அப்படி இப்படி குடும்பம் நடத்த ஆட்ட தூக்கி குட்டியில போட்டு குட்டிய தூக்கி ஆட்டுலபோட்டால் தான் முடியும்.
சரிதான் ஒன்யே நம்பிகிட்டே இருந்தாலும் கதைக்கு உதவாது இதுமனசோட பாடு ..கஷ்டபட்டு தான் ஆகனும் ஏதாவது முயற்சிப்போம் அறிஞ்சவங்க தெரிசவங்க கேட்டு இதெல்ல எறங்குன்னா எப்படி இருக்கும் அதுல்ல எறங்குன்னா எப்படி இருக்குமுன்னு கேட்டுகிட்டு எறங்குன்னா ஆத்துல ஒரு காலா சேத்துல ஒரு காலா நிக்க வேண்டியதா போக என்ன செய்ய சிவனேன்னு உட்காருவும் முடியில நிக்கவும் முடியல ஓடு ..ஓடு ..ஓடிக்கிட்டே இருந்ததான் நிக்கமுடியும் போலிருக்கு
நம்ம தெரிஞ்சு நம்ம நெலமையில நிம்மதியா இருந்தா தொல்ல இல்லதான். ரெண்டு வருச முன்னாடி என்னோட சேந்து சைக்கிள் மிதிச்சு சுத்துனான் இன்னிக்கு வண்டில போறான். அவனுக்கு இருக்குற வாய்ப்பென்ன கணக்கு கெடையாது வண்டில போறான் அது பெருசு.
தகுதி தெரியாம ஆசப்பட்டு மெனக்கெட்டு எதுவும் தெரியாம எறங்குன்னா கால ஒடிச்சு போடதான் செய்யும் என்ன செய்ய..
No comments:
Post a Comment