Saturday, June 26, 2010

எல்லைகள் தெரியா எனது பயணம்




தூர கேட்கும் இடிமுழக்கம்
வினாடியில்
தோன்றி மறையும் மின்னல்

இதயம் சுமையாகிறது
ஊமையாய் அழுகிறேன்
இன்ப முழக்கம்
தூர கேட்கையில்
என்னுள் உந்தன்
வெளிச்சகீற்று

தேடுகிறேன்
மறைந்து விடுகிறாய்
எதிர்பார்க்கவில்லை
வந்து செல்கிறாய்

ஆழ்கடல் அற்புதம் காண
அடிகடல்  செல்ல
சோதனையால்  சோதனையாகி
தொடமுடியா தூரமாய்
என்னுள்ளே

துயரமாய்
எனது பயணம்
எல்லைகள் தெரியா
பாலைவனத்தின் இடையே
திரும்பவும்
உனை நோக்கி...

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails