Monday, December 01, 2008

விலை ஏறிய மயிலை மீன்

30.11.2008 வீட்டில் மீன் கேட்டார்கள். மீன் மார்க்கெட் சென்றேன். முதல் நான்கு நாட்கள் பெய்த மழையினால் உயிர் கெண்டை மீன்கள் எதுவும் வரவில்லை.

சாதாரண நாட்களில் விலைப்போகாத வழு வழுப்பான உடலமைப்பு கொண்ட மயிலை மீன்கள் இருந்தது. சாதாரண நாட்களில் ஒரு கிலோ ரூ50 வாங்க ஆட்கள் இருக்காது. அன்று அதனுடைய விலை ரூ70 என்றார்கள்.

நான் வாங்கினேன் எனக்கு பிறகு இன்னொருவர் மூன்றாமவர் வந்து விசாரித்தவுடனேயே கிலோ 80 என்றார்கள்.

துாக்கி வாரி போட்டது எனக்கு ..

நல்ல வியாபாரமா இது அல்லது வியாபார தந்திரமா தெரியவில்லை .

நல்ல வேலை அவர் வாங்க வில்லை. அப்புறம் மீன் விலை என்னவென்று தெரியாது.

கல்வி பயிற்சி நிறுவனத்தின் பிரச்சுரம் ஒன்று பார்த்தேன்.
அதில் “முடங்கினால் சிலந்தியும் உன்னை சிறை பிடிக்கும், எழுந்து நடந்தால் எரிமலையும் உனக்கு வழி கொடுக்கும்”

என்ற தன்னம்பிக்கை வாசகத்தை உங்களின் சிந்தனைக்காக…

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails