தெய்வமாய் நீ
உந்தன் சிறப்பால்
எந்தன் சிறுமையின்
உயர்வு
எத்துனை சிறப்புகள்
உனக்கு
உன் நினைவதனில்
அமைதி தந்தவனே
தன் குழுந்தை
சோறு ஊட்ட
அம்மா சொல்லும்
கதைக்கு கருவாய்
வந்த நிலவா நீ
பனித்துளிகள்
பரிதவிக்க
காலையில் தோன்றும்
உதயமா நீ
எதுவாய் நீ?
எல்லாமும் நான்
எப்படிதான்
உனைப்பார்க்க
உனைப்பார்
நான் தெரிவேன் என்று
நீ சொல்ல
எனைப்பார்க்க
கொஞ்சம் உண்மை
கொஞசம் இரக்கம்
நிறைய குழப்பம்
நீங்காத அகங்காரம்
ஏடு படித்து
என்னுள் நீ என்பதை
நான் அறிய
என்னுள் நீ என்பதை
நான் உணர
வரும் நாள்
எந்நாளோ என்னவனே...
No comments:
Post a Comment