Wednesday, August 04, 2010

எந்த வேசி மவனோ ?



ஏன் சார்லஸ் கடைக்கு போவலையா?

இல்லீங்க சாமான் வாங்க வந்தேன்…சைக்கிள வச்சிட்டு சாமான் வாங்கிட்டு வெளில வந்து பாத்தா சைக்கிள காணோம்?

பூட்டு ன சைக்கிள ஒண்ணு  நிக்கது?

எந்த வேசி மவனே ா     எடுத்துட்டு போயிட்டாங்க அதான்  நின்னுகிட்டே  இருக்கேன்.

வாய் முனுகியது. அசிங்கமான வார்த்தைகளால் அர்ச்சனை நடந்தது.

வைத்த கடைக்கும் மறு கடைக்கும் நடந்தார். கோபம் பொங்க வாய் வார்த்தைகள் அள்ளி வீசி கொண்டிருந்தது.

பூட்டின சைக்கிள் அருகில் நின்று கொண்டு

ராஜா இது உங்க சைக்கிளா...

எங்க இது உங்க சைக்கிளா....

எண்ண    இது உங்க சைக்கிளா...

அருகில் நின்றவர்களிடம் விசாரித்தார். எல்லோரும் இல்லைஎன்று தலையாட்டினார்கள்.

சைக்கிள்  பூட்டியிருந்தது. மாத்தி எடுத்து சென்று விட்டார்கள் போல  பூட்டை உடைத்து எடுக்க வேண்டியது தான் என்று சொல்ல....

அரக்க பரக்க சிறுவன் பல் மருத்துவமனையிலிருந்து ஓடிவந்தான்.

ஏங்க என் சைக்கிள் பூட்ட உடைக்கினும் சொல்றீங்க என்று கேட்டபடியே வந்தான்.

இது உன் சைக்கிளா.... என்றப்படி இன்னும் வேகமாய் திட்ட ஆரம்பித்தார்.

அவர் என்ன செய்ய முடியும் நாள் ஒன்றுக்கு ரூ. 120  சம்பளத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார்.

ஏமாற்றமான முகத்துடன் கோபமாய்   திட்டி கொண்டே சென்றார் எல்லோருடைய பார்வையும் அவர்மேல் குவிந்திருந்ததை தவிர்க்கதான் முடியவில்லை.


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails