விவசாயி அவர் தினமும் வயலுக்கு போய் வேலை செய்து வீடு திரும்பியவுடன் மாட்டிற்கு தேவையான தீவனம் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க கடைத்தெரு வருவது வழக்கம்.
வயலில் கடுமையாக வேலைப்பார்த்து வரும் நாளில் உடல் வலி போக்குவதற்காக கொண்டு வரும் பணத்தில் கொஞ்சமாய் மது அருந்துவது வழக்கம்.
மது அருந்தும் நாள்நண்பர் யாருடனாவது கூட்டுச்சேர்ந்து மது அருந்துவார்.
அன்றைய தினம் அவரிடம் இருந்த பணம் மாட்டிற்கு தேவையான தீவனம் வாங்கலாம். தீவனம் வாங்க கடைத்தெரு வரும்பொழுது அவர் நண்பர் மது அருந்த அழைத்தார்.
குழம்பினார் மாட்டு தீவனமா... அல்லது மதுவா...
மனித மனம் தானே மாட்டின் நலன் பின்னுக்குபோய் மது என்று மனது முடிவெடுக்க
தன்னுடைய பங்களிப்பாக தன்னிடம் இருந்த பணத்தை கொடுத்து விட்டு
தன்மனதில் “ வழக்கமாய்பொருட்கள் வாங்கும் கடையில் கடனாக வாங்கிவிடலாம்” என்று நினைக்க..
மதுவும் உள்ளே சென்று தன்பணியை செவ்வனே செய்ய ஆரம்பித்தது. அன்று கடையில் கூட்டம் அதிகம்.
இவர் மனதில் கூட்டம் குறையட்டும் கடன் கேட்கலாம் என்று நினைத்தப்படி நின்று கொண்டே இருந்தார்.
காசு இருந்தால் வாங்கலாம் . கடன்அனுமதி பெற்றுதானே ஆகவேண்டும் கடை முதலாளியின் முகத்தைப்பார்த்தவாறு இவர் .
No comments:
Post a Comment