Saturday, September 19, 2009

தான் வாழ காசு தேவை



வாழ்க்கைக்கு காசு தேவை . காசுக்கான போராட்டத்தில் அவன் அவனையே இழந்தான். சமுதாயத்தில் வாழ்க்கையை வசதிகளோடு தன்னிடம் காசு இருந்தும் காசு சேர்த்து கொண்டே இருப்பவர்கள் உண்டு.

தான் வாழ தன்னை உயிர்ப்பித்து கொள்ள வே காசு அவசியமானது. தனது முன்னோர்களால் ஒன்றும் ஆகாதபட்சத்தில் தன்னை இந்த சமுதாயத்தில் நிலை நிறுத்தி கொள்ள காசு தேவை. அதைப் பெற்று தன்னை நிலை நிறுத்தி கொள்வது என்பது எளிதான காரியம் அல்ல.

தன்னையே இழந்து நிறைய வேதனைப்பட்டு நிறைய உழைத்து தான் ஆக வேண்டும். அதற்கிடையே வாழ்க்கையில் ஏற்படும் அவமானங்களையும் அவமதிப்புகளையு ம் தன் உணர்வு எந்த மனிதானலும் ஏற்று கொள்வது மிகக்கடினமே. ஆனாலும் வாழ்ந்தாக வேண்டும். மனதுக்குள்ளே அழ வேண்டியது தான்.

அடிக்கடி விரக்தியின் எல்லைகளை தொட்டு விட்டு திரும்ப இருப்பவனை பார்த்து பார்த்து இருக்கும் நிலைமையும் கொடுத்துகொண்டு அவன் இன்னமும் காசுக்காய் அலைந்தப்படி..


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails