Friday, February 27, 2009

நம்முடைய நிம்மதி கெட நாம மட்டுமே காரணம் கெடையாதுங்க..

அவனுக்கு அது போதாத காலம் எது எடுத்தாலும் அவனுடைய எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப செயல் அமைந்ததே கிடையாது.

அவனுக்கு பெண் பார்த்தார்கள் அவனுடைய குடும்பத்தில் ஜாதகம் முக்கியம். அவருடைய ஜாதகத்தில் அப்பா அம்மா இல்லாத பெண் தான் முடிய வேண்டும். அப்பா அம்மா இருந்தால் சரியாக வராது என்று ஜாதகம் பார்த்தவர்கள் சொல்ல தேடினார்கள் நீண்ட தேடுதல்களுக்கு அப்புறம் ஒரு பெண்ணை ப்பார்த்தார்கள் மாப்பிள்ளைக்கு பிடிக்கவில்லை அந்த சம்மந்தம் வேண்டாம் என்று மறுத்து விட்டார்கள்.

அடுத்த ஒரு நீண்ட தேடல்மாப்பிள்ளைக்கு பெண்ணை பிடித்திருக்க நாங்களும் ஒரு தடவை ஜாதகம் பொருத்தம் பார்த்து விட்டு மேற்கொண்டு சொல்கிறோம் என்று மாப்பிளையின் ஜாதகத்தை வாங்கி சென்று அவர்களுடைய குடும்ப ஜாதகம் பார்ப்பவரி டம ் பார்க்க அவர் கொஞ்சம் பொறுத்து செய்யலாம் என்று சொல்ல மாப்பிள்ளை வேண்டாம் என நிராகரித்தார்கள்.

மாப்பிள்ளை படு அப்செட் இவர்கள் ஜாதகம் பார்த்த இடத்தில் செய்யலாம் என்று சொல்ல அவர்கள் பார்த்த இடத்தில் வேண்டாம் என்று சொல்ல இவர் நிம்மதியை தேடி கொண்டிருக்க மாப்பிள்ளை வீட்டில் பெண் தேடி கொண்டு இருக்கிறார்கள்.

நம்முடைய நிம்மதி கெட நாம மட்டுமே காரணம் கெடையாதுங்க..

1 comment:

MayVee said...

nalla padivunga.....
innum niraiye eluthunga

LinkWithin

Related Posts with Thumbnails