வயலில் வரப்பு
போடும் ஆளின்
எதிர்பார்ப்பு
பன்னிரெண்டு மணிக்கு
தேநீரும் பலகாரம்
வேலை முடித்தவுடன்
கையில் ஊதியம்
வாங்கி வராத
தேநீர் பலகாரத்திற்காக
எதிர்பார்ப்பில்
கரைந்த நிமிடங்கள்
வாயின் முனுமுனுப்பாய்
வெளிவந்த வார்த்தைகள்
கோபமாய்
வெயில் தகிக்க
வியர்வை வழிந்தோட
உழைப்பு
ஊதியமும் நாளைதான்
என்பதை அறியாது.
No comments:
Post a Comment