ஒரு வாரமாவது நம்மசைடு பைப்ல தண்ணி வந்து பயங்கர கஷ்டமா இருக்கு.. நீங்க என்ன செய்வீங்களோ தெரியாது குடிக்கவாவதுதண்ணி தூக்கி குடுங்க என்று சொல்ல..
திருவாளர் குடத்தை தூக்கிகொண்டு கிணற்றடி நோக்கி நடந்தார். தெருவில் எல்லோருக்கும் ஆச்சர்யம் சில பேர் பார்த்ததுடன் சரி .. சில பேர் கேட்டார்கள்.
என்னது நீங்களுமா?
திருவாளர் ஏன் ? கேள்வியுடன் கிணற்றடி நோக்கி முன்னேறினார். திருவாளர் கிணற்றடி சென்றடைந்தவுடன் அங்கு அய்யராத்தம்மா ஒருவர் தண்ணி தூக்க வந்தார்.
ஏன்டாப்பா உன் ஆத்துகாரி வாரமாட்டாளோ நீ வந்துருக்க
என்று கேட்க ...
அப்போது தான் புரிந்தது திருவாளருக்கு ஆகா ...நம்ம ஏன் ?ஆச்சரியமாக பார்த்தார்கள் கேட்டார்கள் என்று
நினைத்தவாறு ,அது இல்லம்மா ஒருத்தருக்கு ஒருத்தர்
ஒத்தசையா இருந்துக்க வேண்டியது தான் என்று சொன்னவுடன்
ஆமான்டா கல்யாணம் ஆன பிறகு பொண்டாட்டி சொன்னா அப்படின்னு குடம் தூக்கினஇன்னிக்கு ....
இதுக்கு முன்னாடி ஒரு நாளவாது தூக்கினியடா என்று கேட்க..
சுருக்கென்று தைத்தது திருவாளருக்கு..ஆகா கல்யாணத்துக்கு முன்னாடி குடம் தூக்கமா விட்டாச்சே என்று நினைத்தவாறு நிலைமைய சமாளிக்க வேண்டுமே என்றகவலை . நீங்க வேற அப்ப அக்கா , தங்கச்சி இருந்தாங்க அதனால நாம செய்யல இப்ப யாரு இருக்கா அதனாலதான் நாம செய்யிற மாதிரி இருக்கு என்றவாறு நிரம்பிய நீர் குடத்தை தூக்கியவாறு நடையை கட்டினார்.
தனி மனிதவாழ்க்கை திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின் எவ்வளவு எடை போடப்படுகிறதே என்ற சிந்தனைக்குள்ளனார் திருவாளர்.
1 comment:
நீங்க தான் அந்த திருவாளரா (!!!????)
Post a Comment