தை
பார்க்கையில்நகரும் மேகங்களின் காட்சியும் காட்சிபிழைகளையும் உருவாகி கொண்டும்
செல்லும் அழகே தனிதான்.
தடுக்க முடியவி்ல்லை
Monday, August 01, 2011
கண்டு தெளிய..
மேகங்கள் அற்ற
வானம்
குழம்பல்அற்று
ஓடும் சிறுஓடை
குழப்பம் தான்
இல்லை
கண்டு தெளிய…
மழிக்காத முகம்
அழக்கு ஆடை
தெருவோர பிச்சை
குழப்பம் தான்
இல்லை
கண்டு தெளிய..
தோய்த்தஆடை
விலைஉயர்ந்த
பொருட்கள்
மன கசங்கலாய்
தோய்த்த ஆடையின்
சுருக்கங்கள்
நிறையவே குழப்பம்
செய்ய..
யார் தான் யார்?
மகிழ்ச்சியும் நிறைவும்
வயலில் வேலை செய்யும் தன்னுடைய
தாயைப்பார்க்க வந்த பிள்ளைகள்
எனைப்பார்த்தவுடன்
எங்க... எங்கள போட்டோ எடுங்கிறீங்களா.. என்று ஆவலாய் கேட்க...
சில மதிய ,மாலை வேலைகளில்குளப்பக்கம்
உள்ள செடிக்கொடிகளில் பிடித்ததை கேமராவில் பதிவு செய்யும் பொழுது
வேடிக்கைப்பார்க்கும் எங்கள் ஊர்
பெரிய மனிதர்கள் இவர்கள்.
ஹாய்.... |
நாங்க தான் பெரிய மனுசங்க.. |
வெட்கம் |
நானும் வர்றேன் |
நானும் தான்.. |
இது எப்படி... |
தன் முகத்தை கேமராவில் உள்ள திரையில் பார்த்தவுடன்அவர்கள் முகத்தில் ஏற்படும்
மகிழ்ச்சிபசித்த நேரத்தில் கிடைத்த நல்லஉண
வினால் வயிறு நிறைந்தவுடன் ஏற்படும் திருப்தியைப் போல....
Subscribe to:
Posts (Atom)