அன்றைய தினம் அவன் மிகவும் சோர்ந்து போயிருந்தான். விசயம் என்னவென்று விசாரிக்க அவனுக்கு முப்பதாயிரம் பணம் தேவை. திடீர் தேவைக்கு அணுகிய இடத்தில் தருகிறேன் என்று சொல்லி தரமுடியாமல் போய்விட்டது.
இவன் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து ஏமாற்றம் அடைந்தான். மனதில் சோர்வும் வந்தது. அடுத்த முயற்சியை
ஆர்வம் இல்லாமல் மேற்கொண்டான். அதுவும் தவறிபோக அடுத்த முயற்சி்க்கான செயலை செய்ய துணிவில்லாமல் இருந்தான்.
ஒரு நாள் காலை கோவிலுக்கு போயிருந்தான் அங்கு துண்டு வாசகம் அச்சடித்து ஒட்டியிருந்தார்கள். “ முயற்சிகள் தோற்கலாம் முயற்சிக்கத் தவறலாமோ? ” என்று இவனுக்குள் சிறிய மாறுதல்.
அந்த வாசகத்தை ஏற்றுகொண்டதாய் அவன் முகம் உணர்த்தியது.
No comments:
Post a Comment