போர்வை
இழுத்து மூடியப்படியே
படுத்துறங்கிய
அதிகாலை
விழிப்பு தட்டும்
ஒரு முகமாய்
எண்ணங்களால்
ஏதோ ஒரு
மந்திரம்
தியானம் செய்வதாய்
எண்ணங்கள்
தேய்ந்துதூக்கம்
திடீரென்று
விழித்தெழும்மனது
பதற்றமாய்
தன்னையே நொந்து
தொடர் நிகழ்வு
முயற்சியின்மை
தியானமாய்
தூக்கம்.
No comments:
Post a Comment