நடப்பது எளிது
எனில்நடந்து விடு
எதற்காக காத்து நிற்கிறாய்
நீ காத்திருக்கும் நேரம்
யார் யாரோ
உன் வழிப்பாதையில்
அவர்களைபின் தொடர்பவனாய் நீ
பின் தொடர்வது எளிது
வழி நடத்துவது கடினம்
பின்னால் திரும்பு
அனுபவங்கள்
உனை அரவணைக்க
முன்னால் பார்
எதிர்காலங்கள் வழியாய்
அந்த கணம்
நீ நடந்தாக வேண்டும்
இல்லையேல் இறந்த காலங்களுக்குள்
சிதைக்க படுவாய்
எதிர்காலம் என்னவோ
பொய் தான்
பொய் தான் உன்வாழ்வு
நட...
வழிபடும் தடைகளை
மெதுவாய் கட...
எல்லாம் நிகழும்
எதுவும் நிகழும்
இது தான் நிகழ
அவசியமில்லை
ஏற்றுக்கொள் எல்லாம்
உனக்கு உரியதே
3 comments:
//வழிபடும் தடைகளை
மெதுவாய் கட...
எல்லாம் நிகழும்
எதுவும் நிகழும்
இது தான் நிகழ
அவசியமில்லை
ஏற்றுக்கொள் எல்லாம்
உனக்கு உரியதே//
நல்லாருக்குங்க உங்க கவிதை..
அன்புடன் அருணா
/எல்லாம் நிகழும்
எதுவும் நிகழும்
இது தான் நிகழ
அவசியமில்லை
ஏற்றுக்கொள் எல்லாம்
உனக்கு உரியதே./
அருமை
வாழ்த்துக்கு மிக்க நன்றி
Post a Comment