17.11.2008 மதியம் 2.45 மணிக்கு எங்கள் ஊ ர் குளக்கரைக்கு நண்பனுடன் சென்றேன். அப்போது தான் அங்கு வழிப்போக்கர் ஒருவர் சாப்பிட்டு விட்டு பாதியளவு சாப்பாட்டுடன் அவருடைய சாப்பாட்டு பொட்டல த்தை போட்டு விட்டு சென்று விட ..
இரை தேடிய காகம் தன் இரண்டு குஞ்சுகளுடன் அங்கு வந்தது , தாய் காகம் தன் அலகால் இரையை க்கொத்தியவுடன்“கா..கா” என்று கத்தியபடி குஞ்சு தன்னுடைய அலகை திறந்தபடி நிற்க தாய் தன்னுடைய அலகால் இரையை அதனுடைய அலகுக்குள் தினித்தது
என் நண்பன் சொன்னான் எவ்வளவு அன்புடன் உணவு தருது பார் என்றான். நான் நினைத்து கொண்டது தாய் தன் குஞ்சுகளுக்கு வாழ தேவையான ஒரு நிகழ்வை கற்றுகொடுப்பதாக..
எங்கள் இருவருடைய பார்வையும் வேறாக இருந்தது , இதற்கு நான் வளர்ந்த விதமா.. அவன் வளர்ந்த விதமா.. சிந்தித் தபடியே
No comments:
Post a Comment