காங்கிரஸ் கட்சி இருக்குவரைக்கும் நாம்
உருப்புடமுடியாது. தகவல் தொடர்பு விரிவாக
இல்லாத காலங்களில் எந்த ஒரு திட்டத்துக்கும் மாநில அரசை குறைசொல்வது வாடிக்கை.
மத்திய அரசின் மாநில அரசுக்குரிய பங்களிப்புகள் பற்றி
ஊடகங்கள் வாயிலாக மக்கள் தெரிந்து கொண்ட
நிலைமையில் காங்கிரஸ் கட்சி பற்றி மக்களின் எண்ணம் தி்.மு.க. வை தமிழகத்தில் பெருத்த அடி கொடுத்து ஆட்சியை விட்டு இறக்கியது மாதிரி
காங்கிரஸை மக்கள் மத்தியில் இருந்துஇறக்க வேண்டும்.
அதே நேரத்தில் பா.ஜ.கட்சியினரின் ஒற்றுமையின்மை ஒரு பக்கம் பயத்தை விளைவித்து கொண்டிருக்க எப்படியோ
நரேந்திர மோடியை முன்னிலைப்படுத்தி பாரதீய ஜனதா கட்சி
தன்னை நிலைப்படுத்தி கொள்ள நினைக்கிறது.
மாநில
அரசியலில் நிர்வாகத்தில் தன்னை முனனிலைப்படுத்தி கொண்ட மோடி தேசிய அரசியலில் ஜொலிப்பாரா என்ற வினாவினையும் ஆச்சரியங்களையும் ஊடகங்கள்
பிரபலப்படுத்தாமல் இல்லை.
அதற்கு
ஒரே தீர்வு மக்களாகிய நாம் ஒரு வாய்ப்பு வழங்குவதை பொறுத்தே அமையும்.
அதற்குள்ளாகவே
தற்போதையதமிழக முதல்வரை பிரதமர்
நாற்காலிக்கு அழைத்து செல்ல வாய்வழியே
சில தலைவர்கள் உருவாகி கொண்டிருக்கிறார்கள்.
தமிழக
அரசின் பல திட்டங்கள் இன்னமும் முழுமையாக
தமிழகத்தை சென்றடையாமல்
இருக்க அ.தி.மு. க. ஆட்சியின் முழுபலனை இன்னும்
தமிழகமக்கள் அனுபவிக்கவில்லை. மாநில அரசியலே இன்னும் சரிப்படுத்த படாத
நிலையில் அவரை பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று சொல்வது எந்த வகையில் நியாயமோ
தெரியவில்லை.
தமிழக
மக்களின் மனபோக்கு அ.தி.மு.க. ஆட்சியில்
ஓ.கே. சொல்லுமளவிற்கு சென்று கொண்டிருக்கதமிழக மக்களை தன்பக்கம் திருப்ப தி்.மு.க. படாதபாடு பட்டு கொண்டிருக்கிறது
என்பது உண்மை.
தி.மு.க.
தலைவரின் வார்த்தை ஜாலங்கள் தமிழகத்தில் இனி எடுப்படுமா என்பது மில்லியன் டாலர்
கேள்விகள். ஏனென்றால் அவரது மயக்கும்
வார்த்தை விளையாட்டுகளில் மயங்க அவர்
வயதுகேற்ற ஆட்கள் தமிழகத்தில் மிகவும் கம்மி.
வரவிருக்கும்
லோக்சபா தேர்தல்களின் முடிவுகளில் தலைவர்களின் முகத்திரை கிழியும் வரை
காத்திருப்பது மக்களாகிய நம் கடமை.
No comments:
Post a Comment