அப்பாவும் டிரைவர் மகனும் டிரைவர். அப்பாவும் குடிகாரர் மகனும் குடிகாரர். காசு இருக்கும் போது சிகெரெட் பிடிப்பார்கள் காசு வரத்து குறைந்தால் பீடி தான் இருவருமே..
அப்பா மகனிடம் அவ்வப்போது செலவுக்கு காசு இல்லாவிடில் பத்து இருபது என காசு வாங்கி கொள்வார்.
இதனாலயே பையன் தன் குடும்பத்திற்கு என செலவுக்கு பணம் கொடுக்க மாட்டான். அப்பாரையும் மதிப்பது கிடையாது.
ஒரு நாள் இரவு வீட்டினுடைய செலவிற்கு பணம் கொடுக்க மகனிடம் அப்பா சொல்ல..
முறைத்து பார்த்தான்மகன். என்னி்டம் பணம் இல்ல…
அப்புறம் நீ சம்பாதிக்கிறது எல்லாம் என்னாச்சு? அப்பா
அதான் அப்பப்ப நீ வாங்குறியே.. மகன்.
அவன் சொல்றது கரெக்ட்தான் இது அம்மா.
எடி.. பு..மவளே நீ என்னடி வக்காளத்து மூனு வேள சாப்பாடு நான் போடுறேன் . இவன் கிட்டபத்துருவா வாங்கினா கேள்வி கேட்க கூடாதா..
எல…… கோ… உங்கிட்ட மகன் அப்படின்ன தான் பத்துருவா வாங்குனா நீ என்னடா ரொம்ப ஓவரா பேசுற..
நானும் கஷ்டபடுறேன்டா நாய..
நீ போய்யா இங்கிருந்து என்று கணவனை விரட்டினாள் மனைவி.
போடி..போ..உம் மகனோட சேந்துகிட்டு நீ எக்கேடாவது கெட்டு போ என்று தள்ளாடிய படியே சைக்கிளை மிதித்தான் அந்த கணவன்.
இரவு பதினோரு மணி லேசாய் குளிர் காற்று வீசிக் கொண்டிருந்தது.
No comments:
Post a Comment