Sunday, February 15, 2009

ஏ கெழவி .. சாயம் நனைக்காத பூவா கொடு

காலை நேரம் பள்ளிகூட நேரம் நெருங்கிவிட்டதால் வீதியெங்கும் விதவிதமான சீருடைகளில் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள்.

கல்லூரி செல்லும் பெண்கள் இளைஞர்கள் வேலைக்கு ஆண்களும் பெண்களும் விரைந்தப்படி சூழலுக்கு தக்கவாறு அவர் அவர்களின் மனதில் எண்ணங்கள் ஓட தங்கள் இலக்கை நோக்கி பயணித்தார்கள்.

பை நிறைய அன்றைக்குவிற்கும் பூப்பந்துகளுடன் பூக்காரிதன்கடையை விரைவா க நடந்து வந்து கொண்டிருந்தாள்.

தன் கடையை அடைந்தவுடன் பையை கீழே வைத்துவிட்டு வாளியை எடுத்து கொண்டு தண்ணி கொண்டு வந்தாள்.

பைக்குள்ளிருந்த பச்சை நிற சாயப்புட்டியை எடுத்து வாளி தண்ணீரில் கலந்தாள் பையிலிருந்து ஒவ்வொரு பூப்பந்தாக எடுத்து பச்சை நிற சாயதண்ணியில் அமுக்கினாள் வெள்ளைநிற பூக்கள் பச்சை நிறம் பெற்றது.

ஏம்மா பத்து ரூபாக்கு பூ குடுங்க..என்றார் வாடிக்கையாளர்.

நெடுநேரமாய் பூக்கார கிழவியின் செய்கைகளை கவனித்த இளைஞன்

ஏ கெழவி .. சாயம் நனைக்காத பூவா கொடு அவுங்களுக்கு என்றான்.

கிழவி உடனே “ நல்ல துணி உடுத்துனா போற குட்டி உன்ன பாப்பா..

கொப்புறனா .. ஒப்பதன்னான்ன.. நேத்து சாயங்காலம் ஒரு பூப்பந்து நனைக்காம வைச்சுட்டேன் அந்த பூவ வேனான்னு சொல்றாங்க ..

நான் என்ன செய்ய என்றபடி தன்கடையை கவனித்தாள்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails