Monday, July 26, 2010

சேரிடம் அறிந்து சோ்

பழகி முடித்தவர்களின்  எண்ணங்கள் எப்பொழுதாவது மனதில் உதிக்கும்.  வேலை யின் காரணமாக பிரிந்தவர்கள்
அல்லது தன்னுடைய  நடத்தையின் மூலம் தன்னுடைய பழக்கத்தை  பாதியில் முறித்து கொண்டவர்கள்.

வேலையின் காரணமாகபிரிந்தவர்கள் பற்றிய நினைவுகள் வரும் அவர்களை   பற்றி அறியும் செவி வழி செய்திகளில்
அவர்களுடைய நினைவுகளுக்கு பதில் கிடைத்துவிடும்.

தன்னுடைய நடத்தையின் மூலம் பிரிந்தவர்கள் அவர்களோடு பழகியவர்களுக்கு அதிக பாதிப்பை உண்டு பண்ணி விடுவார்கள்.  அவர்கள்  பிரிந்ததற்கு  அவர்களால் ஒரு நூறு சதவீத காரணத்தை சரியாய் சொல்லி விடமுடியும்.

நோக்கத்துக்காக மட்டும் பழகுபவர்களை அடையாளம் காண்பது அரிது.  அனுபவம் தான்  மனிதர்களை அடையாளம் கண்டு கொள்ள செய்யும்.

எல்லோரும் ஒன்று சேர்வது அவர் அவர்களுடைய  சுயநலத்திற்காக இருந்தாலும் எப்பொழுது தனக்குரிய லாபம் கிடைக்கவில்லையோ அப்பொழுதே விலகிவிடும் பண்பு அதுவரையில் நல்லது கெட்டது பேசி  தனக்கான  நல்லத்திற்கு மட்டுமே நைச்சியம் பேசி அழைத்து போகும் பண்பாளர்கள்  இவர்கள்.

இவர்களால் மனவலி மிகும்.

எச்சரிக்கையாய் கையாள வேண்டியவர்களும் இவர்களே.  பேசுவதில் அவர்களுடைய காரியம் இருக்கும். அவர்களுடைய ஒவ்வொரு செயலிலும்  எதிரொலிக்கும். கொஞ்சம் உற்றுபார்த்தால்  அவர்களைப்பற்றி புரியலாம்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails