அவனுக்கு தெரியாது அன்றைக்கு அவனது குதிகால் எலும்புகள் உடையுமென்று தன் நண்பனுடைய வாகனத்தில் செல்லும் போது விபத்து ஏற்ப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்க்கப்பட்டான்.
மயகத்தில் இருந்தான் அதற்குள்ளாகவே வேண்டிய முதலுதவிகள் செய்யப்பட்டுபடுக்கையில் கிடத்தப்பட்டான்.
வீட்டில் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு
பதறி கொண்டு வந்தார்கள் . அவன்மேல் அளவுகடந்த வெறுப்பும் உருவானது.
நான்கு நாட்களாக வீட்டில் அவனிடம் சொல்லிவந்தார்கள். டேய் ...உன்னுடைய நடவடிக்கை சரியில்லை பார்த்து நடந்து கொள் என்று நடந்தே விட்டது இன்று.
நடுத்தர குடும்பம் அது. உழைப்புகேற்ற ஊதியம் அவர்களுடைய தொழில் உழைப்பு நின்றுவிட்டால் ஊதியமும் நின்றுவிடும்.
வருமானம் வருவதற்கு தகுந்தாற்போல் செலவு செய்யதது. வருமானத்திற்கு மீறி வந்த செலவுகள் கடனாய் நின்றது அதுவே பெரும் தொகையாக நிற்க இப்பொழுது இவனது செலவுகள் சேர்ந்துகொள்ள குடும்பம் திகைத்தது.
திடீர் விபத்தினால் இவன் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் இவனது குடும்பமும் சேர்ந்து பாதித்தது.
விபத்துகள் தவிர்க்க முடியாதவை என்றால் கஷ்டங்களும் தவிர்க்க முடியாதவையே. மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் நடக்க தயாரானது அந்த நடுத்தரகுடும்பம்.
துன்பங்கள் வெகுதூரமில்லை.
No comments:
Post a Comment