பிடியானைப்போலும் என்று உவமிக்குமாறு நடக்கும் தளர்ந்த அசைந்த நடையும் பெண்மையின் பண்புகள் மிகுதியாக அமைந்திருக்கின்ற பண்பும் மென்கொடி போலத்தளர்ந்து ஓசிகின்ற அழகுமிக்க திருமேனியும் வலம்புரிச் சங்கு போன்று விளங்கும் கழுத்தும் எப்போதுமே நன்மை விளைவிக்க கூடியதான சொற்களை பேசும் இயல்பும் நடனம் இசை ஆகிய கலைகளில் ஈடுபாடும் உயர்ந்த இதழ்களும் உயரமோ குட்டையோ என்று சொல்ல இயலாதபடி நடுத்தரமாக விளங்கும் தோற்றமும் சுருக்கமாக உண்ணும் இயல்பும் இனிமையான சுவைப் பண்டங்களை விரும்பும் விருப்பமும் சித்திர வேலைப்பாடுகளில் நிறைந்த ஆடைகளை விரும்பும் தன்மையும் உடையவள்.
இது சித்தினி வகை.
No comments:
Post a Comment