நாளைக்கு குலதெய்வத்துக்கு கடா வெட்டி பூச போடுறாங்க கோயிலுக்கு வந்துருப்பா..
ஆகா …இன்னும் ரெண்டு நாள்ல புரட்டாசி வரப்போவுது கிடைக்கிற வாய்ப்ப பயன்படுத்தி கிட்டாதான். இன்னும் ஒரு மாசத்துக்கு ஒன்னும் சாப்பிட முடியாது நாளைக்கு போய் சாப்பிட வேண்டியது தான் என்று நினைத்தவாறே…
சரி வர்றேண்ண என்றான்.
மறுநாள் காலை சாப்பாட்டு நேரத்துக்கு போனா எதாவது நினைத்து கொள்வார்களே … ஒரு மணி நேரம் முன்னே போய் சேர்ந்தான்.
அவன்போன சமயம் பூசை ஆரம்பமாகும் நேரம். தாள வாத்தியங்கள் ஒலிக்க ஆரம்பித்தது.
கிராம தேவதைகளுக்கு உரித்தான வாத்திய கருவிகள் உருமி மேளம், உடுக்கை , மணி சப்தம் எல்லாம் ஒன்று சேர்ந்து அந்த இடத்திலுள்ளவர்களை பூசையில் கட்டி போட்டிருந்தது.
ஆடு வெட்டியவுடன் சமைப்பதற்காக சமையல்காரர்கள் முன்னேற்பாட்டில் மசாலா வாசனை மூக்கை துளைக்க அவன் புத்தி பேதலித்து பூசாரியின் பாடலை கவனித்தான்.
நமச்சிவாய வாழ்க… என்று பாடினார் பூசாரி.
உள் இருப்பது அம்மன்.
துணுக்குற்று நமக்கு அம்மானா தெரியற தெய்வம் அவருக்கு சிவனா தெரியும் போல நினைத்தவாறு மீண்டும் அவர்பாடலை கவனிக்க…
ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று.. என்று ஏற்ற இறக்கங்களுடன் முருகன் பாடலை பாட ஆரம்பிக்க…
சத்தியமா அவனக்கு அம்மனாத்தான் தெரிஞ்சுது.
ஆனா பூசாரிக்கு..
பலமான பின்னனி இசையால் இவருடைய இத்தகைய பாடல்கள் மத்திரமாய் வெளிப்பட்டு கொண்டிருந்தது.
டேய் ..அம்மனுக்கு நேரா ஆட்ட கட்டாத வீரன் சாமி கிட்ட கொண்டு போடா என்ற சத்தம் கேட்டு கொண்டிருந்தது.
1 comment:
அவங்கவங்க நம்பிக்கைதான் அவர்களை வாழ வைக்கின்றது.
Post a Comment