Saturday, April 12, 2008

புகைப்பட தொகுப்பு

பகல் நிலவு






















எடுத்தும் தொடுத்தும் என் வாழ்வும் மலராதோ























கற்றுக்கொடுப்பவர்களும் கற்றுக்கொள்பவர்களும்























முயற்சி
























பகுத்தறிவு























சமஉரிமையும் சமபங்கும்

Thursday, April 10, 2008

எண்ணங்கள்

எண்ணங்களின் கூட்டுச்செயர்க்கையால் குழம்பி போகிறேன். வாழ்க்கைச்சூழ்நிலையில் எத்தனையோ பிரச்சனைகள் வந்தாலும் ஒரே சமயத்தில் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு என்பது இயலாத காரியம் என்று அறிந்தும் கூட ஏன் குழம்பி போகிறேன் ?

எந்த பிரச்சனைக்கும் தீர்வு என்னால் மட்டுமே என்பதாலா அல்லது மற்றவர்களின் வாழ்க்கை வெற்றிகளை என் வாழ்க்கை தோல்விகளோடு ஒப்பிட்டு நோக்கும் பார்வையினாலா ?
தொடர்ச்சியாய் எழுகின்ற அலைகள் போல என்மனத்தின் சஞ்சலங்கள்.
ஏன் வாழ்க்கையின் தோல்விகள் என்னை சோர்வடைய செய்கின்றன ?
காரணங்கள் எதுவாக இருக்கும் ?
என்னுடைய பெற்றோர்களா அல்லது என்னுடைய சுற்றுபுறமா, குறிப்பிட்ட எந்த காரணத்தினால் வாழ்க்கையின் போராட்டங்களுக்கு ஈடுக்கொடுக்க முடியாமல் போகிறது.
அடிப்படையில் நான் பெற்றிக்கவேண்டிய குணங்கள் என்ன ? இனியும் நான் பெறவேண்டிய குணங்கள் என்ன ? வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் நான் பெறக்கூடிய விளக்கங்கள் தான் எவை ? அவ்வாறு கிடைக்க கூடிய விளக்கங்கள் மூலமாக வாழ்க்கையைப் பற்றிய என்னுடைய தீர்மானங்கள் என்னவாக இருக்கும் ?
எந்த ஒரு செயலுக்கும் ஓர் விளைவா அல்லது பல விளைவுகளுடன் தொடர்புடையதா ...
என்னுடைய ஒரு செயலுக்கு நான் எதுவரையில் காரணமாக இருக்கமுடியும். அந்த குறிப்பிட்ட செயலின் இயல்பை புரிந்து கொள்வது எங்ஙனம் ?
வாழ்க்கையில் அறிந்தவை சில அறியதவைப் பலவாக இருந்தாலும் வாழ்க்கை என்பது விடுவிக்க முடியா புதிரா அல்லது அவிழ்ந்து விடும் முடிச்சா ... ...
( தொடர்வோம் ... )

Friday, April 04, 2008

இயக்கம்

சின்னப்பறவையின்
வேகமான
சிறகு அசைவுகள்,

இடம் பெயர,
உணவு தேட,
பறந்து அமர்ந்த
தாவர பகுதியில்
தேடியப்பார்வைகள்
உயிர் வாழ
உணவு கிடைக்கா நொடி
தாவரம் விட்டு பறந்த
சின்னப்பறவை
தன் தேவையாய்
இன்னமொரு இடபெயர்வு
உணவு தேவை
நிறைவாய்
தன் பெருக்க
இயக்கம்
எல்லாம்
சின்னப்பறவையின்
சிறகு அசைவுகளில் ...







Wednesday, April 02, 2008

மாறிய பருவங்கள்

வசந்தகால பூக்கள்
மழைகால மழை
கோடை வெயில்
குளிர் பனி
நிரந்தரமாய் பருவங்கள்,
நகருதல் இல்லாமல்
குறுகிய எல்லைகளுக்குள்
வாழ்ந்த மிருகம்
மனிதன்,
முரண்பட்ட
இயற்கை உறவுகள்;
தென்றலின் முகவரி
வசந்தகாலமா ?
பனியின் முகவரி
குளிர்காலமா ?
வெயிலின் முகவரி

ோடைகாலமா ?
மாறிய பருவங்கள் ....
அடை மழை
கடும் வறட்சி
கொட்டும் பனி
சுழன்று அடிக்கும்
சூறாவளி
வெடித்து கிளம்பும்
எரிமலை - என
தன்னையே
சரிசெய்யும் இயற்கை,
அழியும் மிருகமாய்
மனிதன்.







LinkWithin

Related Posts with Thumbnails