Tuesday, December 22, 2009

நாட்டு கோழி

பெரிய இடம் பேரனுக்கு பொறந்த நாள் கொண்டாடினாங்க. குறிப்பிட்ட ஒரு நூறு பேருக்கு வாழ்த்த இல்லீங்க சாப்பிடஅழைத்தார்கள்.

பிரியாணி தயிர்சாதம் இனிப்பு பச்சடி நாட்டு கோழி வறுவல் முட்டை சாப்பாட்டு வகையறா முடிவு செய்யப்பட்டு சமையல்காரர் சமைக்க தேடப்பட்டார்.

சொந்த ஊரில் நன்றாக பிரியாணி செய்பவரிடம் கேட்டார்கள். எப்பா நாலு மரக்கா பிரியாணி...ஒரு மரக்கா தயிர் சாதம்..பாக்கி வகையறா செய்யனும் எவ்வளப்பா கேட்டார்கள்.

சமையல்காரர் ஆயிரம் ரூபா கொடுங்க என்று கேட்க..

இந்தாப்பா நூறு ரூபா புடி வந்து பேசிக்குவோம் .

எப்பங்க சமைக்கனும் கரெக்டா ஞாயிற்று கெழம வந்துருப்பா..

சரிங்க என்று சமையல்காரர் அகல..

ஞாயிறு அன்று பிரியாணி சமைக்கப்பட்டு வீட்டுகாரரிடம் ஒப்படைத்துவிட்டு சமையல்காரர் கிளம்பினார்.

நான் வறேங்க...

எவ்வளோ வாங்கியிருக்க..

நூறு ரூபா கொடுத்தீஙக..

இந்தா பாக்கி நாலு நூறு மடித்து கொடுக்க..

சமையல்காரர் அதிர்ந்து என்னங்க..

வச்சுகப்பா போதும்.

அதெல்லாம் கட்டுபுடியாவது கொடுங்க என்று கேட்க.. ஏதோ வேணுமுன்னா நூறு குறைச்சிகிட்டு பாக்கிய கொடு சார்.

தெரிஞ்சவர் கூப்பிட்டா நீ என்னப்பா இந்தா மேலும் ஐம்பது கொடுக்கப்பட..

என்னமோ போங்க உழைக்கறவனுக்கு காலம் கெடையாது சார் ஏமாத்தறவனுக்குதான் காலம். இன்னம் கொடு சார் என்று கேட்க..

உன்ன வந்து கூப்பிட்டாருல அவர வரசொல்றேன் பேசிகி்ப்பா என்று நகர்ந்தார்.

காசு இருந்து என்ன பண்ண மனசு இல்லயே என்று மனதில் நினைத்தப்படி இடம் அகன்றார் சமையல்காரர்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails