Wednesday, November 04, 2009

பெண்-3- சங்கினி


உயரமும் பருமனும் என்றில்லாமல் நடத்தரமாக விளங்குகின்ற அழகுடன் எல்லா உறுப்புகளும் சம நிலையிலே அமைந்து கவர்ச்சி மிகுந்த உடலமைப்பும் நடந்து போகின்ற போது பூமியிலே பதிக்கின்ற காலடிதடங்கள் அகன்று பதியுமாறு செல்லும் நடையும் சிறப்பு மிகுந்த நரம்புகள் புடைத்த மேனியிலே தோன்றுகிற வளமான கட்டுடல் அமைப்பும் கொண்டவள். சமைத்த உணவுகளைக் கூடுதல் குறைதல் இன்றி சம்மாக அருந்தும் தன்மையும் அமைந்தவள்.

சிவந்த மலர்களால் தொடுக்கபட்ட மலர்களையும் சிவந்த நிறம் பொருந்திய ஆடைகளையும்தன் மனத்திலே ஆர்வமுடன் விரும்புகின்ற தன்மையும் கோபப்பட வேண்டாததற்கெல்லாம் அடிக்கடி கோபப்படும் இயல்பும் பொய்ம்மையும் கோட் சொல்லுகையும் கொருந்தியிருக்கின்ற நாவும் உடையவள். வஞ்சகம் பொருந்திய மனத்தினையும் நாளுக்கு நாள் பித்தம் வளர்த்து பெருகும் உடலும் வெஞ்சினகொண்ட கழுதையினைப்போல உரத்துக் கொடூரமாக கத்துகின்ற கடுஞ்சொல்லும் அச்சம் என்பதே சற்றுமில்லாது உள்ளமும் சமூக மரபுகளை மதியாது நடக்கும் தன்மையும் உடையவள்.

இது சங்கினிவகை.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails