என் மீது கோபம் ...
ஏன் இந்த கோபம் ? கோபத்திற்கான காரணம் நான் உன் வழியில் வந்துவிட்டதனாலா அல்லது உன்னுடைய வாழ்வதற்கான ஆதாரங்களை அழித்துவிட்ட காரணத்தினாலா ?
உன் வழியில் வந்ததற்காக என் மீது கோபம் என்றால் அது எந்தவகையில் சரியான செயலாக இருக்கமுடியும். வாழ்க்கையின் பயனப்பாதைகளில் யார் யார் பாதையில் வேண்டுமானாலும் வரவேண்டிய நிர்பந்தங்கள் உண்டு.
உன் பாதையில் என் பயணமோ அல்லது உன்னோடு சேர்ந்த என் பயணமோ மிக மிக குறுகிய காலநிகழ்வே மேலும் இயல்பான ஒன்றே.
உன்னுடைய வாழ்க்கைக்கான ஆதாரங்களை அழிக்க முற்படும்போது அல்லது ஆதாரங்கள் தொடர்ச்சியாக கிடைக்கசெய்யாது தடுக்க முற்படும்போது என் மீதான உன்னுடைய கோபம் என்பது ஏற்றுகொள்ளபட வேண்டியதே.
மிக நிச்சயமாக நீ கோபம் கொண்டிருக்க வேண்டும். கோபம் இல்லையேல் நீ நான் உயிர் வாழும் தகுதி இந்த உலகில் நமக்கு குறைவே.
அளவுக்கு மீறிய கோபம், அடிக்கடி நாம் படும் கோபம் பற்றி சிந்திக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஆனாலும் நாம் கோபம் கொண்டிருக்க வேண்டும்.
உயிர் வாழும் தகுதிக்காக மட்டுமே கோபம் கொண்டிருப்போம்.
(தொடர்வோம்)
No comments:
Post a Comment