Monday, December 03, 2018

தலை வலிக்கிறது

நமக்கு மன்னிக்கவும் எனக்கு வரும்  தலைவலி பசியினால் வருவது.

நல்லா பசிக்கும்பொழுது சாப்பிடாமல் இருந்தால் மெல்லிய வலியாக ஆரம்பித்து  சாப்பிட்டு பசி தீா்த்தால் கூட  குறிப்பிட்ட மணிநேரங்கள் தீரா துன்பம்.

ஆனால் இந்த தலைவலி...

பணதட்டுபாடு

செய்தே ஆகவேண்டிய செலவினங்களுக்கு பணம் இல்லா சூழலில் நடைபெறும் இடையறா சிந்தனை ...

கடன் கேட்க துணிவில்லாமல் மாற்றுவழிகளில்  பணதட்டுபாட்டிற்கு வழிகள் தேடி ..

ஏதும் அற்ற சூழல் காரணம் தலைவலி.

என்ன செய்ய...

வரும் வழி ஒன்று போகும் வழி பல..பல..

இடையறா சிந்தனைகள் தொடர்ந்து கொண்டிருக்க தலைவலி தொடர்கிறது.

தலைவலிக்கிறது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails