Friday, October 15, 2010

அறியாது


வயலில் வரப்பு
போடும் ஆளின்
எதிர்பார்ப்பு
பன்னிரெண்டு மணிக்கு
தேநீரும் பலகாரம்
வேலை முடித்தவுடன்
கையில் ஊதியம்
வாங்கி வராத
தேநீர் பலகாரத்திற்காக
எதிர்பார்ப்பில்
கரைந்த  நிமிடங்கள்
வாயின் முனுமுனுப்பாய்
வெளிவந்த வார்த்தைகள்
கோபமாய்
வெயில் தகிக்க
வியர்வை  வழிந்தோட
உழைப்பு
ஊதியமும் நாளைதான்
என்பதை அறியாது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails