Friday, June 25, 2010

ஆத்ம சோதனை

செய்தது வீண் போகாது.

நல்லது நல்லது செய்யும்.

அவசரம் காரியத்தை கெடுக்கும்.

சுயநலம் நஷ்டத்தை கொடுக்கும்.

வாலிபத்தின் ருசி பின்னால் மனவேதனை தரும்.

உடலால் செய்த  பாவம் மனதில் புண்ணை  ஏற்படுத்தும்.

கர்வம் மரியாதையைப் போக்கும்.

மரியாதையை நாடுவதற்கு கர்வம் உதவாது.

நாம் செய்யும்  காரியம் நல்லது கெட்டது என்பதை ஒதுக்கிவிட்டு மீண்டும் தன்னை திரும்ப செய்யும்படி  தூண்டும்.பல சமயம் அது நல்லதாக இருக்கும் பலசமயம் அது கெட்டதாக  இருக்கும். ஆனால் செய்தது  மீண்டும் வரும்.

உணர்ச்சிக்குரிய கடமையை தவறினால் பின்னால்  அது உயிரை எடுக்கும் .

தவறான வழி பலன் தந்தால் பலனை பிறகு அனுபவிக்க வேண்டியவர்களஅழிவார்கள்.

இல்லாததை இருப்பதாக பேசினால் இருப்பதும் போய்விடும்.

சொந்த மகன் ஆனாலும் அவன் தவற்றை ஆதாரித்தால் அவனே  உனக்கு பெரிய  தவற்றை செய்வான்.

இலட்சியம் பெரியதானாலும் மனப்போக்கு சிறியதானால் பெரும் பலன் விலகும்.

(ஆத்ம சோதனை  தொடரும்)

1 comment:

VELU.G said...

ரசித்தேன்

LinkWithin

Related Posts with Thumbnails