அதிக
சம்பாதித்த உறவினர்களின் விசேடங்களுக்கு அவர்களதுஏழை உறவினன் செல்லும் போது அவர்களுக்கு கிடைக்கும் மரியாதை என்பது கோவில் அர்ச்சகர் பிரசாதத்தை
நம்கையில் அவர் கைப்பட்டு விடாமல் கொடுப்பது போன்றது.
அங்கு
அவர்களுக்கு கிடைக்குமரியாதை அவமரியாதை.
ஊருக்காக
உறவினன் பெயர்போட்ட அழைப்பிதழ்
ஆகா..மதித்து க்கொடுத்துவிட்டார்களே என்று இவன் விசேடங்களுக்கு ச்செல்ல உறவினனின் பராமுகம் புன்னகைமறந்த உதடுகள்.
உள்வெறி
கிளம்பும் நாமும் சம்பாதிக்க வேண்டும் மற்றவர்கள் செய்ததை நாமும் செய்துகாட்ட
வேண்டும் என்கிற துடிப்பு.
வாய்ப்பு
கிடைத்தவர்கள் வெற்றியாளராக கிடைக்கப்பெறாதவர்கள் இன்னமும் உறவினர்களின் பராமுக
அவமதித்தலுக்கு உள்ளாகவேண்டும்.
கிட்டதட்ட
நாகரீக உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து நம்தேவைகளை மற்றவர்கள் கவனிக்கும்விதமாக
ஊர் மெச்சும் வாழ்வு வாழ க்காசு தேவை.
ஆசைப்பட்டு த்தான் ஓடவேண்டும் தேவைகளை குறைத்தால் கஞ்சன் , கருமி பட்டங்கள் ஒட்டிக்கொள்வதில்
ஆச்சரியமில்லை.
தமிழருவிமணியன் பேச்சை கேட்கநேர்ந்ததுபேச்சின்முடிவில்
நாகரீக உலகில்
தேவைகளை அதிகரித்து க்கொண்டே செல்வது நாகரீகமல்ல தேவைகளை குறைத்து க்கொள்வதுதான் நாகரீகம் என்று சொன்னார்.
இச்சமுதாய ஓட்டத்தில் மணியன் கருத்தோடு முரண்படத்தான்
முடிந்தது.
ஒத்துபோதல் என்பது...!!???
No comments:
Post a Comment