புருசன் பொண்டாட்டி கல்யாண நாளன்று புருசன் மனைவிக்கு பரிசுப்பொருள் தருவது வழக்கம் .
அது ஐந்தாவது வருட திருமண நாள். அவன் மனைவி அவன் வாங்கி தருவதை ஏற்றுக்கொள்வாள். நான்கு வருடமும் அவள் வாய் திறந்து எதுவும் கேட்டதே கிடையாது.
அதனாலயே இவள் எதும் கேட்க மாட்டாளா என்பது புருசனின் எதிர்பார்ப்பு .
எதிர்பராமல் அந்த வருடம் திருமணநாள் வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே எனக்கு என்ன வாங்கி தரபோறீங்க?
என்று தன் புருசனிடம் கேட்டாள்மனைவி.
புருசனுக்கு ஆச்சரியம் என்ன வேணாலும் கேளு நான் வாங்கி தர்றேன் என்றான்.
இவளுக்காக ஒரு தனிதொகையே சேமித்து வைத்திருந்தான்.
நிஜமா..நான் கேட்பதை வாங்கி கொடுத்து விடுவீர்களா..
உம் கேளு..
எனக்கு ஒரு யானை முட்டை வாங்கி கொடுங்க என்றாள் மனைவி.
அதிர்ந்து போன கணவன் . என்னது..
வேலை பளுவின் காரணமாக “முட்டை இடும் யானை ” என்ற சிறுகதையை பாதியில் படித்ததோடு முடித்து விட்டு முடிவு தெரியாமல் தேவை ஒரு யானை முட்டை என சிந்திக்கிறேன்.
No comments:
Post a Comment