Tuesday, May 25, 2010

என்னில் நீ இருப்பதை அறிந்தும்



தெய்வமாய் நீ
உந்தன்  சிறப்பால்
எந்தன் சிறுமையின்
உயர்வு

எத்துனை சிறப்புகள்
உனக்கு
உன் நினைவதனில்
அமைதி தந்தவனே

தன் குழுந்தை
சோறு ஊட்ட
அம்மா சொல்லும்
கதைக்கு கருவாய்
வந்த நிலவா நீ

பனித்துளிகள்
பரிதவிக்க
காலையில் தோன்றும்
உதயமா நீ

எதுவாய் நீ?
எல்லாமும் நான்
எப்படிதான்
உனைப்பார்க்க

உனைப்பார்
நான் தெரிவேன் என்று
நீ சொல்ல

எனைப்பார்க்க
கொஞ்சம் உண்மை
கொஞசம் இரக்கம்
நிறைய குழப்பம்
நீங்காத அகங்காரம்

ஏடு படித்து
என்னுள் நீ என்பதை
நான்  அறிய

என்னுள் நீ என்பதை
நான் உணர
வரும் நாள்
எந்நாளோ என்னவனே...


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails