Tuesday, October 06, 2009

ஆளக்கொரு பக்கம்



மிகுந்த சிரமமத்திற்கு இடையே குடும்பத்தை வழி நடத்தினான். ஆகா..ஓஹே..என்று இல்லாவிட்டாலும் பிற மனிதர்கள் குறை சொல்லாத அளவிற்கு குடும்ப நிர்வாகம் செய்தான்.

ஆளக்கொரு பக்கம் வசை பாடவே செய்தார்கள் இவன்பொறுத்துகொள்வான். ஆனால் வந்தவள் உள்ளுக்குள் கோபபட்டாள் இரவானதும் இவர்கள் திட்டினார்கள் உங்களை எப்படி திட்டலாம் என்று கேட்க அவன் படும் சிரமங்கள் அவனுக்கு தெரியும். அதனாலயே இவனுக்கு உள்ளுக்குள் கோபம் கிளம்பும்.

மனைவி மீது எரிந்து விழுவான் ஆமா..நான் எத சொல்ல வந்தாலும் ஏன் என்னகிட்ட பாய்றீங்க..எனக்கு நேரா உங்கள சொல்லறது பொறுத்து கொள்ள முடியல அதனால தான் உங்ககிட்ட சொல்றேன்.

நீ சொல்வது சரிதான் அந்தமாதிரி சொல்லாத புள்ள. நீ சொல்ல சொல்ல அவங்க மேல கோபதான் அதிகம் வரும். குடும்ப உறவுல இதெல்லாம் சகஜம் என்பான். நீ ஊமையா இருந்துக்க வேண்டியது தான் என்று அவள் வாயை மூடினான்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails